Total Pageviews

Showing posts with label Travel and Tours. Show all posts
Showing posts with label Travel and Tours. Show all posts

Friday, March 29, 2019

29.03.19 பயணக் கட்டுரைகள் – அமெரிக்காவின் தென் ஃப்ளோரிடா



































ஒரு காலத்தில் பயணக் கட்டுரைகள் தமிழகத்தில் மிகவும் பிரபலமாக இருந்தன. ஆனந்த விகடனில் மணியனின் கட்டுரைகள் மற்றும் சாவியின் பயணக் கட்டுரைகளைப் படிப்பதற்காகவே பலர் தமிழ் பத்திரிகைகளை வாங்கினர். சமீபத்தில் ஆன்மீக குரு திரு. ஜக்கி வாசுதேவின் இமாலயப் பயணக் கட்டுரைகள் பிரபலமாக இருந்தன.

அடிக்கடி சுற்றுப் பயணங்களை மேற்கொள்வது என்னுடைய விருப்பமான பொழுதுபோக்கு. அதிக செலவாகும் என்பது என்னமோ உண்மைதான்.

வங்கிப் பணியில் இருந்த காலத்தில் 1985-க்குப் பிறகு அடிக்கடி ஊர் சுற்ற வேண்டிய பல பொறுப்புகளை ஏற்றுக் கொண்டதால் ஒவ்வொரு மாதமும் பத்து பதினைந்து நாட்கள் வெளியூரில் சுற்ற வேண்டிய கட்டாயம் எனக்கு இருந்தது. அந்த சந்தர்ப்பங்களிலெல்லாம் நான் சென்ற ஒவ்வொரு இடத்துக்கு அருகிலும் இருந்த பல முக்கியமான சுற்றுலா மையங்களை பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.  அப்படியாக இந்தியாவின் பெரும்பகுதியை – பீஹார் மானிலம் தவிர்த்து - நான் சுற்றிப் பார்த்திருக்கிறேன்.

பின்னர், துபாயில் வேலை பார்த்த நாட்களிலும் 2006-ல் பணி ஓய்வு பெற்ற பின்பும் யூ. எஸ். ஏ, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, இத்தாலி போன்ற சில நாடுகளையும் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

சுற்றுலாப் பயணங்களில் அதிக ஆர்வம் காட்டிய நானும் என்னுடைய பல பயணங்களைப் பற்றி ஆங்கிலத்திலும் தமிழிலும் கட்டுரைகள் எழுதி வருகிறேன். பலர் படித்து மகிழ்ந்திருக்கிறார்கள்.

பயணக் கட்டுரைகளை விட பயணங்களின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நல்ல வரவேற்பை பெறுகின்றன. விரிவான கட்டுரைகளைப் படிப்பதற்குப் பலருக்கும் இன்று நேரமும் பொறுமையும் இல்லை போலும்.

பயணங்கள் பல விதங்களில் எனக்கு பயன்பட்டிருக்கின்றன. பயணங்கள் என்னுடைய உலகப் பார்வையை விரிவாக்கியிருக்கின்றன. வெறும் சுற்றுப் பயணியாகச் செல்லாமல் நான் போகும் இடங்களைப் பற்றி நிறையப் படித்து பல விஷயங்களைத் தெரிந்து கொண்டிருக்கிறேன். புதிய தகவல்களைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை வளர்த்திருக்கிறது. பொது அறிவை வளர்த்திருக்கிறது. அங்கங்கே வாழும் மக்களின் கலாச்சாரங்கள், பழக்க வழக்கங்கள், சரித்திரங்கள், என்னை வியக்க வைத்திருக்கின்றன. இயற்கையை இன்னும் அதிகமாக இன்று நேசிக்கிறேன். என் கற்பனைகளைத் தூண்டி விட்டிருக்கின்றன. பலருடனும் அனுசரித்துப் போகும் தன்மையை வளர்த்திருக்கின்றன.  நான் ஆரோக்கியமாக இருப்பதாக உணர்கிறேன்.

இதையெல்லாம் ஏன் இப்பொழுது எழுதுகிறேன்?

