Total Pageviews

Showing posts with label "கேள்விக்கென்ன பதில்". Show all posts
Showing posts with label "கேள்விக்கென்ன பதில்". Show all posts

Saturday, October 28, 2017

29.10.17 “கேள்விக்கென்ன பதில்”

29.10.17 “கேள்விக்கென்ன பதில்”

தந்தி டீ. வியில் வரும் கேள்விக்கென்ன பதில்” என்ற நிகழ்ச்சியை தொடர்ந்து கூர்ந்து பார்த்து வருபவர்களில் நானும் ஒருவன். பொதுவாக தமிழக அரசியலைச் சுற்றியே பாண்டேயின் நிகழ்ச்சி அமைந்து வருகிறது. அதுதான் இன்றைக்கு நல்ல பொழுதுபோக்காக இருக்கிறது.

இதில், சமீப கால நேர்காணல்களில் நான் கவனித்ததில் பாண்டே கொஞ்சம் ‘ஸாஃப்ட்’டாகி விட்டாரோ என்ற ஒரு ஐயமும், மத்திய அரசாங்கத்தின் கொள்கைகளை எதிர்ப்பவர்களை மடக்குவதை ஒரு ‘ஸ்ட்ராட்டஜி’யாக வைத்துக் கொண்டிருக்கிறாரோ என்ற ஐயமும் எனக்கு எழுந்தது. தினத்தந்தியின் ஏதோ ஒரு முக்கிய விழாவுக்கு இந்திய பிரதமர் வரக்கூடும் என்று எங்கேயோ படித்ததாக ஞாபகம். அதன் பிரதிபலிப்போ என்னவோ.

அடுத்தடுத்து மெர்சலைப் பற்றி கேள்விக்கென்ன பதில் நேர்காணல். முதலில் எஸ். ஏ. சந்திரசேகரிடம் மடக்கி மடக்கி கேள்விகள். ரசித்தேன் (தோம்). தொடர்ந்து ஹெச். ராஜாவிடம் அதே  பாணியில் கேள்விகள். முகம் சுளித்தேன் (தோம்). ராஜாவுக்கு பல இடங்களில் கோபம் வருவதும் பதிலுக்கு பாண்டேவுக்கும் கோபம் வருவதும் இருவருடைய ‘டோன்’ கள் மாறுவதில் தெரிந்தது.

எவ்வளவோ பிரச்சினைகள் தமிழகத்தில் இருந்தாலும், அறிவுள்ள, நல்லெண்ணம் கொண்ட நல்ல மருத்துவர்கள், இஞ்ஜினியர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொது நலத் தொண்டர்கள், குடும்பத் தலைவர்கள், தலைவிகள் இருந்தாலும் அரசியலையும், பரபரப்பையும் மட்டுமே நம்பி கேள்விக்கென்ன பதில்” போன்ற நிகழ்ச்சிகளையே எல்லா சேனல்களும் ஒளிபரப்புவது வெறும் வியாபார நோக்கத்திற்காகத்தான். எப்படி இருப்பினும் தந்தி டீ. வியின் டீ. ஆர். பி ரேட்டிங்கை எங்கோ உயரத்துக்குக் கொண்டு போக பாண்டே உதவுகிறார் என்று நன்கு தெரிந்தது.

நானும் பணியிலிருந்து ஓய்வு பெற்றவன் என்ற வகையில் வேண்டிய அளவு நேரம் என் கையில் இருந்தாலும் பொதுவாக நான் டீ. வி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில்லை. தேவையில்லாமல் ரத்த அழுத்தத்தை ஏற்றிக் கொள்ள விரும்பவில்லை. கேள்விக்கென்ன பதில்” போன்ற நிகழ்ச்சிகளைக் கூட விளம்பரங்கள் இல்லாத யூடியூபில்தான் பார்க்கிறேன். டீ. வி முன் உட்கார்வதில்லை.


வருந்தத் தக்கது என்னவென்றால் (எனக்குத் தோன்றியது) படித்தவர்கள் அதிகம் இருப்பதும் தமிழ்நாடுதான். படித்தும் அவர்கள் படித்தது எந்தப் பயனையும் அவர்களுக்குக் கொடுக்கவில்லையோ என்ற ஐயத்தை ஏற்படுத்துவதும் தமிழ்நாடுதான்.