Total Pageviews

Showing posts with label Youth Development. Show all posts
Showing posts with label Youth Development. Show all posts

Thursday, June 20, 2019

மாற்றம், குறிக்கோள், சவால்கள்


பொதுவாக மனிதவள மேம்பாடு, அதிலும் குறிப்பாக, இளைஞர்கள் மேம்பாடு எனக்கு மிகவும் நெருக்கமான, மனதுக்கு பிடித்தமான ஒரு தலைப்பு. இந்தியாவில் இருக்கும் நாட்களில் என்னால் முடிந்த அளவு இளைஞர்களின் நலனுக்காக பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன். பல பள்ளிகளில், கல்லூரிகளில் பேசி வருகிறேன்.

இப்பொழுது ஒரு புது முயற்சியில் இறங்கியிருக்கிறேன். “மாற்றம், குறிக்கோள், சவால்கள்” என்ற தலைப்பில் என்னுடைய கருத்துக்களை வீடியோக்களாக தயார் செய்து வருகிறேன். இதன் மூலமாக ஒரு பரந்த பார்வையாளர்களுக்கு பயனுள்ள சில தகவல்கள் போய்ச் சேரும் என்று நம்புகிறேன்.

முதல் அறிமுக வீடியோவை ஒரு சில நாட்களுக்கு முன்பு யூடியூபில் பதிவேற்றம் செய்திருந்தேன். அதன் இணையதள ‘லின்க்கை’ இங்கே கொடுத்திருக்கிறேன்.

இந்த வீடியோவை விரும்பிப் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்களுக்கு பிடித்திருந்தால் வீடியோவுக்கு ‘லைக்’ கொடுங்கள், ‘ஷேர்’ செய்யுங்கள். உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். அல்லது எனக்கு neelkant16@yahoo.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்புங்கள்.

என்னுடைய வீடியோக்களுக்கு நீங்கள் ‘subscribe’ செய்தால் ஒவ்வொரு முறையும் நான் பதிவேற்றம் செய்யும் பொழுது உங்களுக்குத் தகவல் வந்து சேரும்.

நன்றி, வணக்கம்.


Friday, May 04, 2018

02.05.18 கோடை வந்து விட்டது


ஒவ்வொரு ஆண்டும் மார்ச் ஏப்ரல் வந்து விட்டால் போதும். செய்தித் தாள்களில் நாம் வழக்கமாக காண்பது:

1.     ஏர்கண்டிஷனர்கள் விளம்பரங்கள்
2.     ஐ. ஏ. எஸ்/ஐ. ஐ. டி/ஐ. ஐ. எம், மற்றும் சமீபத்தில் கட்டாயமாகிவிட்ட நீட் தேர்வுகளுக்கு கோச்சிங் வகுப்புகளுக்கான விளம்பரங்கள்
3.     பெரிய மெட்ரிக் பள்ளிகள் தங்கள் பள்ளி மாணவர்களில் எத்தனை பேர் பொதுத் தேர்வுகளில் நூற்றுக்கு நூறு எடுத்தார்கள் என்பதை பறைசாற்றும் விளம்பரங்கள்.

ஒரு காலத்தில் சொகுசுப் பொருளாகப் பார்க்கப்பட்டு  மேல்தட்டு மக்களே பயப்படும் அளவுக்கு வரி விதிக்கப்பட்ட ஏர்கண்டிஷனர்கள் இன்று அத்தியாவசியத் தேவையாகி விட்டன. மார்க்கெட்டில் கடும் போட்டி. பல வித யுத்திகளை – வட்டியில்லாத கடன் வசதி, அதிரடி விலை குறைப்பு, போனஸ் கூப்பன்கள், கியாரண்டி இப்படி பல – கையாண்டு பொருளை விற்க வேண்டியிருக்கிறது. செய்தித் தாள்களில் பல முழுப் பக்கங்களை இந்த விளம்பரங்கள் ஆக்ரமிக்கின்றன.

