Total Pageviews

Showing posts with label Italy. Show all posts
Showing posts with label Italy. Show all posts

Wednesday, January 06, 2016

"Hornet Flight" by Ken Follette

Just finished reading Ken Follett’s HORNET FLIGHT. (2002)

The story centers round the World War II, during 1941, the low point of the war. England throws wave after wave of RAF bombers across the English Channel, but somehow the Luftwaffe, the Nazi Germany’s Air Force is able to shoot them all down at will.

On a small Danish island across the North Sea, a bright eighteen-year-old boy with a talent for engineering, stumbles upon a secret German installation.

With England preparing itself for its largest aerial attack on Germany, they are looking frantically to find out the secret about Germany’s capability to guess England’s air attack in advance.

How the Danish teenager’s discovery is connected with the ultimate success of England’s war effort against Germany is the crux of the story.

When I started reading the book, initially I felt the story was dragging. However, as I kept reading the novel it began engrossing me all through, till the final page.

The story is a suspenseful depiction of what a teenager can accomplish despite all odds.

One appreciable feature about many English novels is that a lot of research goes into while writing them and this book is not an exception. (I had tried to emulate this practice while writing my novel: WHAT IF OUR DREAMS COMETRUE! I had traveled to several towns and villages along the banks of the River Tamirabarani, and I had read a number of books, reports, blogs, websites about the river and its plains, while writing this novel.) There are elaborate descriptions about the Hornet Moth plane of those years and about how the flight could be repaired and operated by someone who has sufficient inquisitiveness about the engineering aspects of an air-plane. I had continuously visualized every scene clearly as I kept reading the book.

The broad descriptions about Copenhagen, the capital of Denmark and its islands kindles in me an interest to visit places like Denmark, Sweden and Norway. During the earlier years, reading Dan Brown’s INFERNO spurted a sudden interest in me to visit Florence in Italy, and eventually, in the next few months during early 2013, I landed in Italy on my way from India to USA. I had a wonderful eight days sight-seeing trip inItaly hopping from Rome to Naples, to Florence, to Venice and back to Rome. Let me hope, I get to visit Denmark too, soon.


Overall, quite a captivating novel by Ken Follett.
******************************************************
You felt interested?

Do you want to read my books?
Lonely
What If Our Dreams Come True!

Look for them in www.pothi.com for print version
"What, If Our Dreams come True" is also available on www.amazon.com for kindle reading

My other works:
Short Stories for Young Readers - Book 1
Short Stories for Suceess for Young Readers - A New Lexicon Unfolded
Short Stories for Young Readers - For Personality Development - Book 1

Write to me for availability of my books: neelkant16@yahoo.com


Tuesday, May 06, 2014

My Italy Tour, March 2014: Final Part

எனது இத்தாலி பயணம்இறுதிப் பகுதி 6
நாள்: 9
எங்கள் இத்தாலி நாட்டுப் பயணத்தின் கடைசி நாள். காலை ஆறேகால் மணிக்கு வெனிஸிலிருந்து ரோமுக்கு ரயில் டிக்கெட் வாங்கியிருந்தோம். சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பாதுகாப்பான இடம்தான் என்பதை மீண்டும் மீண்டும் ஹோட்டல் வரவேற்பில் உறுதி செய்துகொண்ட பிறகு காலை ஐந்தரை மணிக்கு மென்மையான குளிருக்கூடே ரயில் நிலையத்துக்கு நடந்தோம். மெல்லிய பனிமூட்டம் இருட்டை அதிகப்படுத்தியிருந்தது. தெருவிளக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக மினிக்கிக் கொண்டிருந்தது. சிறிது தூரம் நடந்தால் ஒரு கேஃப்டேரியா திறந்திருந்தது. சுடச்சுட காஃபி கிடைத்தது. கையில் வாங்கிக்கொண்டு ரயில் நிலையம் வந்து சேர்ந்தோம்.

நாங்கள் பயணம் செய்த ரயில் FRECCIARGENTO என்ற வகுப்பைச் சேர்ந்தது. அதிக பட்சமாக 250 கிலோமீட்டர் வேகத்தில் எந்தவிதமான குலுக்கலுமில்லாமல் பறந்தது. நடுநடுவே பல ரயில்  நிலையங்களில் நிறுத்தம் இருந்தது. ஒன்பதரை மணிக்கு ரோம் வந்து சேர்ந்தது. ரயில் நிலையத்தின் வாசலிலேயே பஸ் நிறுத்தமும் கூட. ரயில் நிலையத்திலேயே ஒரு கடையில் பஸ் டிக்கட் வாங்கிக்கொண்டோம். ஹோட்டல் எதிரிலேயே இருந்த பஸ் நிறுத்தத்தில் இறங்கிக்கொண்டோம். ஹோட்டலின் வரவேற்பரையில் எங்கள் சாமான்களை விட்டுவிட்டு, ரோம்  நகரில் விட்டுப்போன இடங்களை சுற்றிப் பார்க்கக் கிளம்பினோம்.

ஹோட்டலின் பின் பக்கத்தில் ஒரு பத்து  நிமிடம் நடந்தால் மிக விஸ்தாரமான பியாசா நுவோனோ (PIAZZA NUONO) – பெரிய செவ்வக வடிவமான ஒரு கூடம். சுற்றுலாப் பயணிகள் சாரை சாரையாக கூடிக்கொண்டிருந்தனர். மத்தியில் நான்கு முக்கிய நதிகளின் நீரூற்று (FONTANA DEI QUATTRA FIUMI – Fountain of Four Rivers) 1651-ல் பெர்னினி என்ற பிரபல கட்டிடக் கலைஞரால் பத்தாவது இன்னொஸென்ட் போப்பின் அரண்மனக்கு எதிராக வடிவமைக்கப்பட்டது. ஆப்பிரிக்காவின் நைல், யூரோப்பின் டேன்யூப், இந்தியாவின் கங்கை மற்றும் தென் அமெரிக்காவின் பளாட்டா நதிக் கடவுள்களை குறிக்கும் இந்த நீருற்றை சுற்றி சுற்றுலாப் பயணிகளின் கூட்டம்.

 
 
அங்கங்கே கேளிக்கைக்காக மேஜிக் காட்டுபவர்கள். ஒருவர் அந்தரத்தில் யோகாவில் உட்கார்ந்திருந்தார். இன்னொருவரின் தலை கழுத்தைவிட்டு துண்டாக அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்தது. எப்படி இந்த மேஜிக்கை அவர்கள் செய்திருப்பார்கள் என்று இன்று வரை புரியவில்லை.