1950-60-களில் தமிழ்வாணன் என்ற எழுத்தாளர் பத்திரிகையாளரின் தீவிர ரசிகனாக இருந்திருக்கிறேன். அவருடைய ஒரு சில கதைகளில் அமெரிக்காவின் மையாமியைப் பற்றி (மியாமி என்றே எழுதுவார்) எழுதியிருக்கிறார். அங்கெல்லாம் சென்று வந்திருக்கிறாரா என்று தெரியாது.
அந்த மையாமிக்குச் சுற்றுப் பயணமாகப் போகும் வாய்ப்பு எனக்கும் இந்த மாதம்தான் கிடைத்தது.

மிக அழகான கடற்கரைகளைக் கொண்ட ஒரு மானிலம் அமெரிக்காவின் ஃப்ளோரிடா. நமது பெருங்குடலிலிருந்து நீட்டிக்கொண்டிருக்கும் ‘அப்பெண்டிக்ஸ்’ மாதிரி அமெரிக்காவின் தென்கிழக்குக் கோடியில் ஒரு சிறு வால்போல நீண்டு அமைந்திருக்கும் குறுகலான மானிலம். கிழக்கு, தெற்கு, மேற்கு என்று மூன்று புறங்களிலும் அட்லாண்டிக் பெருங்கடல் சூழ்ந்த ஒரு தீபகற்பம். சூறாவெளியால் அடிக்கடி பாதிக்கக் கூடிய, வெப்பமண்டலப் பருவ நிலையைக் கொண்ட ஒரு மானிலம்.  குறைந்த பட்சம் 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட 4500-க்கும் மேற்பட்ட சின்னச் சின்ன தீவுகளை உள்ளடக்கிய மானிலம்.

மயாமியிலிருந்து கீ வெஸ்ட் என்ற தென்முனைப் பகுதிக்குச் செல்வதற்கு 163 மைல் நீளமான அமெரிக்காவின் தேசிய நெடுஞ்சாலை 1 வழியாக சின்னச் சின்னத் தீவுகளுக்கிடையே அமைந்த 42 பாலங்களைக் கடக்க வேண்டியிருந்தது. அதில் முக்கியமானது 1978-82-ல் கட்டப்பட்ட புதிய 7-மைல் பாலம். அருகிலேயே உடைந்த பழைய பாலமும் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது.

நாங்கள் சென்ற மார்ச் மாதம் சுற்றுலாவுக்கு நல்ல நேரம் என்பதால் சுற்றுலாப் பயணிகளுக்குக் குறைவில்லை. ஒன்றிரண்டு கடற்கரைகளில் நீரில் இறங்கிக் குளிக்க முடிந்தது. கடலில் குளித்துவிட்டு வெளிவருவோருக்கு கடற்கரையிலேயே நல்ல தண்ணீரில் இலவசமாக குளிப்பதற்கு வசதி எல்லா இடங்களிலும் இருந்தது.

பல இயற்கையான அழகான இடங்களைப் பார்த்த திருப்தி கிடைத்தது. எவர்க்ளேட் தேசியப் பூங்காவின் சதுப்பு நிலங்களில் முதலைகளையும் பலவிதமான பறவைகளையும் காண முடிந்தது. பல இடங்கள் எனக்கு நமது கேரளாவை நினைவூட்டின. மயாமி டௌண்டவுண் பிரம்மாண்டமாக காட்சியளித்தது. மயாமியைச் சுற்றிப் பல இந்தியர்களின் மளிகைக் கடைகளும் உணவு விடுதிகளும் இருப்பது இந்தியர்களுக்கு மிகவும் வசதியானது. மயாமி தெற்கு பீச் அருகில் ஒரு இந்திய உணவு விடுதியில் திருப்தியாக ‘தால் மக்கனி’ ‘டண்டூரி ரொட்டி’ சாப்பிட்டது குறிப்பிட வேண்டியது.