இன்றயை ஆங்கில ‘தி ஹிந்து’வில் முதல் இரண்டு பக்கங்களை ஆகாஷ் மெடிக்கல்/ஐ.ஐ.டி/ஜே.ஈ.ஈ குழுமமும் மற்றொரு முழு பக்கத்தை ஸ்ரீசைதன்யா குழுமமும், கடைசி முழுப் பக்கத்தை நாராயணா குழுமமும் எடுத்துக் கொண்டிருக்கின்றன. இந்த விளம்பரங்களுக்கு லட்சக் கணக்கில் பணம் செலவாகும் என்பது எல்லோருக்கும் தெரியும். இது போல இன்னும் எத்தனை செய்தித் தாள்களில் வந்திருக்கிறதோ தெரியவில்லை. யாரிடமிருந்து இந்த விளம்பரங்களின் செலவை இந்த நிறுவனங்கள் வசூலிக்கப் போகின்றன? எத்தனை பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகளைச் இந்த கோச்சிங் வகுப்புகளில் பல்லாயிரக் கணக்கில் பணம் அடைத்து சேர்ப்பதற்கு வசதியிருக்கும்? வசதியில்லாத மாணவர்கள் என்ன செய்வார்கள்?

என்னுடைய கவலை அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களைப் பற்றியது.

அரசுப் பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் என்னதான் செய்கிறார்கள்? அவர்களில் பலர் தனியார் பள்ளிகளில் சென்று அந்தப் பள்ளிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு இதே தேர்வுகளுக்குக் கோச்சிங் வகுப்புகள் நடத்துகிறார்கள் அல்லது மாலை நேர டியூஷன் வகுப்புகள் நடத்துகிறார்கள் என்பது ஊரறிந்த உண்மை.

அரசுப் பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் நினைத்தால் நன்றாகப் படிக்கும் ஏழை மாணவர்களை இந்தத் தேர்வுகளுக்கு தயார் செய்ய முடியாதா? அல்லது அவர்களுக்கு அந்த சுதந்திரம் இல்லையா? அரசாங்கத்தால் எத்தனை கோச்சிங் மையங்களைத் தொடங்க முடியும்? அப்படியே துவக்கினாலும் காலப் போக்கில் சரிவர செயல்படுமா? அல்லது இன்றைய அரசுப் பள்ளிகளைப் போல செயல்படுமா?

இன்று இரண்டாம் வகுப்பிலிருந்தே கோச்சிங், டியூஷன் என்று போய்க் கொண்டிருக்கிறது. இதில் மாணவர்களுக்குத் தான் அழுத்தம் அதிகமாகிறது. இருந்தாலும் போட்டி நிறைந்த இன்றைய உலகத்தில் வேறு வழி என்ன இருக்கிறது? குழந்தை பிறந்த நேரத்திலிருந்தே பெற்றோர்கள் அவர்களை மருத்துவர்களாக்க வேண்டும், பொறியியல் வல்லுனர்களாக்க வேண்டும், பெரிய ஐ. ஏ. எஸ் அதிகாரிகளாக்க வேண்டும், வெளி நாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற கனவை வளர்த்துக் கொள்கிறார்கள்.
            
        இதில் ‘மத்யமர்’ பிரிவில் ஒரு உறுப்பினராக இருக்கும் என்னால் என்ன செய்ய முடியும் என்பதையே ஒன்றிரண்டு நாட்களாக யோசித்து வரும் எனக்கு ஒரு உள்கருத்து தோன்றியது. அதைப் பற்றி நாளை எழுதுகிறேன்.  

Wednesday, January 11, 2017

08.01.17 இந்த வார நாட்க்குறிப்பு

08.01.17 இந்த வார நாட்க்குறிப்பு

என்னுடைய நாட்க்குறிப்பு பகுதியில் அந்தந்த வாரத்தில் நான் சந்தித்த, என்னைத் தாக்கிய அனுபவங்கள், உணர்ச்சிகள், பார்த்தவை, கேட்டவை இவைகளைப் பற்றி மட்டுமே எழுத வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். என் வலையில் எழுதி முக நூலில் அதற்கு இணைப்பும் கொடுத்து வந்தேன்.

