Total Pageviews

Showing posts with label Novels by T N Neelakantan. Show all posts
Showing posts with label Novels by T N Neelakantan. Show all posts

Friday, July 21, 2017

21.07.17 Check Dams

21.07.17 Check Dams

My motivation to write about check dams emanates from a report titled “Check Dam could address salinity,” I happened to read in today’s The Hindu.  

I have written and published an English novel titled: WHAT, IF OUR DREAMS COME TRUE! AN UNCOMMON MEETING WITH LORD SIVA. The book is about the life experience of an enlightened individual and his struggles and achievements, told in first person. Of course, for the narrator, it was no struggle or achievement – just finishing the agenda for which he came into being.

Here are the 7 of my dreams that eventually found their way into the book:
1.     Preventing flash floods by building check dams across         several small rivers
2.     Protecting the centuries-old assets of the temples from the     exploiters
3.     Eradicating begging, especially child begging
4.     Developing Sports in India as a Movement and make           many youngsters world-class champions
5.     Providing true autonomy to village administration (Gram     Swarajya on the models dreamed about by Gandhiji to         help rural development)
6.     People’s integration through people’s interdependence

The 7th is: For an individual to fight for these dreams he would need to be highly enlightened so that he is fearless, honest, determined, have no self-interest, maintains inner integrity, and loves our nation. Gandhiji was one such person in our recent history. He was also one of the most difficult to understand. That was the kind of narrator of this story in the book.

While preparing for the book, I tried to do some detailed research on all the seven topics.

While searching for ways to prevent flash floods, I came across several articles written by various professionals supporting construction of check dams, vis-à-vis, big water reservoir dams, which serve other purposes like generation of electricity etc. I learnt that check dams were effective in preserving the ground water potential, preventing flash floods, and protecting the flora and fauna of the region; they need less money, can be organized with local indigenous labor, don’t need enormous technological support, and so on. So, I borrowed the idea and built one whole episode, where the hero of the novel went about organizing construction of check dams on the hilly terrains across Tamirabarani River.

In the same way, in another episode, the people of a group of villages decide to construct another check dam in another place with their own personal finances and borrowing from the banks, rather than relying and waiting for the government to decide, plan and construct. Here, the question was: Do the people of a group of villages have the power to decide what development project they need and how they want to go about implementing the project?

Now, the current news report says check dams can present salinity of the water too.

There are 7 episodes in the book, each depicting approximately 7 years of life of the narrator, in 7 different places, along the River Tamirabarani – all abodes of Lord Siva.


The book: WHAT, IF OUR DREAMS COME TRUE! AN UNCOMMON MEETING WITH LORD SIVA is available on www.pothi.com, I would recommend this book to every avid reader. Books are great gifts. Please buy one today. Send your comments on the book. Greetings!

Saturday, July 08, 2017

“கிள்ளியூரில் பிறந்தது ஒரு கதை” - என்னுடைய புதிய குறு நாவல்

07.07.17


நான் எழுதிய “கிள்ளியூரில் பிறந்தது ஒரு கதை” என்ற குறு நாவல் நேற்று போத்தி.டாட்.காமில் ஈ-புத்தகமாக வெளியிடப்பட்டது. தற்போதைக்கு விலை கிடையாது. இலவசமாக இந்தப் புத்தகத்தை வாங்கிப் படிக்கலாம். படித்து மகிழுங்கள். உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கவும்.


