Total Pageviews

Showing posts with label Wonders of this world. Show all posts
Showing posts with label Wonders of this world. Show all posts

Sunday, May 27, 2018

22.05.18 என்னை வியக்க வைக்கும் (திகைக்க வைக்கும்?) விஷயங்கள்:


இந்த உலகம் விந்தையானது. இயற்கையில் நடக்கும் ஒவ்வொன்றும் நம்மை திகைக்க, பிரமிக்க வைக்கக் கூடியது.

பிறப்பு – இறப்பு என்பது என்ன? செடிகளில் எப்படி, பூ பூக்கிறது? ஒரு சிறிய விதை எப்படி ஒரு செடியாகவோ அல்லது மரமாகவோ வளர்கிறது? நமது இருதயமும் நுரையீரலும் எப்படி ஒரு வினாடி கூட ஓய்வில்லாமல் வேலை செய்து கொண்டிருக்கிறது? எங்கிருந்து அதற்கு அந்த சக்தி கிடைக்கிறது? தூங்கும் பொழுது நமக்கு என்ன ஆகிறது? எல்லாமே வியக்கக் கூடியதுதான்.

இதையெல்லாம் விட மனம் என்பது ஒரு படி மேல் பிரமிக்கக் கூடியது. மனம் என்பது மூளையா அல்லது அதற்கு அப்பாற்பட்டதா? மனம் எங்கே இருக்கிறது? அது எப்படி செயல்படுகிறது? எண்ணங்கள் எப்படித் தோன்றுகின்றன?

இப்படிப் பல கேள்விகள்.

‘ஏன், ஏன்’ என்று கேட்கக் கேட்கத்தான் மனிதன் வளர்ந்திருக்கிறான். இயற்கையாக நடக்கும் பல விஷயங்களைப் பார்த்து வியந்து ‘ஏன்?’ என்று கேள்வி கேட்டு, தேடித் தேடி அலைந்து விடைகளை இன்னமும் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறான்.

அப்படி நானும் நான் பார்த்ததை, கேட்டதை, படித்ததைக் கண்டு வியந்து அல்லது திகைத்து எனக்குள்ளேயே இயற்கையாகத் தோன்றிய சில கேள்விகளைப் பற்றி எழுத விரும்புகிறேன். இது போன்ற கேள்விகள் உங்களுக்கும் தோன்றியிருக்கலாம்.  நீங்கள் வியந்ததையும் (திகைத்ததையும்) உங்கள் கருத்துக்களாக எழுதுங்கள்.

அறிவு பூர்வமான கருத்துப் பரிமாற்றமாக இது இருக்கும் என்று நினக்கிறேன். குமாரசாமியைப் பற்றியும், வைகோவைப் பற்றியும்,, விஷாலைப் பற்றியும் நமது சிந்தனை சக்திகளை வீணடிப்பதை விட இது ஆக்க பூர்வமாக இருக்கும் என்று  நம்புகிறேன்.

ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரே ஒரு வியப்பைப் பற்றி மட்டுமே எழுதலாம் என்றிருக்கிறேன். பல வியப்புகள் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடரும். தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன். முக்கியமானது, முக்கியமில்லாதது, முன்னுரிமை பெற்றது என்று இந்தப் பட்டியலில் எதுவுமில்லை. அதனால் முன்னுக்குப் பின் இருக்கலாம். ஆனால், முரணாக இருக்காது. ஆனால், ஒவ்வொன்றும் வித்தியாசமானது.

எனது வியப்புகளின் பட்டியல் இதோ…இன்றைய வியப்பு…

1. தன் குழந்தைகளுக்கு ஒரு நல்ல தகப்பனாக இருக்க வேண்டும் என்று மெனக்கெடும் பல பெற்றோர்கள் ஏன் ஒரு நல்ல பிள்ளையாக தன் தாய் தந்தையருக்கு இருக்க வேண்டும் என்று நினைப்பதில்லை?


தொடரும்...