அங்கிருந்து இன்னொரு ஐந்து நிமிட தூரத்தில் மிகப் பிரபலமான பேந்தியன். (PANTHEON) எல்லாக் கடவுள்களுக்குமாக கட்டப்பட்ட இந்தக் கோவில் கி.மு 27 – கி.பி 14 காலங்களில் அகஸ்டஸ் என்ற மன்னரின் ஆணையில் முதலில் கட்டப்பட்டு, பிறகு கி.பி 126-ல் ஹேட்ரியான் பேரரசரால் மீண்டும் கட்டப்பட்டது. (இதே போன்ற ஒரு பேந்தியன் கோவிலை அமெரிக்காவில் டென்னிஸி மாநிலத்தின் தலைநகரமான  நேஷ்வில் (NASHVILLE) என்ற இடத்தில் பிரம்மாண்ட வடிவில் கட்டியிருக்கிறார்கள்)
வட்ட வடிவமான இந்தக் கோவிலின் முகப்பில் கிரானைட் கற்களாலான எட்டு தூண்கள் முன் வரிசையிலும், நான்கு நான்காக அதன் பின் பக்கத்தில் இன்னும் எட்டு தூண்களும் தாங்கிக்கொண்டிருக்கின்றன. 142 அடி உயரமுள்ள கான்க்ரீட்டினால் கட்டப்பட்ட வட்ட வடிவமான மேற்கூரையின் மத்தியில் வானம் தெரிகிறார் போல மாதிரி ஒரு வாசல். ஆயிரம் ஆண்டுகளாக இந்தக் கட்டிடம் மிடுக்கோடு இன்றும் நின்று கொண்டிருக்கிறது. இதைப் பார்த்தபின்பு மனதில் ஒரு வருத்தம். நமது தமிழ்நாட்டில் பல ஊர்களில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இன்னும் கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் பல கோவில்களைப் சுற்றிப்பார்ப்பதற்கு எத்தனை சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர் என்பதை நினைத்துப் பார்த்தேன். சுற்றுலாவுக்காக நாம் ஒன்றுமே செய்வதில்லையோ என்றுதான் தோன்றுகிறது, நமது பண்டைய கலாச்சாரத்தை, நாகரீகத்தை, கலைவளத்தை வெளிப்படுத்தும் பல விஷயங்களைப் பற்றி நாம் அதிகமாக தெரிந்துவைத்துக் கொள்வதுமில்லை, மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துவதுமில்லை. முக்கியமாக நமது வீட்டில் குழந்தைகளுக்குச் சொல்வதுமில்லை.  

பேந்தியனிலிருந்து நேராக இம்மானுவேல் நினைவு மண்டபத்துக்கு (இன்றைக்கு ஒரு போர் நினைவுச் சின்னமாகத் திகழ்கிறது) நடந்தோம். ஒரு அரை மணி நேர தூரம். பியாஸா வெனிஸியாவுக்கும் கேபிடோலின் குன்றுக்கும் நடுவே அமைந்திருக்கும் இந்த கட்டிடம் ஒன்றிணைக்கப்பட்ட இத்தாலியின் முதல் மன்னரான இரண்டாம் விக்டரின் நினைவாகக் கட்டப்பட்டது. முழுவதும் வெள்ளை சலவைக் கற்களால் கட்டப்பட்ட இந்த அரண்மனையின் முகப்பு மிகமிக பிரம்மாண்டமாக தூரத்திலிருந்தே தெரிகிறது. 440 அடி அகலம் 230 அடி உயரம். 1885-ல் ஜோஸஃப் சக்கோனி என்பவரால் வடிவமைக்கப்பட்டு 1925-ல் மிகச் சிறந்த இத்தாலிய நிபுணர்களால் கட்டி முடிக்கப்பட்டது. புராதன சின்னமான கேபிடோலின் குன்றின் பல இடங்களை இந்த மண்டபம் விழுங்கிவிட்டதாக குறை கூறுபவர்களும் நிறைய உண்டு.  


அதன் பிறகு, கேபிடோலின் ம்யூசியம் பார்ப்பதற்குச் சென்றோம். இன்னும் சற்று தூரம் நடை. மைக்கேல் ஏஞ்செலோவால் 1536-ல் வடிவமைக்கப்பட்ட இந்த சதுரத்தை கட்டி முடிப்பதற்கு சுமார் 400 ஆண்டுகள் எடுத்திருக்கிறது. கணக்கிலடங்காத அளவுக்கு பழங்காலத்து ரோமர்களின் சிலைகள், சிற்பங்கள், ஓவியங்கள், நகைகள், விலை மதிக்க முடியாத ஆபரணக் கற்களை இங்கே பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு சிலைக்கும், சிற்பத்திற்கும் அருகில் நின்று மணிக்கணக்காக நேரத்தை செலவிடலாம். எல்லாம் நேர்த்தியான சலவைக் கற்கள்.
சில சிற்பங்களின் அருகே செல்ல விடுவதில்லை. சில இடங்களில் ஃபோட்டோ எடுப்பதற்கும் அனுமதியில்லை. ஆனாலும், திருட்டுத்தனமாக எல்லோரும் ஃபோட்டோ எடுக்கிறார்கள். மார்க்கஸ் ஆரேலியஸ் (MARCUS AURELIUS) என்ற பேரரசரின் வெண்கலச் சிலை இங்கு ஒரு முக்கியமான சிலை. இதன் நகலை ம்யூசியத்தின் நுழைவில் வெட்டவெளியில் வைத்திருக்கிறார்கள். பழைய ரோமர்கள் காலத்தின் பல சிற்பங்களை மத விரோத காரணமாக மத்திய காலங்களில் அழித்து விட்டதாகப் படித்தேன்.  கிறிஸ்துவ மதத்தை ரோமர்களின் அங்கீகரிக்கப்பட்ட மதமாக ஏற்றுக்கொண்ட கான்ஸ்டன்டைன் என்ற மன்னரின் சிலை என்று நினைத்து, இந்த மார்க்கஸ் ஆரேலியஸின் சிலையை விட்டு வைத்திருக்கிறார்கள். சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலேயே இந்த ம்யூசியத்துக்குள்ளே நடந்து கால்கள் கெஞ்சின.

சிறிது நேரம் அங்கங்கே உட்கார்ந்து ஓய்வெடுத்துக்கொண்டு மீண்டும் ஹோட்டலுக்கு நடந்தோம். நான் ஏற்கெனவே சொன்ன மாதிரி ரோம் நகரை மட்டும் பார்ப்பதற்கு ஒரு வாரத்துக்கு மேலேயே பிடிக்கும். ஒரு சில முக்கியமான இடங்களைப் பார்க்க முடியவில்லை.

ஸ்பெயின் படிக்கட்டுகள் (SPANISH STEPS)

ஸிஸ்டைன் சேப்பல் (SISTINE CHAPEL)

பியாஸா டெல் போப்போலோ (PIAZA DEL POPPOLO)

பியாஸா டெல் ரிபப்ளிக்கா (PIAZA DEL REPUBLICA) (பஸ்ஸில் போகும் பொழுது பார்த்ததுதான்)
போர்கீஸ் வில்லா (VILLA BORGHESE AND BORGHESE GARDEN)

புனித ஏஞ்செலோவின் கோட்டை (CASTLE SANT ANGELO)
பல பழமையான கிறிஸ்துவக் கோவில்கள் (BASCILLICA)

முடிந்தால் இன்னொரு முறை இத்தாலிக்கு வரலாம்தான். பத்தாவது நாள் மதியம் பன்னிரண்டு மணிக்கு எங்களுக்கு லண்டன் வழியாக சிகாகோ நகர் செல்வதற்கு விமான டிக்கெட் இருந்தது. நிறைய பணம் செலவழித்து இத்தாலியை ஒரளவு பார்த்து முடித்த திருப்தியோடு விமானம் ஏறினோம்.
முடிவுரை

ஊர் ஊராகச் சுற்றுவதில் எனக்கு மிகவும் விருப்பமுண்டு. இந்தியாவில் என் வேலை நிமித்தமாக பல இடங்களுக்கு மாற்றப்பட்டு ஊர் சுற்றியிருக்கிறேன். இந்தியாவில் பார்க்காத இடங்கள் மிகக் குறைவு. வெளிநாடுகளில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, சுவிட்சர்லாந்து, இப்பொழுது இத்தாலி பார்த்திருக்கிறேன். இன்னும் பல இடங்களுக்கு போக வேண்டும் என்ற ஆசை இருந்துகொண்டே இருக்கிறது. பல இடங்களைப் போய் பார்ப்பதற்கு எனக்கு வசதி ஏற்படுத்திக்கொடுத்த இறைவனுக்கு மிக்க நன்றி. இன்னும் பல இடங்களை தொடர்ந்து பார்ப்பதற்கான ஆரோக்கியத்தையும் வசதியையும் கொடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. எல்லா பெருமையும் இறைவன் ஒருவனுக்கே.