நான் கவனித்த வரை, என்னுடைய எழுத்துக்களை முக நூலில்  நேரடியாக பதிவு செய்யும் பொழுது ஒரு சிலராவது அதைப் படித்து சில சமயங்களில் கருத்தும் தெரிவிக்கும் பொழுது எனக்கு ஒரு நிம்மதி. ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் இந்த எதிர்பார்ப்பு இருக்கும் என்று நம்புகிறேன். எத்தனை பேர் நாம் எழுதியதைப் படிக்கிறார்கள் என்று பார்ப்பதில் ஒவ்வொரு எழுத்தாளனும் ஒரு சிறு குழந்தையாக மாறிவிடுகிறார் என்று நினைக்கிறேன். வலையில் மட்டுமே எழுதும் பொழுது கூகுள் அனலடிக்ஸ் கொடுக்கும் தகவல் பேரில் எத்தனை பேர் என் பக்கத்தைப் பார்த்தார்கள் என்று தெரிய வருகிறது. ஆனால், அவர்கள் நான் எழுதியதை முழுவதுமாக படித்தார்களா என்று தெரிவதில்லை. கமென்ட் கொடுப்பதற்குண்டான வசதியிருந்தும் முகநூல் போலல்லாமல் யாரும் பொதுவாக கமென்ட் கொடுப்பதில்லை. இண்டெர்னெட் வசதி பெருகிவிட்ட பிறகும் சமூக வலைகள் பெருகிவிட்ட பிறகும் பலரும் எழுத்தாளராக முயற்சி செய்து வருகிறார்கள். எல்லோருடைய எழுத்துக்களையும் எல்லோராலும் படிக்க முடிவதில்லை.

மேலும், யாருக்கு எதில் ஆர்வம் இருக்கிறதோ அதை மட்டுமே படிக்கிறார்கள், எழுதுகிறார்கள். நானுமே அப்படித்தான். அமெரிக்காவில் உட்கார்ந்துகொண்டு வெளி உலகத் தொடர்பு என்று சொல்லிக்கொள்ளக் கூடிய அளவிற்கு எதுவுமில்லாத போது எதைப் பற்றி எழுதுவது என்பது எனக்கு ஒவ்வொரு வாரமும் சவால்தான். அமெரிக்க வாழ்க்கையைப் பற்றியே மீண்டும் மீண்டும் எழுதினால் படிப்பவர்களுக்கு போரடிக்கலாம். அதனால் படித்த செய்திகளைப் பற்றி, பார்த்த திரைப்படங்களைப் பற்றி, படித்த புத்தகங்களைப் பற்றியே பொதுவாக அதிகமாக எழுதி வருகிறேன்.

அப்படித்தான் கடந்த வாரம் நான் படித்த புத்தகத்திலிருந்து நான் தெரிந்து கொண்ட ரிச்சர்ட் ப்ரான்சன் என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரைப் பற்றி எழுதினேன். இது போன்ற மனிதர்களைப் பற்றி தெரிந்துகொள்ளும் பொழுது எனது வாழ்க்கையில் எவ்வளவு தவறுகள் செய்திருக்கிறேன், எப்படி என் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ளத் தவறியிருக்கிறேன் என்ற  நினைப்புதான் மேலோங்கி நிற்கிறது. என்னுடைய 68 வயதிலும் உருப்படியாக ஏதேனும் செய்யலாம் என்ற நம்பிக்கை பிறக்கிறது. ஒவ்வொரு நாளும் என்னையே திருத்திக்கொள்ள முயன்று வருகிறேன். இருந்தும் பிறந்து வளர்ந்த காலத்திலிருந்து எனக்குள்ளே நான் ஏற்படுத்திக்கொண்ட பல கருத்துக்கள் என்னைக் கட்டுப்படுத்துவதிலிருந்து இன்னும் மீள முடியவில்லை.

பொதுவாக, NON FICTION புத்தகங்களைப் படிப்பதையே அதிகமாக விரும்புகிறேன். இடையிடையே ஒரு சில க்ரைம் த்ரில்லர்களையும் பொழுது போக்குக்காக படிக்கிறேன். க்ரைம் த்ரில்லர் படங்களையும் பார்க்கிறேன். நான் படிக்கும் புத்தகங்களிலிருந்து மாணவர்களுக்காகவும், ஆசிரியர்களுக்காகவும், பெற்றோர்களுக்காகவும் நான் நடத்தும் வகுப்புகளுக்கு நல்ல கருத்துக்கள் எனக்குக் கிடைக்கின்றன. எழுதுவதற்கும் புதிய புதிய கருத்துக்கள் கிடைக்கின்றன. சிந்தனைகள் எழுகின்றன. அந்த INSPIRATION-ல்தான் என்னுடைய வலையில் ‘தெரிந்ததும் தெரியாததும்’ என்ற தலைப்பில் பல கட்டுரைகள் முன்னால் எழுதியிருக்கிறேன்.