எங்கள் பயணத்தில் குறிப்பிடத்தக்க மற்ற அம்சங்கள்:
  1.     1.5 மில்லியன் ஏக்கர் பரப்பளவு கொண்ட எவர்க்ளேட்ஸ் சதுப்பு நில (Wetlands) தேசியப் பூங்காவில் ‘கூப்பர்டவுண்’ நிறுவனத்தின் காற்றுப் படகுகளில் பயணித்தது. அங்குள்ள சதுப்பு நிலத் தன்மையையும் அதில் வாழும் உயிரனங்களும் பாதிக்கக் கூடாதென்பதற்காக படகின் மோட்டரை உயரத்தில் வைத்து இயக்குகிறார்கள். வீடியோவைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
   2.     கீ வெஸ்ட் என்ற தென்முனையில் எங்களை - அடிப்பகுதியில் கண்ணாடி பொறுத்தப்பட்ட - கண்ணாடிப் படகுகளில் கடலுக்குள் வெகு தூரம் கூட்டிச் சென்று ஆழ்கடலில் வாழும் மீன் மற்றும் தாவர இனங்களைக் காட்டினார்கள். அடிவானத்தில் சூரியன் மறைவதைப் பார்ப்பதற்கு ரம்யமாக இருந்தது.
    3.     எவர்க்ளேட்ஸ் தேசியப் பூங்காவின் வடப் பகுதிக்கு செல்லும் வழியெங்கும் தாவர இனங்களின் வளர்ப்புப் பூங்காக்கள் (NURSERIES) நிறைந்து காணப்பட்டன.
  4.     எல்லா இடங்களிலும் மோட்டர் கார்கள் செல்வதற்கு வசதியான அருமையான சாலைகள் இருந்தன. அமெரிக்காவில் சுற்றுலாவுக்கும் அடிப்படை கட்டுமான வசதிகளுக்கும் அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவம் தெரிந்தது.

மொத்தத்தில் மயாமியும் கீ வெஸ்ட் பகுதிகளும் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று.

எனக்குத் தெரிந்து இந்தியாவிலும் சுற்றுலாவுக்கு தகுதியான பல இடங்கள் இருக்கின்றன. இருந்தும் அடிப்படை கட்டமைப்புகள், சாலை வசதிகள், தங்கும் விடுதிகள் போன்ற வசதிகள் இன்னும் எவ்வளவோ முன்னேற வேண்டியிருக்கிறது. முந்தின காலத்தை கருத்தில் கொண்டு பார்க்கும் பொழுது இப்பொழுது எவ்வளவோ தேவலாம் என்பதை கடந்த ஆண்டு குஜராத், மத்தியப் பிரதேசம் சுற்றுலாவின் போது கண்டு கொண்டோம்.

உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள்.

Saturday, December 30, 2017

30.12.2017 Introduction to my Madhya Pradesh Tour Report

A note of caution: Though I have written and published three books of short stories I am a novelist basically, and so, brevity is not known to me.




Probably, a tiny spark of desire to visit Madhya Pradesh got impregnated in my mind during 2015 while writing the 5th Volume of my book: I WANT TO KNOW ABOUT … INDIA, ITS STATES, AND IMPORTANT CITIES, which concerned about the Central India, including Madhya Pradesh. While collecting information on Madhya Pradesh for the purpose of the book I stumped upon some information about, among other places, Bhimbedka, in MP, where some 10000 years-old human paintings have still survived under the rock shelters. The desire must have been lying dormant for long until quite suddenly, during November, it grew into gigantic proportions. Fortunately, for me, whenever I am in India, the second half of December is always a dull period, with no activity, due to all round closure of schools and colleges.

In my house, I represent the kinetic energy, wanting action, movement, and commotion, and my wife stands for potential energy, wanting stability, balance, and peace. While I wanted to make the tour to Madhya Pradesh she wasn’t that keen. But, as it always happened, she gave in to my emotional blackmailing and agreed for the tour. Not that she doesn’t like sightseeing, but she has recently developed a habit of concerning more and more about health – present and presumed. So, my gratitude goes to her for agreeing to make the trip. God bless her.

Something similar had happened earlier too. Sometime in late 2013, I was reading Dan Brown’s INFERNO. As I read the extensive description about Florence and its various theocratic structures, suddenly I felt I must visit Italy, specifically, Florence. After some hard bargaining with my wife, we made a very happy trip to Italy during March 2014, and I felt fulfilled.

Coming back to our Madhya Pradesh tour, once we decided to make the tour, I started looking at places to visit. Madhya Pradesh is a very vast state, but thinly populated. I had visited several parts of the State during the early 1990s, as part of my official work, and I had noticed that several parts of the State were primitive in development and public conveniences. But I knew things have changed a lot over there since then.

We decided to limit ourselves to Khajuraho, Jabalpur, Ujjain, Indore, and Bhopal. Though it might look a bit convoluted, the crisscross journey across the State became inevitable as I insisted on visiting the Marble Rocks along the Narmadha River, near Jabalpur. And we were both happy that I insisted on passing through Jabalpur too. Our itinerary broadly fell like this:

Chennai to Bhopal (by train)
Bhopal to Khajuraho (by train)
Khajuraho to Satna (by local public transport) and from Satna to Jabalpur (by train)
Jabalpur to Ujjain (by train)
Ujjain to Indore (by public transport)
Indore to Mahabaleshwar and Mandu (by public transport)
Indore to Bhopal (by public transport)
Bhopal to Sanchi, Udaygiri, Bhojpur, and Bhimbedka by a hired taxi
Bhopal to Chennai (by train)

Taxi was a convenient option everywhere, but we decided to use public transport wherever possible. And it was not inconvenient.