Sunday, January 01, 2017

01.01.17 இந்த வார நாட் குறிப்பு

01.01.17 இந்த வார நாட் குறிப்பு

ஆங்கிலத்தில் நான் எழுதும் புதிய முழு நீள கதைப் புத்தகமான LONELY II –வை கடந்த வாரத்தில் தொடங்கியிருக்கிறேன். LONELY முதல் புத்தகத்தைப் படித்த பலர் அதைப் பற்றி நல்ல அபிப்பிராயம் கொடுத்தது என்னை இரண்டாவது புத்தகத்தை எழுத தூண்டியிருக்கிறது. முதல் புத்தகத்தில், தன் மனைவி கௌரியுடன் அமெரிக்கா செல்ல விருப்பமில்லாமல் திரு மணி சங்கர் மனைவியை விமானத்தில் ஏற்றிவிட்ட கையோடு திடீர் உந்துதலால் தன்னிடம் இருக்கும் ஒரே தோள்பையை மட்டும் சுமந்துகொண்டு இமயமலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் ஜோஷிமட் என்ற இடத்துக்குத் தனிமையைத் தேடிப் போகிறார். அங்கே, எதிர்பாராத விதமாக, ஷர்மிலி என்ற மனநிலை குன்றிய ஒரு பெண், ஒரு உணவு விடுதியில் வேலை செய்யும் கோபி என்ற ஒரு ஆதரவற்ற இளைஞன், தனது இளவயது நண்பரும் காதலியுமான பூமிகாவின் மகளான சித்ரா என்ற கிறிஸ்துவ சகோதரி பீட்ரீஸ், ஓடிப்போன தனது மனைவியை நினைத்து மனதிலேயே புழுங்கிக் கொண்டிருக்கும் கேர்னல் பணிக்கர், ஹரித்வார் கும்பமேளாவில் தங்கள் பையனை தவறவிட்ட ராஜஸ்தானைச் சேர்ந்த டாக்டர் விக்ரம், டாக்டர் சோனியா தம்பதிகள், இமாலயத்தில் தீர்த்த யாத்திரை சென்ற போது ஏற்பட்ட ஒரு விபத்தில் மனைவியை இழந்த கோவில் பூஜாரி மிஸ்ரா இவர்களை சந்திக்கிறார்.  அவர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் தன்னுடன் பிணைந்திருப்பதையும் அவர்கள் ஒவ்வொருவரின் சோகத்துக்கும் தான் ஒரு அருமருந்தாக இருப்பதையும் மணி சங்கர் ஜோஷிமட்டில் தங்கியிருக்கும் ஒரு சில மாதங்களில் கண்டுகொள்கிறார். தன் இளவயதுக் காதலை மனைவி கௌரியிடமிருந்து மறைத்து வைத்த இதய பாரத்தையும் அங்கே இறக்கி வைக்க நேருகிறது. ஒரு சில நாட்கள் தனிமையில் கழிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு ஜோஷிமட் சென்ற மணி சங்கருக்கு அங்கே கிடைத்த புதிய நட்பு வட்டாரம், அவர்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட பல சோகங்கள், அந்த சோகங்களை நீக்குவதற்கு எப்படி தன்னை அறியாமலேயே தான் ஒரு கருவியாகப் பயன்பட்டிருக்கிறார் என்பது போன்ற மனதைப் பிழியவைக்கும் பல சம்பவங்களின் பின்னணியில் LONELY கதை அமைக்கப்பட்டிருந்தது. இந்தக் கதையைப் படித்து ஒரு சிலர் கண்ணீர் விட்டதாகவும் எனக்கு எழுதியிருந்தது எனக்கே பெருமையாக இருக்கிறது.

LONELY II-வில் மணி சங்கர் தனது குழந்தைகளின் விருப்பத்தை தட்ட இயலாமல் அமெரிக்கா செல்வதற்கு விமானம் ஏறுகிறார். எப்பொழுதும் தனிமையையே விரும்பும் மணி சங்கருக்கு அவரது அமெரிக்க பயணத்தின் போது என்ன நடக்கிறது என்பதுதான் LONELY II-வின் கதை.