பொதுவாகப் பார்த்ததில் அரசியலைப் பற்றி முக நூலில் எழுதும் பொழுது பலர் ஆதரித்தும் பலர் எதிர்த்தும் கருத்துத் தெரிவிக்கிறார்கள். என்னைப் போலவே பலரும் அரசியல் ரீதியாக வலுவான கருத்துக்களைக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஆனால், மற்ற விஷயங்களைப் பற்றி எழுதும் பொழுது படிப்பவர்கள் மிக குறைவு. முகநூலில் அதிகமாக ‘LIKE’ வாங்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பிலிருந்து விடுபட விரும்புகிறேன். நல்ல விஷயங்களைப் பற்றியே எழுத விரும்புகிறேன்.  

வங்கியில் பணி புரிந்த காலத்திலிருந்தே எனக்கு HUMAN RESOURCES DEVELOPMENT –ஐப் பற்றிய ஈடுபாடு அதிகமிருந்தது. அதன் தொடர்ச்சியாகத்தான் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு YOUTH DEVELOPMENT-ஐ என்னுடைய ஒரு குறிக்கோளாக எடுத்துக்கொண்டு முடிந்த வரை ஒரு சில நடவடிக்கைகள் எடுத்து வருகிறேன். என்னுடைய முயற்சிகள் அடிக்கடி நான் மேற்கொள்ளும் வெளி நாட்டுப் பயணங்களினால் தடைபட்டு ஒரு தொடர்ச்சியில்லாமல் முழுமை பெறாமலேயே இருக்கின்றன. இது ஒரு குறைபாடுதான் என்பதையும் உணர்கிறேன்.

ஆலன் லைட்மேன் என்பவர் எழுதிய ACCIDENTAL UNIVERSE என்ற புத்தகத்தை படித்து வருகிறேன். இந்தப் புத்தகத்தைப் படிக்கும்பொழுது விஞ்ஞானத்தின் கடைசி எல்லையில்தான் வேதாந்தம் அமர்ந்திருக்கிறது என்று தோன்றுகிறது. இந்தப் பிரபஞ்சம் எப்படித் தோன்றியது, தோன்றுவதற்கு எது காரணமாக இருந்திருக்கிறது, கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா, அவர்தான் இந்த உலகத்தைப் படைத்தாரா, ஒரு அணுவுக்குள் இருப்பதும் நிகழ்வதும் தான் இந்தப் பிரபஞ்சத்திலும் இருக்கிறதோ, நிகழ்கிறதோ, விஞ்ஞானத்தால் தெரிந்து கொள்ள முடியாததை வேதாந்தத்தால் தெரிந்துகொள்ள முடியுமா, இந்த உலகம் ஒரு சீரான உலகமா, ஒரு விபத்தா, எல்லாமே MATERIALISTIC என்றால் மனம் என்பதை எப்படி வர்ணிப்பத்து….இப்படிப் பல கேள்விகள் என்னுள்ளேயே எழுகின்றன. ஒரு விஞ்ஞானியால் எழுதப்பட்ட இந்தப் புத்தகம் பல சுவாரசியமான கேள்விகளை எழுப்புகிறது. ஒரு சில இடங்களை ஆழ்ந்து படித்தாலொழிய புரிந்துகொள்வது கடினமாக இருக்கிறது. இது போன்ற புத்தகங்களை தமிழாக்கம் செய்யலாம் என்று தோன்றுகிறது. எப்படித் தொடர்பு கொள்வது என்று புரியவில்லை.

VISHEN LAKHIANI எழுதிய THE CODE OF EXTRAORDINARY MINDS என்ற இன்னொரு புத்தகத்தையும் ஒரு பெண்ணின் நிஜ வாழ்க்கையில் நடைபெற்றதைப் பற்றிய THE CULT NEXT DOOR என்ற புத்தகத்தையும் மாற்றி மாற்றி கொஞ்சம் கொஞ்சமாக படித்து வருகிறேன்.