இந்தத் தொடரை முடிப்பதற்கு முன், ஒரு சிறிய குறிப்பு: நான் ஏற்கெனவே சென்று வந்த YELLOW STONE NATIONAL FORESTS/GRAND TITON NATIONAL FORESTS, ALASKA, SWITZERLAND இடங்களைப் பற்றி ஆங்கிலத்தில் என்னுடைய BLOG-ல் எழுதியிருக்கிறேன். வெகு சிலர் மட்டுமே படித்திருக்கிறார்கள். ஆனால், இத்தாலியைப் பற்றி நான் தமிழில் எழுதியதை உலகில் பல இடங்களிலிருந்து, முக்கியமாக அமெரிக்கா, யூரோப், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவிலிருந்து மிக அதிக மக்கள் படித்திருக்கிறார்கள். ஆங்கிலத்தில் எழுதினால் மக்கள் படிப்பதில்லையோ என்று தோன்றுகிறது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று எனக்குச் சொன்னால் எதிர்காலத்தில் எழுதுவதற்கு ஊக்கமாக இருக்கும். கண்டிப்பாக உங்களுடைய கருத்தை எதிர்பார்க்கிறேன்.

இப்படிக்கு

டீ.என்.நீலகண்டன்
www.tnneelakantan.com
 

 

Sunday, April 27, 2014

My Italy Tour - Part 5: Venice

எனது இத்தாலி பயணம் – பகுதி 5: வெனிஸ்

                                      


நாள் 7

முந்திய இரவே கட்டி வாங்கிக்கொண்ட எங்கள் காலை உணவையும் சுமந்துகொண்டு வெனிஸ் நகரத்தைப் பற்றி பலவிதமான கற்பனைகளுடனும் எதிர்பார்ப்புகளுடனும் அன்று காலை, வெனிஸ் செல்வதற்கு ரயில் ஏறினோம். ஃப்ளோரென்ஸின் அனுபவங்கள் மனதை சந்தோஷப்படுத்தியிருந்தன.

கடல் தண்ணீருக்கு நடுவில் மிதக்கும் வெனிஸ் நகரை முதன் முதலாக திரையில் ராஜ்கபூரின் ‘சங்கம்’ ஹிந்தி படத்தில் பார்த்ததாக ஞாபகம். வெனிஸிலுள்ள கட்டிடங்கள் எல்லாம் எப்பொழுது வேண்டுமானாலும் தண்ணீர் அரக்கனால் மூழ்கடிக்கப்படலாம் என்று பயப்படும் நகரம். கார், சைக்கிள், என்று எதுவும் தெருக்களில் ஓடாத நகரம். இத்தாலியின் வடகிழக்கு பகுதியில், அட்ரியாடிக் கடலின் (ADRIATIC SEA) வளைகுடாவில் (BAY) 118 தீவுகளுக்கிடையே, 177  கால்வாய்களால் பிரிக்கப்பட்டும் 409 பாலங்களால் இணைக்கப்பட்டும் வெனிஷியன் லகூனில் (VENETIAN LAGOON) அமைந்துள்ளது இந்நகரம்.. இத்தாலியின் வெனிடோ என்றழைக்கப்படும் பகுதியின் தலை நகரமும் ஆகும்.

பண்டைய காலங்களில் வெனிஸ் ஒரு குடியரசு நாடாக இருந்தது. கடல் வாணிபத்துக்கும், கப்பல் மாலுமிகளுக்கும் பெயர் பெற்றிருந்தது. 12–13-ஆம் நூற்றாண்டின் உலகப்புகழ் பெற்ற மாலுமியான மார்கோ போலோவுடைய ஊரும் இதுதான்.

தண்ணீரில் அழுகாத ஆல்டர் (ALDER) என்ற மரக்கட்டைகளை ஆழ் துளைகளில் (PILES) செலுத்தி அதன் மீது அஸ்திவாரத்தை நிற்க வைத்து கட்டிடங்களைக் கட்டியிருக்கிறார்கள்.. உயர்ந்த கடல் அலைகள் இந்நகரத்தின் பல பகுதிகளில் அடிக்கடி புகுந்து சேதம் விளைவித்திருக்கின்றன.

கி.பி 827-ல், பைசன்டைன் கோமகன் (BYZANTINE DUKE) தன்னுடைய தலைமையிடத்தை ரியால்டோ (RIALTO) என்கிற வெனிசின் ஒரு பகுதிக்கு மாற்றினார். ரோமர்களின் பாணியில் ஏற்படுத்தப்பட்ட சட்டசபைக்கு டோகே (DOGE) என்றழைக்கப்பட்டவர்கள் தலைமையில் வெனிஸின் வாணிபம் தழைத்தோங்கியிருக்கிறது. 1797-ஆம் ஆண்டு மே, 12-ஆம் தேதி ஃப்ரென்ச் பேரரசர் நேபோலியன் போனபார்ட் வெனிசைக் கைப்பற்றிய பின்பு இந்நகரம் ஃப்ரான்ஸ், ஆஸ்திரியா, இத்தாலி இந்த மூன்று நாடுகளின் கட்டுப்பாட்டுக்குள் மாறி மாறி பந்தாடப்பட்டிருக்கிறது.

மெஸ்த்ரே (MESTRE) என்கிற ரயில் நிலையம்தான் தரைப்பகுதியின் கடைசி நிலையம். அதைத் கடந்தால் கடல் தாண்டி வெனிஸ் நகரத்துக்குள் ரயில் சென்றடைகிறது. ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்து எதிரே தொட்டார்போல் இருந்த கால்வாயைப் (CANAL) பார்த்த பொழுது உடம்பு புல்லரித்தது. நாங்கள் கற்பனை செய்ததற்கும் மேலேயே வெனிஸ் நகரம் முதல் பார்வையிலேயே எங்களை கவர்ந்துவிட்டது.

ஒவ்வொரு நாளும் ஐம்பதினாயிரம் சுற்றுலாப் பயணிகளுக்கு மேல் இந்நகரத்துக்கு வருகிறார்கள். நவநாகரீகத்துக்கு பெயர்பெற்ற இந்த ஊருக்கு வந்து விலையுயர்ந்த விடுதிகளில் தங்கி,  நேரத்தை போக்குவது என்பது பல பெரிய பணக்காரர்களுக்கு ஒரு பொழுதுபோக்கு.

வெனிஸ் நகரில் கலை, நாட்டியம், நாடகம், இலக்கியம் வளர்ந்திருக்கிறது  ஷேக்ஸ்பியரின் ‘MERCHANT OF VENICE’ பிரபல நாடகம் ஞாபகம் இருக்கலாம்.

நாங்கள் முன்பதிவு செய்திருந்த ஹோட்டல் மற்ற இடங்களைப்போலவே மிக அருகாமையிலேயே இருந்தது. செக்-இன் செய்யக்கூடிய நேரம் 12 மணிக்கு மேல்தான் என்பதால், எங்களுடைய சாமான்களை ஹோட்டல் வரவேற்பிலேயே விட்டுவிட்டு ஊர்சுற்றக் கிளம்பிவிட்டோம். இந்த ஹோட்டலில் லிஃப்ட் கிடையாது என்பதால், முதல் மாடியிலேயே அறை ஒதுக்கச் சொல்லி கேட்டுக்கொண்டோம்.

