Total Pageviews

Saturday, September 30, 2017

30.09.17 நவராத்திரியும் நானும்

30.09.17 நவராத்திரியும் நானும்

நவராத்திரி கொலுவில் மட்டும் என்றில்லை, பொதுவாக எந்த பூஜைகளிலும் முன்பெல்லாம் நான் அதிக ஈடுபாடு காட்டியது கிடையாது. நாங்கள் சிறுவர்களாக இருந்த பொழுது எங்கள் வீட்டிலும் கொலு வைத்தது உண்டு. எங்கள் அம்மாவுக்கு கொலு, பஜனை, பாட்டு, கச்சேரி இதிலெல்லாம் நிறைய ஆர்வம் உண்டு. ஒரு காலக் கட்டத்தில் எங்கள் வீட்டில் கொலு வைப்பதும் நின்று போய் விட்டது. ஆனால், திருமணமான பின்பு என் வீட்டிலும் இதுவரை கொலு வைத்ததில்லை.

அடிக்கடி மாற்றல் நடக்கும் வங்கி வேலையில் இருந்ததால் நவராத்திரி நேரத்தில் பல ஊர்களில் இருந்திருக்கிறோம். அசாம் கௌஹாத்தியில் இருந்த சமயம் பல துர்கா பூஜா பந்தல்களுக்குப் போய் வந்த ஞாபகம் இருக்கிறது.

நவராத்திரி பூஜையில் முழு ஈடுபாடு ஏற்பட்டது ஸ்ரீஅம்மா பகவானின் இயக்கத்தில் இருந்த சமயத்தில்தான்.  நவராத்திரிக்கு முன்பு அமாவாசையன்று பித்ரு ப்ரீதி பூஜையோடு தொடங்கும். முதல் மூன்று நாட்களுக்கு துர்கா பூஜாவாகவும், இரண்டாவது மூன்று நாட்களுக்கு லக்ஷ்மி பூஜாவாகவும், மூன்றாவது மூன்று நாட்களுக்கு சரஸ்வதி பூஜாவாகவும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு  முக்கிய சங்கல்பத்தோடு சிறப்பாக பூஜைகள் செய்து வந்தோம். பூஜைகளை ஒவ்வொரு குடும்பத்தினரும் தனித்தனியே, ஆனால் கூட்டாக ஒரே இடத்தில் வைத்து, செய்வார்கள். வேதத்தின் ஒரு சில பகுதிகளையாவது இன்று நான் தெரிந்து வைத்திருப்பதற்கு ஸ்ரீஅம்மா பகவானுடன் நாங்கள் கொண்ட தொடர்பின் பாதிப்பே காரணம். அந்த நாட்களில் பூஜை முறைகளை ஓரளவு நன்றாகக் கற்றுக்கொண்டிருந்தேன்.

தென்காசியில் நாங்கள் வசிக்கும் பகுதியில் பல வீடுகளில் கொலு வைப்பார்கள். வெற்றிலை பாக்கு வாங்கிக் கொள்வதற்கு பல வீடுகளிலிருந்து என் மனைவிக்கு அழைப்பு வரும். கடந்த பத்து ஆண்டுகளில், என் நினைவு சரியாக இருந்தால், இரண்டே இரண்டு முறை மட்டும் கொலு வைத்திருந்த வீடுகளுக்குச் சென்றிருக்கிறேன். ஒரு முறை கொலுவில் பாடியிருக்கிறேன். மற்றபடி என் மனைவி கொண்டு வரும் சுண்டல்களை ரசித்து உண்டதைத் தவிர நான் தீவிரமாக நவராத்திரி பண்டிகையில் என்னை ஈடுபடுத்திக்கொண்டதில்லை.  

ஆனால், இசையில் ஈடுபாடு இருந்ததால், நவராத்திரி சமயத்தில் மூன்று முறை தென்காசியில் பல மாணவ, மாணவிகளை இணைத்து அவர்களுக்கு ஒரு இசையாசிரியர் மூலமாக பல பாடல்களைச் சொல்லிக் கொடுத்து அவர்களை மேடையேற்றி ஒரு குழுவாக பாட வைத்த அனுபவம் மிகவும் இனிமையான, மனதுக்கு நிறைவு கொடுத்த அனுபவம்.  நாங்கள் வசித்த பகுதியில் இயங்கி வந்த ஒரு மகளிர் மன்ற உறுப்பினர்களையும் இதே போல பயிற்சி மேற்கொள்ள வைத்து அவர்களையும் அதே நிகழ்ச்சிகளில்  மேடையேற்றியிருக்கிறேன். இந்த நிகழ்ச்சிகளுக்கு மிருதங்கம், வயலின் பக்க வாத்தியத்துடன் நடத்திக் கொடுத்தது கலந்து கொண்ட சிறுவர், சிறுமிகளுக்கும், மகளிர் மன்ற உறுப்பினர்களுக்கும் பெரும் மகிழ்ச்சி, இந்த நிகழ்ச்சிகளுக்கு பொது மக்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்திருக்கிறது. இந்த நிகழ்ச்சிகளின் ஒன்றிரண்டு வீடியோக்களை ‘மேலகரம் வீடியோ’ என்று தேடினால் யூடியூபில் காணலாம்.