இடையில் கபாலி படத்தை இணையதளத்தில் பார்த்தேன். ஒரே வார்த்தையில் சொல்வதானால் ‘போர்’ என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. இது போன்ற எவ்வளவோ ஆங்கிலப் படங்களை பார்த்துவிட்டதன் விளைவோ என்னவோ?

GOLIATH என்ற தொலைக்காட்சித் எட்டு பகுதிகள் அடங்கிய தொடரை AMAZON PRIME-ல் பார்த்து முடித்தேன். ஒரு பெரிய வழக்குறைஞர்கள் நிறுவனத்தை முன்பு துவக்குவதற்குக் காரணமாக இருந்த ஒரு வழக்கறிஞர் இப்பொழுது தனது நேரத்தை ‘பார்’களில் கழித்து வீணாக்கிக்கொண்டிருக்கும் வேளையில் ஒரு நண்பரின் வழக்கை நடத்துவதற்கு விருப்பமில்லாமல் ஒத்துக்கொள்கிறார். சிறிது நாட்களிலேயே அந்த வழக்கில் ‘சீரியசா’கி விடுகிறார். தோண்டத் தோண்ட பல பயங்கரமான உண்மைகள் வெளிவருகின்றன.  அவரது வாதத் திறமையால் அந்தப் பெரிய நிறுவனத்தின் முறைகேடுகளுக்காக நீதிமன்றத்தில் தண்டனை வாங்கிக்கொடுக்கிறார். முதல் இரண்டு பகுதிகள் மிகவும் SLOW MOTION-ல் போவது போலத் தோன்றினாலும் மற்ற பகுதிகள் விறுவிறுப்பாகச் சென்றன. மொத்தத்தில் விறு விறுப்பான ஒரு தொடரைப் பார்த்த திருப்தி ஏற்பட்டது. DAVID AND GOLIATH பைபிளில் வரும் மிகவும் சுவாரசியமான எனக்கு மிகவும் பிடித்த கதை. ஒரு பெரிய அரக்கனை எப்படி ஒரு சிறுவன் தனது திடமான இறை நம்பிக்கையினாலேயே வென்றான் என்பதைப் பற்றியது. FAITH என்பது வாழ்க்கையில் ஒரு முக்கியமான தேவை என்பதை உணர்த்தும் கதை. இதை என்னுடைய SHORT STORIES FOR YOUNG READERS: FOR PERSONALITY DEVELOPMENT என்ற புத்தகத்தில் பயன்படுத்தியிருக்கிறேன்.  இதே DAVID AND GOLIATH என்ற தலைப்பில் MALCOM GLADWEL எழுதிய இன்னொரு சுவாரசியமான புத்தகத்தை ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு படித்திருக்கிறேன்.

                                                            …அடுத்த வாரம் மீண்டும் சந்திக்கலாம்

Sunday, August 28, 2016

Free download of my book: Short Stories for Young Readers: For Personality Development

For a limited period window, commencing today, the 28th August 2016 till the Saturday, the 3rd September 2016 my last e-book of short stories : SHORT STORIES FOR YOUNG READERS: FOR PERSONALITY DEVELOPMENT is available for free downloading from www.pothi.com. Readers can download this book and enjoy reading. Please remember to give your review of the book.
T. N. Neelakantan
www.tnneelakantan.com
www.neel48.blogspot.com
neelkant16@yahoo.com

Sunday, July 31, 2016

QUEST 2016 - QUIZ COMPETITION FROM L. N. CHARITABLE TRUST, MELAGARAM, TENKASI

L.N.Charitable Trust successfully conducted QUEST 2016 – Quiz Competition on “India, Its States, and Important Cities” – the 3rd such competition in the series - on Saturday, the 30th July 2016 at M K V Kandasamy Nadar Matriculation Higher Secondary School, Tenkasi. Students studying in class 6, 7, and 8 in the Matriculation and CBSE schools were eligible to participate in the Quiz Competition. This time, we sent invitations to several more schools located in the interior rural centers like Sankarankoil, Vasudevanallur, Sivagiri, Vikramasingapuram, Cheranmahadevi, Alangulam, and Mukkudal. I also met several schools in these interior places personally to encourage their participation in the Quiz Competition.........