We left from Tenkasi on 16th December evening and returned back on 29th morning. All hotels were booked through the internet through either MakeMyTrip.com or Bookings.com or Goibobo.com. The hotels we booked were decent, centrally located, easily accessible, comfortable, and quite economical. For me, the internet is almost a demi-God. Grants you anything you want!

The trip was quite hectic as we were constantly on the move. Yet, we enjoyed the whole trip. We enjoyed decent north Indian food everywhere. Adharak ka chai was uniformly great everywhere. Fortunately for us, there were no hiccups anywhere during our trip. All meticulously planned and realized.

My overall impressions about Madhya Pradesh can be summarized as follows:
     1.      Most places were very neat and clean. ‘Swachh Bharat’ advertisements were there on every wall at many places. We could see public toilets everywhere. Very commendable. Proper roads have been developed in all the places we visited. The people were very simple and helpful.
       2.      The people in the rural areas appeared genuinely poor. One could see large groups of people traveling with headloads of what, I don’t know, everywhere. Incidentally, Madhya Pradesh has the largest percentage of Adhivasis (Tribal people), who were illiterate or only semi-literate, and very innocent. We passed through several small villages during the trip.
       3.      On casual conversation with fellow travelers while traveling and a few public, we got the impression that the day to day State administration is as inefficient and corrupt as any other State.
       4.      The weather was cool during the night, but the days were quite warm or hot.


Await a couple of more reports on the details of the places we visited and our impressions about them.

Sunday, March 19, 2017

Antelope Canyon

Antelope Canyon is a ‘slot canyon’ in the Southwest of North America. It is located on Navajo (pronounced as Navaho) land east of the city of Page, Arizona. (Navajo Nation is a semi-autonomous Native American Territory.)


Antelope Canyon includes two separate, scenic slot canyon sections, referred to individually as "Upper Antelope Canyon" or "The Crack" (660 feet long) and Lower "Antelope Canyon" or "The Corkscrew" (1335 feet long) and have a depth of 120 feet. The Canyons are located at an elevation of 3704 ft above MSL.
The Navajo name for Upper Antelope Canyon is Tsé bighánílíní, which means "the place where water runs through rocks". Lower Antelope Canyon is Hazdistazí, or "spiral rock arches".
Antelope Canyon was formed by erosion of Navajo Sandstone, primarily due to flash flooding and secondarily due to other sub-aerial processes. Over time the passageways eroded away, making the corridors deeper and smoothing hard edges in such a way as to form characteristic 'flowing' shapes in the rock.
Antelope Canyon is a popular location for photographers and sightseers, and a source of tourism business for the Navajo Nation.  

                                                             (Inside of the Upper Antelope Canyon)
Upper Antelope Canyon
Upper Antelope Canyon’s entrance and entire length are at the ground level, requiring no climbing. Besides, beams (shafts of direct sunlight radiating down from openings in the top of the canyon) are much more common in the Upper than in Lower Canyon during the summer months.

Lower Antelope Canyon

                                                                 (Inside of Lower Antelope Canyon)


                                                        (Stairs leading out of Lower Antelope Canyon)
Lower Antelope Canyon is located a few miles away. Metal stairways have now been installed to go into the canyon. It is in the shape of a "V" and shallower than the Upper Antelope.
Flash flood danger
Antelope Canyon is visited exclusively through guided tours, in part because rains during monsoon season can quickly flood the canyon. On August 12, 1997, eleven tourists were killed in Lower Antelope Canyon by a flash flood.  At the fee booth, a NOAA Weather Radio from the National Weather Service and an alarm horn are now stationed. Despite improved warning and safety systems, the risks of injuries from flash floods still exist. A flood occurred on October 30, 2006, lasting 36 hours had caused the closure of the canyon for 5 months by The Tribal Park Authorities. On July 30, 2010, several tourists were stranded on a ledge when two flash floods occurred at the Upper Antelope Canyon. 
Horseshoe Bend
Besides the Antelope Canyon, we also visited the Horseshoe Bend, offering a spectacular view of the river Colarado flowing down a canyon. The pictures shown here will speak for themselves.