LONELY முதல் புத்தகத்தை கண்டிப்பாகப் படித்துப் பாருங்கள். www.pothi.com என்ற வலைப்பக்கத்தில் கிடைக்கும். கூகுள் தேடலில் LONELY www.pothi.com என்று தட்டினால் போதும். அந்த வலைப் பக்கத்துக்குப் போய்விடலாம். அச்சடிக்கப்பட்ட புத்தகத்தின் விலை கொஞ்சம் அதிகம்தான். ஏனென்றால் PRINT ON DEMAND என்ற ப்ளாட்ஃபாரத்தில் அந்தப் புத்தகத்தை ஒவ்வொன்றாக ஆர்டர் வர வர அச்சடித்துக் கொடுக்கிறார்கள். அதே வலையில் என்னுடைய இன்னொரு நாவலான THE PATH என்ற புத்தகமும் கிடைக்கும்.

விரைவில் இந்த இரண்டு புத்தகங்களையுமே eBook –ஆக வெளியிட உத்தேசம்.

கடந்த வாரத்தில் 1) THE CODE OF THE EXTRAORDINARY MINDS 2) THE CULT NEXT DOOR AND 3) BRIDGE OF SPIES என்ற மூன்று புத்தகங்களை ஒரே நேரத்தில் வாசிக்கத் தொடங்கியிருக்கிறேன். நான் தான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேனே, அமெரிக்கா வந்தால் புத்தகங்களும் பொது நூலகமும்தான் என்னுடைய நெருங்கிய தோழர்கள் என்று. THE DIARY OF HARRY FOX என்ற உப்பு சப்பில்லாத ஒரு புத்தகத்தை அதில் என்னதான் இருக்கிறது என்று கண்டு பிடிப்பதற்காக படித்துத் தீர்த்தேன். ஏற்கெனவே எனக்குத் தெரிந்த ஆங்கில எழுத்தாளர்களின் சமீப கால புத்தகங்களில் மீண்டும் மீண்டும் அரைத்த மாவையே திரும்பத் திரும்ப அரைக்கிறார்கள் என்ற உணர்வு எனக்கு வந்து விட்டது. ஆரம்ப எழுத்தாளனான எனக்கும் நாளாவட்டத்தில் இது நடக்கலாம் என்ற அறிவும் எனக்கு இருக்கிறது. ஒரு கலைஞனுக்கு கற்பனை வளம் நாளாக நாளாக குறைந்து விடும் போலிருக்கிறது. ஆரம்பகாலத்தில் இருந்த சூடு போகப் போகக் குறைந்து விடுகிறது. ஏ.ஆர். ரகுமான் சமீபத்தில் எங்கேயோ குறிப்பிட்டிருந்தார், ‘எனக்கும் வயதாகிறது. முன்னைப் போல் இல்லை’ என்று. அது அவரின் இசையிலும் தெரிகிறது. முன்னர் இந்தச் சரிவு எம்.எஸ்.விஸ்வனாதன், இளையராஜா இருவருக்கும் நேர்ந்திருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்களான NEALE DONALD WALSCH, DEEPAK CHOPRA, DAVID BALDACCI, JOHN GRISHAM போன்ற பலருக்கும் நேர்ந்திருக்கிறது. முக்கியமாக, வியாபார நோக்கத்தோடு கலையைத் தொடர்கிற போதுதான் இந்தக் கற்பனைச் சரிவு அதிகமாக ஏற்படுகிறது என்று நினைக்கிறேன்.

கடந்த வாரம் ரஜனிகாந்த் நடித்த கபாலி படத்தை வலையில் முதன் முதலாகப் பார்த்தேன். ஜவ்வு போல இழு இழு என்று இழுத்துக்கொண்டு போன இந்த படத்துக்கு நடிக்க ரஜனிகாந்த் எப்படி ஒத்துக்கொண்டார் என்று தெரியவில்லை. பழைய GOD FATHER படத்தை ரீமேக் செய்தது போலத் தோன்றியது. என்ன செய்வது ரசிப்பதற்கு மக்கள் இருக்கிறார்கள். WHAT THEY DESERVE THEY GET.