ஹோட்டலின் எதிரிலேயே சிறிய கால்வாய் (CANAL). கால்வாயின் எதிர்புறத்தில் படகு நிற்கும் நிறுத்தம். பயணிகளையும், சரக்குகளையும் ஏற்றிச்செல்லும் படகுகள் அடிக்கடி குறுக்கே போய்கொண்டிருந்தன. ஊருக்குள் சுருக்கமாக எங்கு போக வேண்டுமானாலும் படகுதான், இல்லையென்றால் விறு, விறுவென்று பல குறுகிய தெருக்களுக்கூடே நடக்கவேண்டியதுதான். அங்கங்கே கால்வாயில் பஸ் நிறுத்தம் போல் படகு நிறுத்தங்கள் இருக்கின்றன. ஒரு முறை பயணிப்பதற்கு எட்டு யூரோக்கள். ஒரு நாள் முழுவதும் எங்கு வேண்டுமானாலும் பயணிக்க பதினெட்டு யூரோக்கள். புனித மார்க்க்கின் சதுரம் (ST.MARK SQUARE) வெனிஸில் மிக முக்கியமான இடம். அங்கே செல்வதற்கு அருகிலுள்ள நியூஸ் பேப்பர் கடையில் டிக்கட் வாங்கிக்கொண்டோம். . ஆனால் யாரும் எங்களிடம் டிக்கெட் இருக்கிறதா என்று பரிசோதிக்கவில்லை.

கோண்டோலா (GONDOLA) இந்த ஊர் படகின் பழமையான பெயர். இந்த கோண்டோலாவில் ஒரு அரை மணி நேரம் படகோட்டி பாடிக்கொண்டே உங்களை அழைத்துப் போவதற்கு ஐம்பது யூரோக்களுக்கும் மேலேயே வாங்கிக்கொள்கிறார்.

சிறிய கால்வாய் வழியே சிறிது தூரம் சென்ற பிறகு, திருப்பிப்போட்ட S வடிவம் கொண்ட, நான்கு மைல் நீளமுள்ள பெரிய கால்வாயில் (GRAND CANAL) படகு நுழைந்தது. இரு புறமும் கட்டிடங்கள், விடுதிகள், அலுவலகங்கள், நடைபாதைகள். 


முக்கியமாக, வளைவான நுழைவாயில்களைக் (ARCHES) கொண்ட ஃபோன்டாகோ வீடுகளைப் (FONTACO HOUSES) பற்றிச் சொல்லவேண்டும். இவை வியாபாரிகளின் வீடுகளாகவும் தங்கள் சரக்குகளை பத்திரப்படுத்தி வைக்கும் கிடங்குகளாகவும் கட்டப்பட்டிருக்கின்றன. முன் வாசலில் படகிலிருந்தது சரக்குகளை இறக்குவதற்கு வசதியாக போர்ட்டிகோ அமைந்திருக்கிறது. இவைகளைத் தவிர, பதினைந்தாம் நூற்றாண்டின் அழகான பல அரண்மனைகள். 

படகு பயணம்  இனிமையாகவே இருந்தது. ஒரு மணி நேரத்துக்கு  பெரிய கால்வாயை சுற்றிப் பார்க்கும் டூர்களுக்கு ஐம்பது யூரோக்களுக்கு மேல் கட்டணம். அதற்கு தேவையில்லாமல் போனது.

பல நிறுத்தங்களைத் தாண்டி, புனித மார்க்கின் சதுரத்தில் இருந்த படகுத்துறையில் இறங்கிக்கொண்டோம். பெரிய கால்வாயின் எதிர்புறத்தில் பனிமூட்டத்துக்கிடையே பிரம்மாண்டமாக தோற்றமளித்தது தூரத்திலிருந்த புனித மேரியின் கோவில் (SANTA MARIA Della SALUTE).

புனித மார்க்கின் சதுரம் சுற்றுலாப் பயணிகள் ஒட்டு மொத்தமாக கூடும் ஒரு பெரிய கூடம். பியாஸா சேன் மார்கோ (PIAZAA SAN MARCO) என்று இத்தாலியில் அழைக்கிறார்கள். மத்தியில் புனித மார்க்கின் கோவில் (BASCILLICA என்கிற CHURCH). 

முன் பக்கத்தின் மூன்று புறங்களிலும் பெரிய வளைவுகளுடன் கூடிய நுழைவாயில்களைக்கொண்ட உயர்ந்த கட்டிடங்கள். கோவிலின்  நுழைவாயிலின் மேற்கூரையில் இருந்த நான்கு குதிரைகள் சரித்திரப் புகழ்பெற்ற அடையாளங்கள்.  

கோவிலின் ஒரு புறம் பிரபலமான மணிக்கூண்டு.


எதிர்புறத்தின் ஒரு பக்கத்தில் புனித மார்க்கின் கோவிலின் கம்பெனைல் (ST.MARK CHURCH’S COMPANILE) என்றழைக்கப்படும் உயர்ந்த கோபுரம். அங்கங்கே உணவு விடுதிகள். அவற்றின் முன்னே அழகான வர்ணங்களில் வெட்ட வெளியில் இடப்பட்டிருந்த இருக்கைகள். இன்னொரு பக்கம் இசைக்குழுக்கள் பல வாத்தியங்களில் இன்னிசையை இலவசமாக வழங்கிக்கொண்டிருந்தன.

 
 

வெண் புறாக்கள் இங்கும் அங்குமாக சுற்றுலாப் பயணிகள் அளித்த பல உணவுகளுக்காக பறந்து திரிந்துகொண்டிருந்தன. இன்னொரு உலகத்துக்கே வந்தது போல் இருந்தது.

முரானோ, புரானோ மற்றும் டார்செலோ (MURANO, BURANO AND TORCELLO) என்ற மூன்று தீவுகளைச் அடுத்த நாள் படகில் சுற்றிப் பார்ப்பதற்காக நாங்கள் முன்பதிவு செய்திருந்தோம். ஆனால், அடுத்த நாள் படகோட்டிகள் வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாக அறிந்தோம். அதனால், அந்த பயணத்தையும் அன்றே முடித்துவிடலாம் என்ற எண்ணத்துடன் அருகிலுள்ள அலிலாகுனா (ALILAGUNA) என்ற படகுத்துறைக்கு சென்று எங்கள் டிக்கெட்டை மாற்றிக்கொண்டோம். மதியம் இரண்டு மணிக்கு அந்த சுற்றுலா கிளம்புவதாக கூறினார்.

நாற்பத்தைந்து நிமிட படகுப் பயணத்துக்குப் பின் எங்கள் படகு ஒன்றரை மைல் தூரத்திலிருந்த முரானோ என்ற தீவில் நின்றது. வண்ண வண்ண வேலைப்பாடுகள்  கொண்ட கண்ணாடி பொருட்கள் தயாரிக்கும் பல தொழிற்சாலைகள் நிறைந்தது இந்த தீவு. அப்படி ஒரு தொழிற்சாலைக்கு எங்களை அழைத்துக் கொண்டு போனார்கள். கால்களைத் தூக்கிக்கொண்டு நிற்கிற ஒரு குதிரையை கிறிஸ்டல் கண்ணாடியில் ஐந்து நிமிடத்தில் செய்துகாட்டினார்கள். விற்பனைக்கு பார்வைக்காக வைத்திருந்த கண்ணாடிப் பொருட்களெல்லாம் எக்கச்சக்க விலை.
 



அடுத்ததாக டார்செலோ என்ற இயற்கையாக அழகான தீவுக்கு அழைத்துப் போனார்கள். கொஞ்ச தூரம் நடந்து சென்றால் ஒரு பழைய சர்ச். அதை சுற்றியுள்ள இடங்களைப் பார்த்தோம்.