(I thank Wikipedia for some of the information I have given here in the blog.)

Wednesday, February 01, 2017

Kartchner Caverns - கார்ட்ச்னர் குகைகள்

31.01.17



இரண்டு  நாட்களுக்கு முன்பு கார்ட்ச்னர் குகைகளுக்குச் (KARTCHNER CAVERNS) சென்றிருந்தோம். அமெரிக்காவில் அரிசோனா மானிலத்தில் தலைநகரமான ஃபீனிக்ஸிலிருந்து சுமார் 150 மைல் தொலைவில் இந்த குகைகள் அமைந்திருக்கின்றன.

1974 நவம்பரில் கேரி டெனென் மற்றும் ரேண்டி டஃப்ட்ஸ் என்ற இருவர் வெட்ஸ்டோன் மலைப் பகுதிகளில் அமைந்திருந்த சுண்ணாம்புக்கல் மலைகளை ஆராய்ந்து கொண்டிருந்த போது ஒரு சிறிய துவாரத்தின் அடியே மலையில் ஒரு பெரிய பிளவு இருப்பதைக் கண்டார்கள். அந்த துவாரத்தின் வழியே சூடான  ஈரப்பசையோடு கூடிய காற்று வெளியேறிக்கொண்டிருந்தது. அங்கே ஒரு நிலத்தடி குகைப் பாதை இருக்க வேண்டும் என்று யூகித்துக்கொண்டார்கள். பல மணி நேரங்கள் அந்த குறுகிய நிலத்தடிப் பாதை வழியே ஊர்ந்தும், தவழ்ந்தும் சென்ற போது பழமையான பழுதுபடாத பரந்த ஒரு குகை இருப்பதை கண்டறிந்தார்கள்.  நான்கு ஆண்டுகள் தொடர்ந்து இந்தக் குகைகளை ரகசியமாக ஆராய்ந்த பின்னரே அந்த குகை அமைந்திருந்த மலையின் சொந்தக்காரரிடம் தங்கள் கண்டுபிடிப்பைப் பற்றி சொல்லியிருக்கிறார்கள். இது போன்ற ஒரு பொக்கிஷத்தைப் நீண்ட காலம் பாதுகாக்க வேண்டுமென்றால் அந்த குகையை அரசாங்கம் எடுத்துக் கொண்டால்தான் முடியும் என்று தீர்மானித்து அரிசோனா மானில அரசு அதிகாரிகளிடம் பல முறை ரகசியமாகப் பேசினர். பின்னர் குகைகளை அரசு எடுத்து நடத்தும் திட்டம் பற்றி மானில ஆளுனருக்குத் தெரிவித்தனர். ஆளுனருக்கும் விருப்பம்தான். ஆனால், அவருக்கோ பல அரசியல் பிரச்சினைகள். அந்த ஆளுனர் நீக்கப்பட்ட பிறகு 1988-ல் மானிலத்தின் இரண்டு மக்கள் சபைகளும் ஒன்று கூடி ஒரே நாளில் அந்த குகையை அரசே எடுத்து நடத்தும் தீர்மானத்தை நிறைவேற்றினர். இருந்தும் நில சொந்தக்காரர்களான கார்ட்ச்னர் குடும்பத்துக்குச் சேர வேண்டிய நிலத்துக்கான விலையை கொடுப்பதற்குத் தேவையான நிதி வசதி அரசிடம் இல்லாததால் ஏப்ரல் 1988-ல் அந்த நிலம் குத்தகைக்கு எடுத்துக்கொள்ளப் பட்டது. நில சொந்தக்காரர்களுக்குச் சேர வேண்டிய தொகை கொஞ்சம் கொஞ்சமாக இந்த குகைகளைச் சுற்றிப் பார்க்க வரும் பயணிகளிடமிருந்து அனுமதிச் சீட்டு வசூலிலிருந்து கொடுப்பதாக ஒப்பந்தம் செய்து கொண்டனர். 10 ஆண்டுகளுக்கும் மேலான தீவிரமான திட்டமிடுதலுக்கும், கடுமையான உட்பணிகளுக்கும் பின்னர் பல சட்ட ரீதியான சிக்கல்களையும் எதிர்ப்புகளையும் கடந்து 28 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் நவம்பர் 1999-ல் குகைகளின் மேற்பகுதிகளுக்கு திறப்பு  விழா நடைபெற்றது. குகைகளின் ஆழ்ந்த உட்பகுதிகள் பின்னால் 2003-ல் திறந்து வைக்கபட்டன.  