அதே போல வலையில் ‘தொடரி’ என்று ஒரு படம் பார்த்தேன். பரவாயில்லை. பல ஆங்கிலப் படங்களைப் பார்த்துப் பார்த்து INSPIRATION என்ற பெயரில் எடுத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். ஆனால், காமெடி என்ற பெயரில் அவர்கள் செய்யும் கலாய்ப்புதான் சகிக்க முடியவில்லை.

இந்த முறை அமெரிக்கா வந்த பிறகு யோகா பயிற்சியை முன்னைவிட அதிக  நாட்களில் செய்து வருகிறேன் என்பதில் எனக்கு ஒரு திருப்தி.

பேரக் குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸுக்காக பள்ளி விடுமுறையென்பதால் அவர்களுடன் அதிக நேரம் செலவிட முடிகிறது. அவர்கள் எனக்கு நிறைய பொறுமையைக் கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எப்பொழுதும் ஏதேனும் செய்த வண்ணம் இருக்கும் நான் எதுவும் செய்யாமல் அவர்கள் ‘லெவலு’க்கு கீழிறங்கி வந்து நேரத்தைச் செலவிடுவதைத் தொடர்ந்து கற்றுக்கொண்டு வருகிறேன்.

ஃபீனிக்சில் பருவ நிலை நன்றாக இருக்கிறது. பாலைவனப் பகுதியானதால் காலையும் மாலையும் மிதமான குளிரும் பகல் நேரத்தில் நல்ல சூரிய வெளிச்சமும்  நிலவுகிறது.

இந்த வாரத்தின் மூன்று முக்கிய நிகழ்வுகளான 1) அ.தி.மு.காவில் சசிகலாவின் பதவியேற்பு 2) அதிக மதிப்புள்ள ரூபாய் 500 மற்றும் 1000  நோட்டுக்களை வங்கியில் செலுத்துவதற்குண்டான கால அவகாசம் 31.12.2016-ஓடு முடிவடைவது, பிரதமரின் உரை, முந்தைய நிதி மந்திரி சிதம்பரத்தின்  நேர்காணல், வருமான வரித்துறையின் தடாலடியால் வெளியே வரும் கோடி கோடியான கறுப்புப் பணம் மற்றும் 3) உ.பி யில் அப்பாவும் பிள்ளையும் பதவிக்கு அடித்துக்கொள்ளும் நாடகம் இவையெல்லாமே ஒரு விதத்தில் மனக் கலக்கத்தை ஏற்படுத்துகின்றன. நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் என்று நினைத்தால் வருத்தமாகத்தான் இருக்கிறது. நான் ஏற்கெனவே எழுதியபடி மக்கள் இப்பொழுதாவது சுதாரித்துக் கொண்டு புத்திசாலித்தனமாக நடந்து கொண்டால்தான் அவர்களின் கர்மவினைப் பலன்களிலிருந்து தப்பிக்க முடியும் என்று நம்புகிறேன். WE GET WHAT WE DESERVE என்பதை முழுவதுமாக நம்புகிறேன். நமது தகுதியை மேம்படுத்திக்கொள்வதன் அவசியத்தை இவை உணர்த்துகின்றன. நாம் எல்லோரும் ஒருவருக்கொருவர் ஏதோ ஒரு விதத்தில் பிணைக்கப் பட்டிருக்கிறோம். அதனால் சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் செய்யும் காரியங்களுக்கு அவர்களுடன் நாம் பிணைக்கப்பட்டிருக்கிறோம் என்ற ஒரே காரணத்தினால் எல்லோரும் அந்தச் செயல்களின் விளைவுகளை அனுபவித்தேயாக வேண்டும். இதிலிருந்து தப்பிக்க முடியாது. எல்லாம் வல்ல இறைவன் நம்மைக் காக்கட்டும்.

வேதத்தில் சொல்லியிருக்கிற “சஹனாவவது. சஹனௌபுகத்து. சகவீர்யம் கர்வாவஹை. தேஜஸ்வி. நா அதீதமஸ்து. மா வித்விஷாவஹை: ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி://” என்ற மந்திரத்தை மீண்டும் மீண்டும் நாம் எல்லோரும் சொல்வது மிகவும் அவசியம் என்று கருதுகிறேன்.