அதற்கும் அடுத்ததாக புரானோ என்ற தீவு. இங்கு லேஸ் ஒர்க்ஸ் (LACE WORK) என்ற நுண்ணிய கைவேலைப்பாடுகள் கொண்ட துணிமணிகள், ஆடைகள், மேசை விரிப்பு கள், சுவரில் தொங்கவிடப்படும் துணிகள், திரைகள் போன்றவற்றை தயாரிக்கிறார்கள்.  ஒவ்வொன்றும் யானை விலை, குதிரை விலைதான்.



மாலை ஆறு மணிக்கு மீண்டும் அலிலாகுனா படகுத்துறைக்கு திரும்பினோம். பல சந்து பொந்துகளின் வழியாக நடந்து மீண்டும் எங்கள் விடுதிக்கு வந்து சேர்ந்தோம். இந்த குறுகிய சந்து பொந்துகளைத்தான் ரோடு என்றழைக்கிறார்கள். வழியில் பளிச் பளிச்சென்று விளக்கொளியில் ஜொலித்த கடைகளை பராக்கு பார்த்துக்கொண்டே வந்தோம். வீதியோரக் கடைகளில் பழங்கள், காய்கறிகள் தாராளமாக ஃப்ரெஷ்ஷாகக் கிடைக்கின்றன. சுற்றுலாப் பயணிகளுக்காக கடைகளை இரவு தாமதமாகத்தான் மூடுகிறார்கள். இரவு நேரத்தில் வெனிஸ் நகரம் இன்னும் அழகாக இருந்தது. அங்கங்கே பல சிறிய ரெஸ்டாரென்டுகளில் சாண்ட்விச், காஃப்பி விலை குறைவாக கிடைக்கிறது. வெஜிடேரியன்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

மனதுக்கு ரம்மியமான இந்த ஊரில் ஒரு சிறிய இடம் கிடைத்தால், இங்கேயே தங்கிவிடலாம் என்றுகூட தோன்றியது. சில ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் ஸ்காட்லாந்து சென்ற போதும் இது போன்ற எண்ணம் எங்களுக்கு தோன்றியது. . ஆனால், உலகத்திலேயே நிலத்தின் மதிப்பு மிக மிக அதிகமாக உள்ள நகரங்களில் வெனிஸும் ஒன்று என்பதனால், நிச்சயமாக கிடைக்காது என்ற நம்பிக்கையில் என் மனைவியும் கொஞ்சம் தயக்கத்துடன் ஒத்துக்கொண்டாள்.    
நாள் 8
இன்று, காலை மீண்டும் புனித மார்க்கின் சதுரத்திற்கு நடந்து போனோம். புனித மார்க்கின் கோவில், அதன் மேல்மாடி, புனித மார்க்கின் கோபுர உச்சி இவைகளைப் பார்த்தோம்.

புனித மார்க்கின் கோவில், கிழக்கு ரோமர்களின் பேரரசு என்றறியப்பட்ட இரண்டாம் முதல் எட்டாம் நூற்றாண்டின் பைஸாண்டின் சாம்ராஜ்யத்தின் (BYZANTINE KINGDOM) (அதன் தலைநகரம் கான்ஸ்டாண்டினோபிள், துருக்கியின் இன்றைய இஸ்தான்புல்.) கட்டிடக்கலையின் அமைப்பில் கட்டப்பட்டது. இந்தக் கோவிலின் வடிவமைப்புக்காகவும், தங்க நிற மொசைக் கற்களாலான உள் கூரைகளுக்காகவும் இந்தக் கோவில் வெனிஸின் பொற்கோவிலாக கருதப்பட்டு வருகிறது.



இந்தக் கோவிலையொட்டி இடதுபுறத்தில், வெனிஸ் நகரின் டோகேயின் அரண்மணை. (DOGE’S PALACE) DOGE என்பவர் நகரத்தை பரிபாலிக்கும் மாஜிஸ்ட்ரேட் பதவிபோல. இப்பொழுது இந்தக் கட்டிடம் ஒரு அருங்காட்சியகம். சுமார் கி.பி 828-ல், வெனிஸின் வியாபாரிகளால், யேசுவின் 70 சீடர்களில் முக்கியமான ஒரு சீடரான மார்க்கின் அடையாளங்கள் எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியாவிலிருந்து திருடப்பட்டு வெனிஸுக்கு கொண்டு வரப்பட்ட சமயத்தில் இந்த கோவில் முதன் முதலாகக் 832-ல் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், 976-ல் நடந்த இன்னொரு எழுச்சியின்போது இந்தக் கோவில் எரிக்கப்பட்டு தரை மட்டமாக்கப்பட்டது. பின்னர், மீண்டும் அதே இடத்தில் 1073-வாக்கில் இப்பொழுது காணப்படும் கோவில் கட்டப்பட்டது. 1204-ல், கான்ஸ்டாண்டினோபிள் கொள்ளையடிக்கப்பட்டபொழுது நான்கு உலோகக் குதிரைகளின் சிலைகளை அங்கிருந்து கொண்டுவந்து 1254-ல் புனித மார்க்கின் கோவில் மேற்கூரையில் வைத்தனர். பின்னர், 1797-ல், நேபோலியன் வெனிஸைக் கைப்பற்றியபோது, இந்த குதிரைகள் இங்கிருந்து ஃப்ரான்ஸ் நாட்டுக்கு எடுத்துச்செல்லப்பட்டு, 1815-ல் மீண்டும் வெனிஸுக்கு திருப்பப்பட்டன.

இப்பொழுது காணப்படும் 323 அடி உயரமுள்ள புனித மார்க்கின் கோபுரம் (ST.MARK’S COMPANILE) 1902-ல் இடிந்து விழுந்தது. பின்பு 1912-ல் புதுப்பிக்கப்பட்டது. மேலே செல்வதற்கு லிஃப்ட் வைத்திருக்கிறார்கள். உச்சியில் ஒரு சிறிய தளத்தில் ஐந்து ராட்சச மணிகளை தொங்கவிட்டிருக்கிறார்கள்.
  


கீழிறங்கிய பின்பு, சிறிது நேரம் என் மனைவி அந்த சதுரத்தில் பறந்து கொண்டிருந்த புறாக்களுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். ரொம்ப தைரியம் தான்.


பின்பு, நாங்கள் புனித மேரியின் கோவிலுக்குப் (SANTA MARIA della SALUTE) போவதற்கு நடக்கத் தொடங்கினோம். கால்வாயின் குறுக்கே நடக்க முடிந்தால் ஒரு ஐந்து நிமிட தூரம்தான். மீண்டும் பல சிறிய சந்து பொந்துகளின் வழியாக ஒரு முக்கால் மணி நேரம் நடந்து –– அக்காடேமியா பாலத்தை (PONTE ACCADEMIA) கடந்து - புனித மேரியின் கோவிலுக்கு வந்து சேர்ந்தோம். (இந்தப் பாலத்தில் பிரபலமான இத்தாலியின் பூட்டுக்களை விற்றுக்கொண்டிருந்தார்கள்.

பெரிய கால்வாய்க்கும், கடல்பகுதிக்கும் நடுவே ஒரு கை விரல் போலத் தோற்றமளிக்கும் ஒரு சிறிய நிலப்பகுதியில் அமைந்திருக்கிறது 1630-ல் ப்ளேக் (PLAGUE) என்ற கொடிய வியாதி வெனிஸை தாக்கியபோது, உடல் நலத்தைப் பேணிக்காக்கும் மேரி மாதாவுக்கு கோவில் கட்டுவதாக மக்கள் பிரார்த்தனை செய்தார்கள். அதன் பலனாக கட்டப்பட்டது இந்தக்  கோள வடிவம் கொண்ட கோவில். இந்தக் கோவிலின் மேற்கூரை (DOME) பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கும் அளவுக்கு தூரத்திலிருந்தே வானத்தில் தெரிகிறது.
                  