மலைப்பகுதிகளில் அங்கங்கே ஓடும் நீரோடைகள் காற்றிலிருந்து கரியமில வாயுவை உட்கொண்டு சுமந்து செல்லும்பொழுது அமிலத்தன்மை உடைய தண்ணீராக மாறுகிறது. இந்த நீர் நிலத்தடியே கிடக்கும் சுண்ணாம்புக்கல் பாறைகள் மீது மோதி உராய்ந்து உராய்ந்து அவைகளை கரைக்கின்றன. ரசாயனக் கிரியைகளால் ஸ்டலக்டைட், ஸ்டலக்மைட் என்ற ரசாயனப் பொருட்கள் உற்பத்தியாகி அங்கங்கே சேர்த்துவிடுகின்றன. இந்த சேமிப்புகள்தான் SPELEOTHEM என்றழைக்கப்படும் மிக அழகான உருவமைப்புகளை உண்டாக்குகின்றன. உறைந்த நீர் அப்படியே கூரையிலிருந்து தொங்குவது போல அங்கங்கே இந்த SPELEOTHEM தொங்கிக் கொண்டிருக்கின்றன. ஒரு சில இடங்களில் ஒரு பெரிய ராட்சஸ் மரம் போன்ற உருவம் தாங்கி நிற்கின்றன. ஸ்டலக்டைட், மற்றும் ஸ்டலக்மைட் அடங்கிய SPELEOTHEM-ன் உருவமைப்புகள் மலையிடுக்களில் நீர் ஓடுவதையும், கசிவதையும், உறைவதையும், சொட்டுவதையும், தேங்குவதையும் பொறுத்து அமைகிறது. தொங்கிக் கொண்டிருக்கும் சில உருவமைப்புகள் ஒரு கண்ணாடிக் குழாய்க்குள்  நீர் தேங்கியிருப்பது போலவும்,  வேறு ஒரு சில உறைந்த, ஒளி புக முடியாத பனிக் கட்டிகள் போலவும் தோற்றமளிக்கின்றன.

இயற்கையின் தயாரிப்புகளான இந்த உருவமைப்புகள் அழகானவை. பிரமிப்பை ஏற்படுத்துபவை.  குகைக்குள் சில இடங்கள் பார்ப்பதற்கு திகிலையும் ஏற்படுத்துகின்றன. குகைக்குள்ளே புகைப்படம் எடுப்பதற்கு அனுமதியில்லை. அதனால் இணையதளத்தில் கிடைத்த படத்தை இங்கே பார்க்கலாம்.

எளிதில் உடையக்கூடிய, இன்னும் வளர்ந்து கொண்டிருக்கின்ற இந்த SPELEOTHEM உருவமைப்புகள் இப்பொழுது காணப்படும் நிலைக்கு வருவதற்கு பல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு மேல் எடுத்திருக்கும் என்பதைக் கேட்பதற்கு பிரமிப்பாக இருக்கிறது. மேலும், இந்த உருவமைப்புகள் எங்கேனும் உடைந்து விட்டால் மேலும் வளர்ச்சியடையாது என்பதினால் இவைகளுக்கு பலத்த பாதுகாப்பு கொடுத்திருக்கின்றனர். பார்வையாளர்களைக் கூட்டிச் செல்ல 5-அடி அகலத்தில் நடை பாதை, இரண்டு பக்கமும் தடுப்புக் கம்பிகள், மிகக் குறைவான மின் விளக்குகள், பல அடுக்குகளில் இரும்புத் தடுப்புக் கதவுகள், குகைகளைப் பற்றி விளக்கம் கொடுக்க முன்னேயும் பின்னேயும் வன அதிகாரிகள்…இப்படிப் பல.

ராட்சஸ மரம் போல வளர்ந்து நிற்கும் SPELEOTHEM உருவங்கள் அடங்கிய பகுதிகளில் LIGHT AND SOUND SHOW-க்களில் செய்வது போல மின் விளக்குகளையும் பின்னணி இசையையும் அமைத்துக் காட்டி நம்மை பிரமிப்பின் உச்சத்துக்கே கொண்டு செல்கிறார்கள்.