“(எல்லாம் வல்ல அந்த) இறைவன் நம்மைக் காக்கட்டும்.  நமக்கு சக்தியளித்து ஊக்குவிக்கட்டும். எல்லோரும் ஒன்றாக இணைந்து சக்தியுடனும், உற்சாகத்துடனும் உழைப்போமாக.  நாம் கற்பது நல்லதாக இருக்கட்டும். கற்பது நம்மை மேம்படுத்தட்டும். நம்மை விரோத மனப்பான்மையிலிருந்து விலகியிருக்கச் செய்யட்டும். எங்கும் அமைதி நிலவட்டும்.”

நன்றி. எல்லோருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.


                                                …மீண்டும் சந்திக்கலாம்

Wednesday, November 30, 2016

Sulochana Mudaliar Bridge at Tirunelveli across the river Tamirabarani

04.12.16 இந்த வார நாட்குறிப்பு

கடந்த வாரத்தில் ஒரு நாள் திருநெல்வேலிக்கு சென்று வந்தேன். பாளையங்கோட்டை செல்லும் வழியில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே அமைந்திருக்கும் சுலோச்சன முதலியார் பாலத்தை கடந்து சென்றேன். அன்றோடு (27.11.16) அந்தப் பாலத்துக்கு 174 வயதாகியிருப்பதாக முத்தாலம் குறிச்சி காமராசு அவர்களின் முக நூலில் படித்தேன்.

நான் பள்ளியிலும், கல்லூரியிலும் படித்த காலத்தில் அந்தப் பாலம் வழியாக பல முறை நடந்து சென்றிருக்கிறேன்.  நாங்கள் வசித்தது திருநெல்வேலி டவுணில். என் அப்பாவும் பெரியப்பாவும் பாலத்தின் ஒரு புறம் கொக்கிரகுளம் பகுதியில் அமைந்திருந்த நீதிமன்றத்தில் எழுத்தர்களாக (க்ளெர்க்காக) வேலை பார்த்து வந்தார்கள். (இப்பொழுது அந்த வளாகம் பாளையங்கோட்டைக்கு மாற்ற்ப்பட்டு விட்டது) ஒரு சில ஆண்டுகளில் அவர்கள் இருக்கையும் எதிரெதிரேயே இருந்தது. ஒரு சில நாட்களில் என் அப்பாவுக்கு சாப்பாடு எடுத்துகொண்டு போவேன்.  நீதிமன்ற வளாகத்தில் ஒரு கேன்டீன் உண்டு. என் பெரியப்பா பெரும்பாலும் அங்கேதான் மதிய உணவைக் கழித்துக்கொள்வார். நான் எப்பொழுது போனாலும் அந்த கேன்டீனிலிருந்து வடை, அல்வா, ரவா கேசரி வாங்கிக் கொடுப்பார். அதற்காகவே அங்கே பல முறை சென்றிருக்கிறேன். கேன்டீனிலிருந்து சுவையான உணவு தயாராகிக் கொண்டிருக்கும் நறுமணம் காற்றில் எப்பொழுதும் மிதந்து கொண்டிருக்கும். கலெக்டர் அலுவலகமும் அந்த பகுதியிலேயே அமைந்திருந்தது. ஆற்றுப் பாலத்தைக் கடக்கும் பொழுது தூரத்தில் பனிமூட்டங்களுக்கூடே ரயில் பாலத்தையும் பார்க்கலாம்.