Monday, February 23, 2015

Kalam’s charm floors audience - The Hindu

Kalam’s charm floors audience - The Hindu

http://www.thehindu.com/news/national/life-is-much-bigger-than-exams-says-modi/article6922540.ece


The week seems to have made a good beginning with two news items - some glorious advice from the Prime Minister and the former President of India relevant to the student community. It is time, people ponder over the issues mentioned for greater benefit and prosperity of the youth of India.


We would need to dovetail the remarks mentioned by the two leaders with our education system and revamp it completely so that the nation offers the best learning environment to one and all.

Monday, October 20, 2014

ARCADIA 2014 CONTESTS

L.N.Charitable Trust, Melagaram, Tenkasi had adopted the acronym “SAKTHIY” as our mascot. “SAKTHIY” Stands for Advancement of Knowledge, Talent, Harmony and Integrity among Youth.

As part of our efforts towards Youth Development, the Trust conducted ARCADIA 2014 contests on Saturday, the 18th October, 2014. The contests were held among the children studying in Class 6 to 8 in Government and Government Aided schools within Tenkasi Education District. Despite heavy rains the previous day, 389 children from 16 schools participated in the 10 different contests held in the premises of Bharat Montessori Matriculation Higher Secondary School, Ilanji. The winner of every contest was awarded a cash of Rs.1000 as first prize, Rs.500 as second prize and Rs.200 as third prize, besides cups, medals and certificates. The event was coordinated by the Tenkasi-Shencottai Public Library Vasagar Vattam. Bharat Montessory Higher Secondary School and its teachers and volunteers conducted the contests on behalf of the Trust. Sri Mohana Krishnan, Correspondent of BHARAT gave away the prizes to the winners. Selvi Karthika and Selvi Punitha gave a dance performance during the prize distribution ceremony.

L.N.Charitable Trust thanks the Bharat management and its team, the Tenkasi-Shencottai Public Library Vasagar Vattam and its office bearers for the successful conduct of the contests.


L.N.Charitable Trust lauds all the participating schools and their children and wish them a bright future.

























Friday, September 26, 2014

பகுதி 7: வெற்றிப் பாதைக்கு ஏழு விதமான பெர்ஸனாலிடிகள் 2. திடமான நோக்கமுடைய பெர்ஸனாலிடி………. யின் தொடர்ச்சி

என்னடா, “3-2-1” என்ற யுக்தியைப் பற்றி அடிக்கடி என் கட்டுரையில் எழுதுகிறேனே என்று நீனைக்கிறீர்களா?. அதற்குக் காரணம் இருக்கிறது

நமது செயல்பாடுகளில் பெரும்பாலானவை தன்னிச்சையாக  நமது ஒத்துழைப்பு இல்லாமலேயே நடந்து கொண்டிருக்கின்றன. கண்ணை மூடிக்கொண்டு சாப்பிட்டால் கூட, நமது கை உணவை சரியாக வாய்க்குத்தான் எடுத்துக்கொண்டு போகும். நமது மூச்சு, உணவு ஜீரணம், தூக்கம், இரத்த ஓட்டம், மலஜலம் கழிப்பது போன்ற எல்லாமே தானாகவே யாரோ பொருத்தி வைத்த ஒரு ப்ரோகிராமின் படி ஒழுங்காக நடந்துகொண்டிருக்கிறது.
அதே போல மனதின் எண்ணங்களும் நமது ஆழ்மனதில் பதிந்துவிட்ட சில அபிப்பிராயங்கள், சில நினைவுகளின் தாக்கல்கள், வலிகள், காயங்கள், மகிழ்ச்சிகளின் அடிப்படையிலேயே தன்னிச்சையாக அமைகின்றன. அதாவது ஒரு உணர்வுள்ள விழிப்பு நிலையிலிருந்து தோன்றுவதில்லை. கோபம், பயம், தற்காப்பு, பொறாமை, துக்கம் போன்ற பல உணர்ச்சிகள் தாமாகவே, நீங்கள் முயலாமலேயே எழுகின்றன. நீங்கள் கோபப்பட வேண்டும் என்று நினைத்து கோபம் எழுவதில்லை. பயப்பட வேண்டும் என்று நினைத்து பயம் தோன்றுவதில்லை. தானாகவே ஒரு சில விசையின் தூண்டுதலால் எழுகின்றன. ஆழ்மனதில் நம்மை அறியாமலேயெ பல காரணங்களினால் பதிந்துவிட்ட கருத்துக்களின் தூண்டுதலால் எழுகின்றன. ஆழ்மனதில் பதிந்த எண்ணங்களின் வேகத்தை, உறுதியைப் பொருத்து நமது எண்ணங்கள் அமைகின்றன எண்ணங்களின் உறுதியைப் பொறுத்து செயல்கள், எதிர் வினைகள் அமைகின்றன.