பிறகு, அந்த விரலின் முனையில் போய் சிறிது நேரம் உட்கார்ந்திருந்தோம். இரண்டு பக்கமும் ஆழமான கடல். எந்தவித பாதுகாப்பும் இல்லாத இந்த இடத்தில் சுற்றுலாப் பயணிகளை எப்படித்தான் அனுமதிக்கிறார்களோ தெரியவில்லை.

மீண்டும் திரும்பி நடந்தோம். வெனிஸின் இன்னொரு முக்கியமான இடம் ரியால்டோ பாலம், ரியால்டோ மார்க்கெட். வெனிஸில் பெரிய கால்வாயின் குறுக்கேயுள்ள நான்கு முக்கியமான பாலங்களில் இதுவும் ஒன்று. வாணிபத்துக்கு ரியால்டோ மார்க்கெட் ஒரு முக்கியமான இடம்.








பல சிறிய சிறிய சந்துகளினூடே நடந்தால் கணக்கிலடங்காத அளவுக்கு கடைகள். பல கட்டிடங்களின் வெளிச்சுவர்கள் இடிந்து காணப்பட்டன. ஆனால், உள்ளே கடைகளோ நவநாகரீக வசதிகளுடன் இருந்தது. முரானோ தீவில் தயாரிக்கப்பட்ட கண்ணாடி கைவினைப் பொருட்களின் கடைகள் அனேகம். ஜன்னல்களூடே தெரிந்த பொருட்களையெல்லாம் கண்ணாலேயே வாங்கிக்கொண்டு களைத்துப்போய் இரவு நேரத்தில் விடுதிக்கு வந்து சேர்ந்தோம்.

அடுத்த நாள் அதிகாலை 6.15-க்கு எங்களுக்கு மீண்டும் ரோம் செல்வதற்கு ரயில் டிக்கெட் இருந்தது.

தொடரும் ………………………………….. 

Sunday, April 20, 2014

எனது இத்தாலி பயணம் - பகுதி 4 : ஃப்ளோரென்ஸ்

எனது இத்தாலி பயணம்பகுதி 4: ஃப்ளோரென்ஸ்

Baptistry, Florence


Bell Tower (Companile)
Duomo, Florence


Loggia dei lanzi
The Baptisry, The Cathedral and the Pisa Tower
           
      இரண்டரை மணி நேரப் பயணத்துக்குப் பின் மாலை சுமார் 6.45-க்கு எங்கள் ரயில் ஃப்ளோரென்ஸ் நகரத்தை சென்றடைந்தது. இங்கும் நாங்கள் தங்க வேண்டிய இடம் ரயில் நிலையத்துக்கு வெகு அருகாமையில் ஒரு ஐந்து நிமிடத்தில் நடந்துபோகும் தூரத்தில்தான் இருந்தது. ரயில் நிலையத்துக்கு எதிரேயே மேக் டோனால்டை (MC DONALD) பார்த்ததும் கொஞ்சம்  ஆறுதலாக இருந்தது. குறைந்த பட்சம் காஃபியும், ஃப்ரென்ச் ஃப்ரையும், காரசாரமான ஸாஸும் கிடைக்கும். ஆனால், அநியாயமாக ஸாசுக்குத் தனியாக பணம் வாங்குகிறார்கள். யூரோப்பை சுற்றி பார்த்தபின்பு தான் அமெரிக்கா எவ்வளவு ‘சீப்’ என்பது புரியும். அமெரிக்காவில் எங்களுக்குத் தெரிந்து பல பொருட்களின் விலை பல ஆண்டுகளாக அப்படியே ஆணி அடித்த மாதிரி ஏறாமல் இருக்கிறது. பெட்ரோல் விலை மட்டும்தான் ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறது.

ஃப்ளோரென்ஸில் எங்களுக்கு BED AND BREAKFAST  என்று பரவலாக அழைக்கப்படும் ஒரு தங்கும் விடுதியில் ஏற்பாடு. இது ஹோட்டல் போல் கிடையாது. பெரிய ஒரு கேட்டின் உள்ளே ஒரு கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் ஒரு வீட்டை இப்படி தங்கும் விடுதியாக மாற்றியிருக்கிறார்கள். விடுதியின் உரிமையாளர் எங்களுக்காகக் காத்திருந்தார். ரோம், நேப்பிள்ஸ் நகரங்களில் நாங்கள் ஹோட்டல்களில் முன்பதிவு செய்தவுடனேயே எங்கள் கிரெடிட் கார்டிலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டுவிட்டார்கள். ஃப்ளோரென்ஸில் அப்படிச் செய்யாமல் நாங்கள் வருவதற்காக காத்திருந்தார். என்னுடைய கார்டுதான் பறிபோய் விட்டதே! என்ன செய்வது என்று முழித்துக்கொண்டு விடுதிக்குள் நுழைந்தபோது, சரியான நேரத்தில் என் மகளிடமிருந்து ஃபோன். வேறொரு கிரெடிட் கார்ட் நம்பரைக் கொடுத்து எங்களை தர்ம சங்கடத்திலிருந்து காப்பாற்றினாள். அமெரிக்காவில் கூட பல ஹோட்டல்களில் முன் பதிவு செய்யும்பொழுது இது மாதிரி  கிரெடிட் கார்ட் நம்பரை மட்டும் வாங்கி வைத்துக்கொள்கிறார்கள். நாம் செக்-இன் செய்யும் பொழுதுதான் பணத்தை எடுத்துக்கொள்கிறார்கள். எல்லாம் பரஸ்பர நம்பிக்கையில்தான் ஓடுகிறது.

இரண்டாவது மாடியிலிருந்த அந்த விடுதியில் நான்கு அறைகள் விருந்தாளிகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. விடுதியின் உரிமையாளரும் அங்கே வேலை பார்க்கும் ஒரு பங்களாதேஷியும் ரொம்ப நல்ல மாதிரி. விருந்தோம்பலை அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டும்.. இத்தாலியில் பல இடங்களில் பங்களாதேஷ் நாட்டை சேர்ந்தவர்கள் வேலை செய்கிறார்கள். சிறிய வியாபாரத்திலும் இருக்கிறார்கள். (லண்டனில் கூட பல இந்திய ரெஸ்டாரெண்டுகள் பங்களாதேஷ் நாட்டை சேர்ந்தவர்களாலேயே நடத்தப்படுகிறது.) இங்கும் எங்களுக்கு WI-FI அறையில் இலவசமாக கிடைத்தது. அதனால் இன்டெர்னெட்டில், தமிழ் நாடு, இந்தியா தேர்தல் செய்திகள், ஈ.மெயில் எல்லாம் பார்க்க முடிந்தது.

இரவில் விடுதியின் மிக அருகாமையிலேயே உள்ள ஒரு ரிஸ்டோரெண்ட்டில், அதிசயமாக, நம்மூர் சரவணபவன் ரசம் போன்ற அரிசிச் சோறு கலந்த ஒரு சூப் கிடைத்தது. ருசித்து சாப்பிட்டோம். ஆனால், அங்கேயே அமர்ந்து சாப்பிடுவதற்கு 5 யூரோக்கள் தனியாக பில்லில் சேர்த்துவிட்டார்கள். இது எங்களுக்கு முதலில் தெரியாது.

அன்று இரவும் சீக்கிரமேயே படுத்துத் தூங்கிவிட்டோம்.

