Total Pageviews

Showing posts with label Navrathri celebrations. Show all posts
Showing posts with label Navrathri celebrations. Show all posts

Saturday, September 13, 2014

நவராத்திரி சிறப்பு கர்னாடக சங்கீத இசை மேளா



இளைஞர்களையும் மாணவர்களையும் ஊக்குவிக்கும்  நோக்கத்தோடு எங்கள் எல்.என்.சேரிடபிள் டிரஸ்ட், மேலகரம், தென்காசி பல நிகழ்ச்சிகளை, போட்டிகளை நடத்தி வருகிறது. வருகிற நவராத்திரியின் போது சிறப்பு நிகழ்ச்சியாக மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கர்னாடக சங்கீத நிகழ்ச்சி நடக்க இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இதற்காக கடந்த ஒரு மாதமாக 15 குழந்தைகளுக்கு ஒரு இசை ஆசிரியரின் உதவியோடு பயிற்சி கொடுத்து வருகிறோம். எங்கள் முயற்சியால் சுமார் 30 மாணவர்கள் தென்காசியில் மிருதங்கம் பயின்று வருகிறார்கள். எங்களின் எல்லா முயற்சிகளிலும் சிறுவர், சிறுமியர்கள் மிக உற்சாகத்துடன் பங்கேற்று வருகின்றனர். இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக எங்கள் மிருதங்க மாணவர்களே ஒரு சில பாட்டுகளுக்கு மிருதங்கம் வாசிக்கப் போகிறார்கள். குழந்தைகளின் பெற்றோர்களுக்கும், எங்கள் முயற்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் நண்பர்களுக்கும் மிக்க நன்றி.

டீ.என்.நீலகண்டன்