2016-ல், திருவள்ளுவர் கழகத்துடன் இணைந்து இரண்டு இசை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தோம். இந்த ஆண்டு  நாங்கள் ஊரில் இல்லாவிட்டாலும் எங்களது ஏற்பாட்டில் ஒரே ஒரு கர்னாடக சங்கீத நிகழ்ச்சி மட்டும் அதே திருவள்ளுவர் கழக நவராத்திரி நிகழ்ச்சிகளில் நடந்தது.

2016-ல் ஒரு நல்ல மாற்றம் ஏற்பட்டது. 2015 நவராத்திரியின் போது அமெரிக்காவில் என் மகள் தன் குழந்தைகளை ஒரு சில வீடுகளுக்கு நவராத்திரியின் போது கொலு பார்ப்பதற்குக் கூட்டிக்கொண்டு போயிருந்திருக்கிறாள். பள பளக்கும் விளக்கொளியில் கொலுவின் அழகு,  பல இனிய குரல்களின் பாட்டுக்கள், பல விருந்தினர்கள் குடும்பத்தோடு வந்து போவது, புதுப் புது ஆடைகள் இவற்றைக் கண்டு மயங்கிய என் பேரக் குழந்தைகள் அடுத்த ஆண்டு ‘நம் வீட்டிலும் கொலு வைக்க வேண்டும்’ என்று வற்புறுத்தியதால் என் மகளும் 2016-ல் தன் வீட்டில் கொலு வைக்கத் தொடங்கினாள்.

அதற்குத் தோதாக ஜூன் 2016-ல் இந்தியா வந்த என் மகள் கொலுவுக்குத் தேவையான பல பொம்மைகளை பலவித சைஸில் அள்ளிக்கொண்டு சென்று விட்டாள். 2016-ல் என் மகள் வீட்டில் வைத்த கொலுவை புகைப்படத்தில் தான் எங்களால் பார்க்க முடிந்தது.

இந்த ஆண்டு கொலுவுக்காக சிகாகோவில் என் மகன் வீட்டிலிருந்து ஃபீனிக்ஸில் என் மகள் வீட்டுக்கு ஒரு பறக்கும் இரண்டு வார ‘விசிட்’ அடித்தோம். பொதுவாக கொலுவில் ஆர்வம் காட்டியிராத நானும் ‘எப்படித்தான் இங்கே நவராத்திரியைக் கொண்டாடுகிறார்கள் பார்க்கலாம்’ என்று எண்ணத்தோடு கலந்து கொண்டேன்.

1998-2006-ல் ஸ்ரீஅம்மா பகவான் பூஜைகளில் கலந்து கொண்ட அனுபவத்தில் கொலுவின் ஆரம்ப அலங்காரங்களை என் மனைவியின் உதவியுடன் நான் செய்து முடித்தேன். ஓரளவு நன்றாகவே வந்திருந்தது. எனக்கே ஆச்சரியம். ‘ஃபைன் டியூனிங்’ மனைவியும் என் மகளும் கவனித்துக் கொண்டார்கள்.

கொலுப் பொம்மைகளை எல்லாம் இறக்கி வைத்த பின்னர் பேரக் குழந்தைகளுக்கு ஒரே ஆர்வம். நான் தான் இதைச் செய்வேன், இங்கே வைப்பேன் என்று அவர்களுக்குள் போட்டி, சண்டை. பொம்மைகளை உடைத்து விடாமல் இருக்க வேண்டுமே என்று எங்களுக்கோ பதற்றம். ஒரு மாதிரியாக அவர்களை சமாளித்து என் மகள் கொலுப் பொம்மைகளை தட்டுகளில் அடுக்கி மற்ற சில அலங்காரங்களைச் செய்து மெருகூட்டி நவராத்திரிக்கு கொலுவைத் தயார் செய்துவிட்டாள்.