நாள்: 5

ரோம் மற்றும் நேப்பிள்ஸ் நகரத்தில் HOP ON பஸ்ஸில் எங்களுக்கு கிடைத்த எதிர்மறையான அனுபவத்தினால், ஃப்ளோரென்ஸ் நகரத்தை கால் நடையாகவே சுற்றிப் பார்க்கத் தீர்மானித்திருந்தோம். காலையில் சற்றுக் குளிர் இருந்தது. போகப்போக வெயில் ஏறி இதமாக இருந்தது.

ஃப்ளோரென்ஸ் நகரை இத்தாலியில் ஃப்ரென்ஸி என்று அழைக்கிறார்கள். உயர்ந்த பண்டைய நாகரீகம், பண்பாடு, கலை, சரித்திரம் மற்றும் அழகாகத் தோற்றமளிக்கும் LANDSCAPE, இவற்றுக்கெல்லாம் பெயர் பெற்ற டொஸ்கானா (TUSCANY) என்ற இத்தாலியின் மையப்பகுதியைச் சேர்ந்தது. கி.பி 15 முதல் 17-ஆம்  நூற்றாண்டுகளில் எழுந்த இத்தாலியின் மறுமலர்ச்சி (ITALIAN RENAISSANCE) இந்த டொஸ்கானா பகுதிகளில்தான் உதயமானது. கி.பி 19—ஆம் நூற்றாண்டில் இத்தாலி சாம்ராஜ்யத்தின் தலை நகரமாக ஃப்ளோரென்ஸ் செயல்பட்டிருக்கிறது. மறுமலர்ச்சி காலத்தின் கலைகளின் அடையாளச் சின்னங்கள், (முக்கியமாக கட்டிடக் கலை) அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள் (முக்கியமாக பிட்டி அரண்மனை, - PITTI PALACE, யுஃபிஸ்ஸி கேலரி – UFFIZI GALARY) அங்கங்கே சிதறிக் கிடக்கின்ற இந்த ஊருக்கு மிக அதிகமாக சுற்று பயணிகள் உலகம் முழுவதுமிலிருந்து வருகிறார்கள். யுனெஸ்கோவினால் (UNESCO) இங்குள்ள பல கட்டிடங்கள் புராதனச் சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன. ஃப்ளோரென்ஸுக்கு அருகிலேயே உலகப் புகழ் பெற்ற பிஸ்ஸாவின் சாய்ந்த கோபுரம் வேறு.

ஃபிலிப்போ ப்ரூனல்லச்ஷி (FILIPPO BRUNELLESCHI) என்ற பிரபல கட்டிடக் கலை நிபுணரால் கட்டி முடிக்கப்பட்ட, அரைக் கோள வடிவத்தில் கூரை அமைந்துள்ள, டூமோ (DUOMO) என்றழைக்கப்படும் பிரம்மாண்டமான ஸாண்டா மேரியா டெல் ஃபளோரா (SANTA MARIA DEL FLORE) கேதிட்ரல் இதில் மிகவும் முக்கியமானது. 1296-ல் கட்டத் தொடங்கப்பட்ட இந்த கட்டிடம் 140 ஆண்டுகளுக்குப் பிறகு 1436-ல் கட்டி முடிக்கப்பட்டது. எல்லாம் பளிங்குக் கற்களால் கட்டப்பட்டது. கேதிட்ரலின் உட்சுவர்களிலும், கூரையிலும் பல நூறு ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டுவரும் ஓவியங்கள். சரித்திர காலங்களை கண்ணெதிரே கொண்டு வருகிற சிற்பங்கள். எதிரே ஃப்ளோரென்ஸ் பாப்டிஸ்ட்ரி (FLORENCE BAPTISTRY). அருகில் கியோட்டோ (GIOTTO) என்பவரால் கட்டப்பட்ட கம்பெனைலெ (COMPANILE) என்றழைக்கப்படும் 278 அடி உயரமுள்ள மணிக்கூண்டு. மிக அருகில் பிளாஸோ வெஜ்ஜியோ (PALAZZO VECCHIO) என்கிற  நகர்மன்ற கட்டிடத்தின் எதிரே பியாஸா டெல்லா சினோரியா (PIAZZA DELLA SIGNORIA) என்கிற நகர்கூடம். இடது பக்கத்தில் பல ஆர்ச்சுகளைக் கொண்ட லோகியா டெ லேன்ஸி (LOGGIA DEI LANZI) என்கிற இன்னொரு திறந்தவெளி கலைக்கூடம். பிளாஸோ வெஜ்ஜியோ-விற்கு முன்னே உலகப்புகழ் பெற்ற மைக்கேல் ஏஞ்செலோ என்ற சிற்பி செதுக்கிய ‘டேவிட்’ சிலையின் நகல். இதன் ஒரிஜினல் பாதுகாப்பாக அருங்காட்சியகத்தில் இருக்கிறது. விசேஷ பார்வையாளர்கள் மட்டுமே ஒரிஜினலைப் பார்க்கமுடியும். இன்னொரு புறத்தில் உஃபிஸ்ஸி கலைக்கூடம். அன்று  ஞாயிற்றுக் கிழமை என்பதால் உள்ளே போவதற்கு பெரிய க்யூ நின்று கொண்டிருந்தது. எங்களால் போக முடியவில்லை. அடுத்த நாள் திங்கட்கிழமை கலைக்கூடத்துக்கு ஓய்வு.













ஆர்னோ நதி பழைய ஃப்ளோரென்ஸ் நகரத்தை பிளந்துகொண்டு செல்கிறது. குறுக்கே போன்டே விஜ்ஜியோ (PONTE VECCHIO) – அதாவது பழைய பாலம் என்று அர்த்தம் கொண்ட மிகப் பழமையான ஒரு பாலம் பாலத்தின் ஓரம் முழுவதும் கடைகள் – பெரும்பாலும் நகைக்கடைகள். பாலத்தின் மேலே புகழ்பெற்ற வாசரியின் (VASARI) கூரைவேயப்பட்ட ஒரு நடைபாதை. பார்ப்பவர்களுக்கு அப்படி ஒரு நடைபாதை இருப்பதாகத் தெரியாது. இந்த நடைபாதை உஃப்பிஸி கலைக்கூடத்தையும் பிட்டி அரண்மனையையும் இணைக்கிறது. இந்த பழைய பாலம் கி.மு 4 – 7-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருந்தாலும், பின்னர் இடிக்கப்பட்டு தற்போது இருக்கும் பாலம் 14-ஆம் நூற்றாண்டில் புதியதாகக் கட்டப்பட்டது என்று அறிகிறேன். இரண்டாம் உலக மகா யுத்தத்தின் குண்டு வீச்சுகளிலிருந்து தப்பித்த ஒரு சில கட்டமைப்புகளில் இதுவும் ஒன்று. பிட்டி அரண்மனையையொட்டி பசுமையான போபோலி தோட்டம் (BOBOLI GARDEN). நிறைய நடக்கவேண்டியிருக்கும் என்பதால் நாங்கள் உள்ளே போகவில்லை




என்னை இத்தாலிக்கு சுண்டியிழுத்தது INFERNO என்கிற புத்தகத்தில் எழுததப்பட்டிருந்த இந்த புராதனக் கட்டிடங்கள்தான்..

        மிக அழகான குறுகிய கடைத்தெருக்கள், குதிரை வண்டி சவாரி, மதுரை புதுமண்டபம் போலத் தோற்றமளிக்கும் ரிபப்ளிகள் சதுரத்தின் (REPUBLICAN SQUARE) கல் மண்டப கடைகள். திரும்பிய இடங்களிலெல்லாம் சிறிய, பெரிய ரெஸ்டாரண்டுகள், ஐஸ்கிரீம் கடைகள், கூட்டம் கூட்டமாக சுற்றுலாப் பயணிகள். இப்படி எவ்வளவோ ஃப்ளோரென்ஸில்.