ஆழ்மனதில் பதிந்துவிட்ட நினைவுகளின் தாக்கத்தினால் நம்மை அறியாமலேயே ஏற்படும் பயம், தற்காப்பு, கோபம், பொறாமை, துக்கம், எதிர்மறை கருத்துக்கள், எதிர்மறை உள் உரையாடல்கள் போன்ற உணர்ச்சிகளை, விழிப்பு நிலையிலிருந்து மாற்றுவது மிக மிகக் கடினம். முடியாதென்று கூட சொல்லலாம். ஆனால், நம்மை ஆழ் நிலைக்கு எடுத்துக்கொண்டு போய், அந்த நிலையிலிருந்து பல விஷயங்களை ஆராய்ந்து பார்க்கும்பொழுது உண்மை தானாகவே புலப்படுகிறது. அந்த ஆழ்  நிலையிலிருந்து எதிர்மறை எண்ணங்களை மாற்றுவதில் அதிக சிரமம் இருக்காது. இது மனோதத்துவ விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு.

மூளை வேறு. மனம் வேறு. மூளை மண்டையில் இருக்கிறது. மனம் உடம்பு முழுவதும் வியாபித்திருக்கிறது. ஒவ்வொரு உயிர்அணுவுக்கும் மனம் இருக்கிறது. தியானம் செய்தல், பிரார்த்தனை, ஹிப்னோடிசம், மெஸ்மெரிஸம் போன்ற மனதை வயப்படுத்தும் முறைகள் மூலம் ஆழ்மனதிலிருந்து தோன்றும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என்று விஞ்ஞானிகள் கண்டுகொண்டிருக்கிறார்கள்.

சில்வா ஜோஸின் 3-2-1 என்ற பயிற்சி உங்களை ஆழ்மனதுக்கு எடுத்துச்சென்று பல எதிர்மறை எண்ணங்களை நீக்கவும், உறுதிமொழி எடுப்பதற்கும், உங்களையே நீங்கள் மாற்றிக்கொள்ளவும் பயனுள்ளதாக அதை தொடர்ந்து பயின்றவர்கள் கூறுகிறார்கள்நானும் தொடர்ந்து பயிற்சி செய்து நல்ல பலனைத் கண்டிருக்கிறேன். அதனால்தான் 3-2-1 என்ற பயிற்சியைப் பற்றி அடிக்கடி சொல்கிறேன். செலவில்லாத ஒரு பயிற்சி. ஏன் செய்து பார்க்கக்கூடாது.

அடுத்த பெர்ஸனாலிடி வகைகளைப் பற்றி இனி பார்ப்போம்

3.சுயமரியாதையுள்ள பெர்ஸனாலிடி

உங்களைப் பற்றி நீங்கள் என்ன அபிப்பிராயம் கொண்டிருக்கிறீர்கள் என்பது உங்களுடைய பெர்ஸனாலிடியை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று ஏற்கெனவே நான் சொல்லியிருக்கிறேன். உங்கள் குறை, நிறைகளுடன் எவ்வளவு தூரம் உங்களை நீங்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள் என்பது ஒரு முக்கியமான கேள்வி.