கொலுவுக்கு ஒரு இருபது முப்பது வீடுகளிலிருந்து அழைப்பு. ஒரு நாள் எங்கள் வீட்டிலிருந்தும் எல்லோருக்கும் அழைப்பு இருந்தது. இங்கே ஃபீனிக்ஸில் பரந்து விரிந்திருக்கும் சேண்ட்லர் என்ற பகுதி ஒரு மினி மைலாப்பூர் போல. ஏகப்பட்ட தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் (முக்கியமாக இன்டெல் – யாரைக் கேட்டாலும் இன்டெல்லில் வேலை செய்வதாகச் சொல்வார்கள்) மூலைக்கு மூலை இருப்பதால் ஒரே தமிழ், தெலுங்கு, கன்னட, கேரள இளைஞர்கள், இளைஞிகளின் குடியிருப்புகள். தாய் மொழியில் பேச வராத பல குழந்தைகளும் கர்னாடக சங்கீதத்தை மட்டும் ஆங்கிலத்தில் பாட்டை எழுதி வைத்துக்கொண்டு ர, ல, ழ, ள- வை சரியாகவே உச்சரித்து (கொஞ்சம் மழலைக் குரலோடு) நன்றாகவே பாடுகிறார்கள். பரத நாட்டியம், மிருதங்கம், வீணை, கீ போர்டு எல்லாம் கற்று வருகிறார்கள். ஒரு சிறு பெண் ஹிந்துஸ்தானியை ஒரு கை தேர்ந்த பாடகி போல கைகளை ஆட்டி ஆட்டிப் பாடினாள். எல்லா வீடுகளிலும் கொலுவை அலங்கரித்திருக்கும் பாணி மிகவும் ஈர்ப்பதாக இருந்தது.

எல்லோர் வீட்டிலும் இரவு முழு உணவு தயார் நிலையில் வைத்திருந்தார்கள். சுண்டல் ஒரு சில வீடுகளில் மட்டும்தான். எல்லோர் வீட்டிலேயும் கொஞ்சமாவது சாப்பிட வேண்டும். வெள்ளி, சனி,  ஞாயிறன்று மாலை ஐந்து முதல் இரவு பத்து வரை ஒவ்வொரு வீடாக சுற்றி வந்தது ஒரு இனிமையான அனுபவம். எல்லா இடங்களிலும் விருந்தாளிகளுக்கு நல்ல வரவேற்பு. எல்லோரிடமும் ஒரு நட்பு உணர்வு. விருந்தோம்பல்.

இரண்டு வீடுகளில் ஒரு விசேஷ பூஜை ஏற்பாட்டுக்குச் சென்றிருந்தோம். இங்கே ‘ஆத்ம வேத கண’ என்ற பெயரில் ஒரு சேவை நிறுவனத்தின் உறுப்பினர்கள் அழைப்பு கொடுத்த வீடுகளுக்குச் சென்று வேதத்தை ஓதுகிறார்கள். வேதம் ஓதுவதில் ஆண், பெண் வித்தியாசம் இல்லை. ஆண், பெண் இரு பாலாருக்கும் வேதம் கற்றுக் கொடுக்கிறார்கள். நன்றாக ஸ்பஷ்டமாக அவர்கள் வேதம் படிப்பதைக் கேட்பதற்கு மனதுக்கு நிறைவாக இருக்கிறது. ஒன்பது இரவுகளை குறிக்கும் விதமாக ஒன்பது சுக்தங்களைப் படிக்கிறார்கள். பூஜையை வீட்டுக்குரியவரை வைத்தே செய்ய வைக்கிறார்கள். சுருக்கமாகவும் இருந்தது. ஒரு நல்ல உணர்வை கொடுப்பதாகவும் இருந்தது. ஒரு சிறிய வீடியோ இணைத்திருக்கிறேன்.


அப்படியாக, இந்த ஆண்டு நவராத்திரி இனிமையாக ஒரு புது அனுபவமாக அமைந்தது. என் மகள், மருமகன், அவர்கள் குழந்தைகளுக்கு நன்றி.

Tuesday, September 26, 2017

26.09.17 என் பிறந்த நாள் வாழ்த்துக்களுக்கு நன்றி

26.09.17 என் பிறந்த நாள் வாழ்த்துக்களுக்கு நன்றி

என் முகநூல் பக்கம் முழுவதும் எனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் இன்று. நெருங்கிய நண்பர்கள் என்று மட்டுமில்லாமல் முகநூல் நண்பர்களாக இருக்கும் நூற்றுக்கணக்கான நண்பர்களிடமிருந்தும் வாழ்த்துக்கள். இவர்களில் பெரும்பாலானவர்களுடன் எனக்கு நேரடிப் பரிச்சியம் கிடையாது. இருந்தும் அத்தனை வாழ்த்துச் செய்திகள்.

முகநூலில் சேரும் வரை பொதுவாக என்னுடைய பிறந்த நாளைக் கூட பல முறை நான் மறந்து விடுவது உண்டு. அதனால், நானும் பொதுவாக மற்றவர்களின் பிறந்த நாளுக்கு (அதற்கு மட்டுமென்று இல்லை, திருமண ஆண்டு நிறைவு நாள் போன்ற மற்ற தினங்களுக்கும் சேர்த்து) வாழ்த்துச் சொல்ல மறந்து விடுவேன். என் மனைவியின் பிறந்த நாளுக்கே அவளாக என்னிடம் நினைவு படுத்தும் வர பல முறை மறந்திருக்கிறேன். இருந்தும் இத்தனை பிறந்த நாள் வாழ்த்துக்கள் வந்திருப்பது ஒரு வகையில் மனதுக்கு நிறைவு கிடைக்கிறது. முகநூலில் இணைந்திருப்பதில் இது ஒரு நல்ல அனுபவம்.