        மாலை நேரத்தில் ஆர்னோ நதிக்கரையில் வெகு தூரம் நடந்தோம். பலர்  நடந்தும், சைக்கிளிலும் சுற்றிக்கொண்டிருந்தார்கள். இரண்டு கரைகளிலும் பழமையும் புதுமையும் கலந்த கட்டிடங்கள்.

        ஃப்ளோரென்ஸின் அழகில் மயங்கி, நேப்பிள்சில் எங்கள் பர்ஸ் பிக்பாக்கெட் செய்யப்பட்டதைக்கூட முழுவதுமாக மறந்துவிட்டோம்.

நாள் 6

               உலகப் புகழ் பெற்ற பீஸ்ஸாவின் சாயும் கோபுரம் (LEANING TOWER OF PISA) பார்க்கப் போவதாக இன்று திட்டம். காலை 8.05-க்கு ரயில் டிக்கெட் புக் செய்திருந்தோம். சென்னை புறநகர் பயணம் மாதிரி. ஒன்றரை மணி நேரப் பயணம். ஊருக்குப் புதுசு என்று எங்கள் முகத்தில் எழுதி ஒட்டியிருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். ஃப்ளோரென்ஸ் ரயில் நிலையத்தில் ஒரு பெண்மணி எங்கள் டிக்கெட்டை மிஷினில் பதிவுசெய்து கொடுத்து, பின்பு இன்னொரு மிஷினில் VALIDATE  பண்ணியும் கொடுத்து உதவினாள். எங்கள் ரயில் பெட்டிவரை கூட வந்து காட்டிக்கொடுத்தாள். ‘ஆஹா, இத்தாலியில் இவ்வளவு உதவி செய்யும் மனிதர்களா!” என்று ஆச்சரியப்பட்டோம். எல்லாம் முடிந்த பிறகு எங்களிடம் இரண்டு யூரோ பண உதவி கேட்டாள். இதை ஒரு தொழிலாக தினமும் செய்துகொண்டிருக்கிறாள் போல. ஏனென்றால், மறு நாளும் இந்தப் பெண்மணியை ரயில் நிலையத்தில் சந்தித்தோம். தெரிந்துகொண்டதாக கை காட்டிச் சென்றாள்.

        பீஸ்ஸா ரயில் நிலையத்தில் நுழைவிலிருந்த ஒரு நியூஸ் பேப்பர் கடையில் இரண்டு பஸ் டிக்கெட்டுகள் வாங்கிக்கொண்டோம். லேம் ரோஸா (LAM ROSSA) என்கிற சிவப்பு நிற பஸ்ஸில் ஏறவேண்டும் என்பதையெல்லாம் ஏற்கெனவே இன்டெர்னெட்டில் பார்த்து வைத்துக்கொண்டாலும், மற்ற சில பயணிகளுடன் இதை உறுதி செய்துகொண்டு, சாயும் கோபுரம் அருகேயுள்ள ஒரு பஸ் நிறுத்தத்தில் இறங்கிக்கொண்டோம். சாயும் கோபுரம் வளாகத்தின் முன்னே பல கூடாரங்கள். எல்லாம் சுற்றுலாப் பயணிகளுக்காக கடைகள். இத்தாலியில் பெரும்பாலான வீதியோரக்கடைகளில் நன்றாகவே பேரம் பேசலாம். பேச வேண்டும். இல்லையென்றால் நல்ல விலையில் பொருட்களை தலையில் கட்டி விடுவார்கள்.

        வளாகத்தின் உள்ளே பிரம்மாண்டமான பாப்டிஸ்ட்ரி (BAPTISTRY), கேதிட்ரல், மற்றும் அதன் பின் புறத்தில் பீஸ்ஸா சாயும் கோபுரம். கி.பி 1173-ல் ஆரம்பித்து மூன்று கட்டமாக இந்தக் கோபுரத்தை கட்டி முடிக்க சுமார் 200 ஆண்டுகள் பிடித்திருக்கின்றன. இது கட்டப்பட்ட இடத்தின் இளகிய மண்ணின் தரத்தினாலும், சரியான அஸ்திவாரம் இல்லாததினாலும் தன் எடையைத் தாங்க முடியாமல் ஆரம்பத்திலிருந்தே இந்தக் கோபுரம் தொடர்ந்து சரியத் தொடங்கியிருக்கிறது. 1990-க்கும் 2001-க்கும் இடையே மேற்கொண்ட புதுப்பிக்கும் வேலையினால், 5.5 டிக்ரியாக சரிந்திருந்த இந்த கோபுரம் இப்பொழுது 3.99 டிக்ரியாக சரிவில்  நிறுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த கோபுரத்தின் உயரம் 183 அடி. 294 படிக்கட்டுகள். கோபுரத்தின் மேலே ஏறுவதற்கு டிக்கெட். பாப்டிஸ்ட்ரி உள்ளே போவதற்கும் டிக்கெட். குறுகிய படிக்கட்டுகள் வழியாக எங்கள் வயதையும் பொருட்படுத்தாமல் மேலே ஏறிச்சென்றோம். ஏறும்பொழுது ஒரு பக்கமாக கோபுரம் சரிந்து நிற்பதை உணர முடிந்தது. மேலே ஏறியபின் கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருந்தது. இதைவிட உயரமான சில கோபுரங்களையும், மலையுச்சிகளையும் ஏறிப் பார்த்திருக்கிறோம். ஏன், தென்காசி அருகிலுள்ள திருமலைக்கோவில் அல்லது தோரணமலை முருகனைக் காணக்கூட குறைந்தது 500 படிகள் ஏறவேண்டும். அமெரிக்காவிலுள்ள சிகாகோ நகரத்துக்கருகே நைல்ஸ் என்கிற இடத்தில் இதே பீஸ்ஸா சாயும் கோபுரத்தைப் போல அதன் அரை அளவு உயரத்தில் ஒரு கோபுரத்தை 1934-ல் கட்டி முடித்திருக்கிறார்கள்.











        பீஸ்ஸா வளாகத்தில் ஒன்றிரண்டு மணி நேரத்துக்கு மேல் ஒன்றுமில்லை என்பதால், கொஞ்ச நேரம் கடைகளை சுற்றி பார்த்துவிட்டு இன்னொரு பஸ்ஸில் ரயில் நிலையம் வந்தடைந்தோம். மீண்டும் ரயில் டிக்கெட் ஃப்ளோரென்ஸ்ஸுக்கு வாங்கிக்கொண்டு, ப்ளாட்ஃபாரத்திலிருந்த ஒரு மிஷினில் VALIDATE செய்துகொண்டு ரயில் ஏறினோம். 15 – 20 நிமிடங்களுக்கு ஒரு ரயில் ஃப்ளோரென்ஸ்க்கும் பீஸ்ஸாவுக்கும் இடையே ஓடிக்கொண்டிருக்கிறது.

        மதிய நேரத்தில், எங்கள் அறைக்கு வந்து சிறிது நேரம் இளைப்பாறிவிட்டு, மீண்டும் ஃப்ளோரென்ஸ் ஊரை சுற்றக் கிளம்பினோம். DUOMO முழுவதும் ஏறினோம். செங்குத்தான படிக்கட்டுகள். சுமார் 500 அடி உயரம். கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது. மேலேயிருந்து நகரின் பல பகுதிகளின் கண்கொள்ளாக் காட்சி.

        அடுத்த நாள் காலை எட்டரை மணிக்கு எங்களுக்கு வெனிஸ் செல்வதற்கான ரயில் பயணம் இருந்தது.

        …… தொடரும்