ஆற்றின் கரை கொக்கிரகுளம் பகுதியில் பெரிய மேடாக உயர்ந்து நிற்கும். பக்கவாட்டில் ஓங்கி வளர்ந்த மரங்கள். பார்ப்பதற்கு அருமையாகவும், குளுமையாகவும் இருக்கும். பரந்தவெளியில் குளிர்ந்த காற்று எப்பொழுதும் சிலு சிலுவென்று வீசிக்கொண்டிருக்கும். ஆற்றின் மறுபுறம் (இன்றும் போல) அன்றும் பன்றிகளின் கூட்டம் சுற்றிக்கொண்டிருக்கும். அதற்கு நடுவே எருமை மாட்டை குளிப்பாட்டிக் கொண்டிருப்பார்கள். பல வண்ணான்கள் துணி துவைத்துக் கொண்டிருப்பார்கள். இது எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஒரு சிலர் ஆற்றில் குளித்துக்கொண்டும் இருப்பார்கள். இப்படி என் எண்ணங்கள் அந்தப் பாலத்தைக் கடந்து செல்லும்பொழுது வேகமாக ஓடிக்கொண்டிருந்தன.

என்னுடைய இந்த நினைவுகளையே என்னுடைய “WHAT, IF OUR DREAMS COME TRUE! AN UNCOMMON MEETINGWITH LORD SIVA”  என்ற நாவலில் கதையின் கதாநாயகன் அந்த ஆற்றுப்பாலத்தை கடந்து வரும்பொழுது அனுபவித்ததாக எழுதியிருந்தேன். அந்தப் புத்தகத்திலிருக்கும் பகுதியை கீழே கொடுத்திருக்கிறேன். நீங்களும் படித்து ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

Chapter 35

As I stepped out of the District Collector’s office, I remembered Ambalam, the mendicant at Papanasam who shared with me the gory stories about the flash floods in the river Tamirabarani. My accidental meeting him eventually led to my long stay at Papanasam for seven years and we ended up, eventually, building water dams, to prevent flash floods in those hilly Podhigai regions. 

As I walked along the raised banks of the river Tamirabarani at Kokkirakulam where the District Collector’s office was housed in Tirunelveli, I passed by the offices and courts of the district and sessions judges. A cool wind was blowing crisscrossing the river, carrying with it a pleasant aroma from the court canteens that prepared very delicious halwa and vadai. From the elevations, I looked at the serene river below, flowing down quietly. I had heard that the river Tamirabarani never dried up in its history. At the far end behind me, I could see the silhouette of the railway bridge and a train passing over. Thanks to the British, India today had railways, bridges, and canals. On the other bank of the river, several pigs were scavenging for food even while dhobis were busy washing clothes beating them on small rocks. Buffaloes and bullocks were getting a cool bath in the river alongside the people. I walked along the more-than-half-a-century-old Sulochana Mudaliar bridge across Tamirabarani. I remembered someone telling me that several decades back, the philanthropist Sulochana Mudaliar built this bridge, entirely out of his personal wealth, to help villagers cross the river. The bridge was made of stones, brick and mortar and had stood firm over the years. Later, when the government wanted to lay a new wider bridge across the river, they couldn’t break any of the then existing structures. So they had to change their plan and the design and be satisfied with just widening the already existing bridge, by erecting additional pillars to support them. I reached the central bus stand at Tirunelveli Junction and took a bus to Papanasam where I went straight to my Lord’s temple.


என்னுடைய “WHAT, IF OUR DREAMS COME TRUE! AN UNCOMMON MEETING WITH LORD SIVA” நாவலைக் கண்டிப்பாக படித்துப் பாருங்கள். உங்கள் ஒவ்வொருவருக்கும் நிச்சயமாக பிடிக்கும். இந்தப் புத்தகம் www.pothi.com என்ற வலைதளத்தில் கிடைக்கும். விலை கொஞ்சம் அதிகம்தான். குறைக்க முடியவில்லை. ஏனென்றால் PRINT ON DEMAND என்ற அச்சடிக்கும் முறையில் ஒவ்வொரு புத்தகமாகக் கூட அச்சடித்துக் கொடுக்கிறார்கள். ஆஃப்செட்டில் அச்சடிக்கப்படுவதில்லை.