கார்ட்ச்னர் குகைகளைப் போல சிறிய அளவில் இன்னொரு குகையை MOUNT RUSHMORE என்ற இடத்தில் பார்த்திருக்கிறோம். எல்லாம் STALACLITE, STALAGMITE-களின் தொங்கும் தோட்டங்கள். அமெரிக்காவின் கென்டக்கி மானிலத்திலுள்ள உலகளவிலேயே மிகப் பெரிய MAMMOTH CAVES-ஐயும் பார்த்திருக்கிறேன். இயற்கையையும் அதன் அழகையும் பேணிக் காப்பதில் அமெரிக்கர்கள் வல்லுனர்கள். மிகச் சிறப்பாகப் பாதுகாக்கிறார்கள். அதே நேரத்தில் பார்வையாளர்களின் பாதுகாப்புக்காகவும் பல ஏற்பாடுகள் செய்கிறார்கள்.

உலகளவில் இது போன்ற பல குகைகள் பிரபலமானவை என்று படித்திருக்கிறேன்.

இந்தியாவிலும் இது போன்ற குகைகள் இருக்கின்றன. முக்கியமாக ஆந்திராவில் அரக்குப் பள்ளத்தாக்கில் அமைந்திருக்கும் போரா குகைகள் கார்ட்ச்னர் குகைகளைப் போல அமைந்திருக்கின்றன. போய்ப் பார்த்ததில்லை. கண்டிப்பாக போய்ப் பார்க்க வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறேன். இமயமலையில் காஷ்மீரில் இருக்கும் அமர்நாத் சிவலிங்கமும் இது போன்ற ஒரு பனி சூழ்ந்த ஸ்டல்கமைட்டின் உருவமைப்புதான் என்று கேள்விப்படுகிறேன். இந்துக்களுக்கு ஒரு முக்கியமான வழிபாட்டுத்தலமாக இருந்து வருகிறது. இன்னொன்று ஜம்முவுக்கு அருகே சிவகோரி என்ற இடத்தில் அமைந்திருக்கிற குகை. இதுவும் ஒரு வழிபாட்டுத் தலமாக அமைந்திருக்கிறது. சிவகோரியிலிருக்கும் இந்த குகையிலிருந்து அமர்நாத்துக்கு செல்வதற்கு மிகக் குறுகிய ஒரு குகைப் பாதை இருக்கிறது. அது இப்பொழுது மூடப்பட்டிருக்கிறது. மூன்று வருடங்கங்களுக்கு முன்பு சிவகோரி குகையைப் பார்த்திருக்கிறேன். அதே போல ஜம்முவில் வைஷ்ணவதேவி கோவிலுக்குச் செல்லும் வழியில் அர்த்குவாரி என்ற இடத்தில் தேவியின் கருவறையாக பாவித்து வரும் ஒரு சிறிய நிலத்தடி குகை இருக்கிறது. இந்த குகையில் நுழைந்து செல்வது ஒரு விசித்திரமான அனுபவம். தரையில் படுத்துக் கொண்டும், ஊர்ந்து கொண்டும், தவழ்ந்து கொண்டும்தான் இந்த குகைக்குள் செல்ல முடியும். உள்ளே நுழைந்த பிறகு ஒரு சில நேரம் ‘அடாடா, எப்படி குகையின் அடுத்த வாயிலுக்குப் போய்ச் சேர்வோம்’ என்ற பயமும் ஏற்படுகிறது. வைஷ்ணவதேவி கோவிலே ஒரு குகைக்குள்தான் அமைந்திருக்கிறது. முன்னாட்களில் தேவியை தரிசனம் செய்வதற்கு தவழ்ந்துதான் செல்லவேண்டும். இப்பொழுது அப்படியில்லை. நடந்தே செல்லலாம். குகையைப் பெரிதாக்கியிருக்கிறார்கள்.

இவற்றைத் தவிர பல குகைக் கோவில்கள் இந்தியாவில் பிரபலமானவை என்று உங்களுக்குத் தெரிந்திருக்கக் கூடும். இவற்றில் பெரும்பாலானவை மனிதர்களால் குடையப்பட்டு அமைக்கப்பட்டவை.

அமெரிக்காவில் இருப்பது போன்ற பெரிய அளவு குகைகள் இந்தியாவில் இருப்பதாக எனக்குத் தகவல் இல்லை. உங்களுக்குத் தெரிந்திருந்தால் சொல்லுங்களேன்…