பலர் ஏற்றுக்கொள்வதில்லை. அதனால் பல போராட்டங்கள். பரிணாம வளர்ச்சியின் ஒரு பகுதியாக மிருகங்களிலிருந்து நமக்கு வந்த தற்காப்பு உணர்ச்சி காரணமாக, நம்முடைய உண்மயான தோற்றத்தை மறைத்துக்கொள்ள முகமூடி போட்டுக்கொள்கிறோம். மற்றவர்களைக் குறை கூறுகிறோம். இல்லாத ஒரு உருவத்தை இருப்பதுபோல மற்றவர்களுக்கு காட்டிக்கொள்கிறோம். ‘நான் சரிதான், நீதான் சரியில்லைஎன்று நாடகமாடுகிறோம்.

நம்மை நாமே ஏற்றுக்கொள்வதுமில்லை, நேசிப்பதுமில்லை. நம்மில் பலருக்கு  நம்மையே பிடிப்பதில்லைநம் தோற்றத்தை, எண்ணங்களை, குணங்களை, நடையுடை பாவனைகளை, செயல்களை, பழக்க வழக்கங்களை, வெறுக்கிறோம். மாற்ற வேண்டுமென்று ஆசைப்படுகிறோம். ஆனால் மாற முடியவில்லை. அதனால் கோபப்படுகிறோம். ஆழ் மனதில் ஏற்பட்ட சில காயங்களின் தாக்குதலினால், ஒரு விதமாக சிந்திக்கவோ, செயல்படவோ பழகிக்கொண்டு விட்டோம். அந்தப் பழக்கத்தை விடவும் முடியவில்லை. மாற்றவும் முடியவில்லை. அதனால் கோபம். அந்தக் கோபத்தை மற்றவர்கள் மீது காட்டுகிறோம். நம்மை விட மேலான நிலையில் இருப்பதாக நாம் நினைக்கும் சிலரை வெறுக்கிறோம்.

நம்மை நாமே வெறுக்கிறோம். நம்மை நாமே மறுக்கிறோம். இதுதான் பலரது உண்மை. ஆனால் வெளியே தெரியாது. காட்டிக்கொள்ளவும் மாட்டோம்.

இருக்கிற நிலையை ஏற்றுக்கொள்வது என்பது மிகவும் முக்கியம். ஏற்றுக்கொண்டால்  
  • நமது போராட்டம் நின்றுவிடும்
  • நமது செயல்களால் ஏற்படும் பலன்களுக்கு நாம் பொறுப்பேற்றுக்கொள்ளத் தொடங்கி விடுவோம்
  • நமது எண்ணங்களை, செயல்களை, ஆராயத் தொடங்கிவிடுவோம். நமது எண்ணங்கள், செயல்கள், பேச்சுக்கள் எப்படி நம்மையும், மற்றவர்களையும் பாதிக்கின்றன என்பது நமக்குப் புரிய வரும். நம் எண்ணங்கள், செயல்கள், பேச்சுக்கள் நமக்கு உதவவில்லை என்பதை உணர்ந்து கொள்வோம்
  • நம்மை நாமே மாற்றிக்கொள்ள தயாராகி விடுவோம். மற்றவர்கள் மாற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நம்மிடம் இல்லையென்றால், நம்மை நாமே மாற்றிக்கொண்டுவிட்டால் மற்றவர்களுடன் நமக்கு இருக்கும் உறவுமுறை சீரடையத் தொடங்கிவிடும். உதவிகள் தானாகவே, கேட்காமலேயே வரும்
  • மற்றவர்களுக்கும் நம்மைப் பற்றிய அபிப்பிராயங்கள் மாறத் தொடங்கிவிடும்
  • நம்மை நாமே மதிக்கத் தொடங்கி விடுவோம். சுய மரியாதை உயரும். நமக்குள் ஒரு பெருமை தோன்றத் தொடங்கும். மகிழ்ச்சி உண்டாகும்
  • மற்றவர்களைப் பற்றி மதிப்பீடு செய்வதை நிறுத்துவீர்கள்
  • தன்னுறுதியில் நின்று செயல்படத் தொடங்குவீர்கள்

பாருங்கள் எவ்வளவு நன்மைகள் உண்டாகின்றன. இந்த நிமிடமே உங்களை நீங்கள் ஏற்றுக்கொள்ளத் தொடங்கலாமே!

                                                                    தொடரும்…………………..