எனக்கு பிறந்த  நாள் வாழ்த்துக்கள் தெரிவித்த எல்லா நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. தெரிவிக்காவிட்டாலும் என்னுடைய நட்பு வட்டத்தில் இருக்கும் முகநூல் அன்பர்களுக்கும் என்னுடைய நன்றி.

வாழ்க்கையில் சிறு பிராயத்திலிருந்து வயது ஏற ஏற நமது தனிமை கூடிக்கொண்டே இருக்கிறது. நட்பு வட்டம் குறுகிக்கொண்டே இருக்கிறது. பல நேரங்களில் நமது வாழ்க்கையைத் தனியாகத்தான் நடத்திச் செல்லவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்ற உணர்வும் வருகிறது. அறுபது வயது தாண்டிய பிறகு பல நேரங்களில் தனிமை வாட்டுகிறது. எல்லோரும் சூழ்ந்திருந்தால் கூட ஒரு தனிமை உணர்வு அவ்வப்பொழுது தாக்குகிறது. ஒரு நல்ல துணை நண்பர் இல்லையே என்ற ஒரு ஏக்கம் வருகிறது.

ஒரு வகையில் முகநூல் இந்த ஏக்கத்தைக் குறைக்கிறது என்றே நினைக்கிறேன். அதனாலேயே பலர் முகநூலில் மிகவும் ஆழ்ந்து இருக்கிறார்கள் என்றும் நினைக்கிறேன். இன்றைக்கு நானும் அப்படித்தான். என்னுடைய பொழுதுபோக்குக்கு எங்கும் போக வேண்டிய தேவையில்லை. ஒரு நாளைக்கு மூன்று முறை முகநூல் பக்கம் வருகிறேன். பல முகநூல் நண்பர்கள் இடும் பதிவு படிப்பதற்கும், பார்ப்பதற்கும் சுவையாக இருக்கிறது. சில சமயம் எனது சிந்தனையைத் தூண்டுவதாக இருக்கிறது. உடன்பட்டோ அல்லது மறுத்தோ கருத்துக் கூறத் தூண்டுகிறது. கூடியவரை அரசியலைப் பற்றியக் கருத்துக்களைக் கூறுவதை தவிர்த்து வருகிறேன்.

அதே சமயம் முறையாக ஒரு எழுத்தாளனாக என்னை மாற்றிக்கொண்டு விட்ட பிறகு ஏதேனும் எழுதினால் அதை உடனே எத்தனை பேர் படிக்கிறார்கள் என்ற ஆர்வமும் கூடுகிறது. நட்பு வட்டத்தில் தங்கள் கருத்துக்களைச் சொன்னால் கொஞ்சம் திருப்தி ஏற்படுகிறது.

ஆனால், இன்று பலரும் எழுதத் தொடங்கி விட்டார்கள். அதுவும் முக்கியமாக முகநூலில் அல்லது வலையில்.  நன்றாகவே எழுதுகிறார்கள். இது இன்டெர்நெட்டினால் வந்த பயன் எல்லாவற்றையும் முழுவதுமாகப் படிப்பதற்குத் தான் நேரம் கிடைப்பது கடினமாக இருக்கிறது.

நான் எழுதியவற்றுக்குக் கருத்துக்கள் தெரிவிக்கும் எல்லா முகநூல் நண்பர்களுக்கும் இந்தத் தருணத்தில் நன்றி சொல்லிக் கொள்கிறேன். தொடர்ந்து உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள். நான் எழுதுவதோடு நீங்கள் ஒத்துப் போக வேண்டும் என்ற எந்த கட்டாயமுமில்லை. நான் எழுதுவது உங்களுக்கு ரசிக்காவிட்டாலும் பரவாயில்லை. கண்டிப்பாக உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். அதுதான் என்னைப் போன்ற இளம் எழுத்தாளர்களை இன்னம் எழுத ஊக்குவிக்கிறது.

69-ஐ இன்று கடந்த எனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்த அன்புள்ளங்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி சொல்லிக்கொள்கிறேன். இனி இருக்கும் காலம் வரை வாழ்க்கையைப் பயனுள்ளதாகச் செலவிட இறைவனின் அருள் வேண்டி பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
வணக்கம். வாழ்த்துக்கள்.

இறுதியாக, நான் ஆங்கிலத்தில் எழுதிய LONELY  என்ற நூலைப் படித்துப் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த நூலுக்கு நெருங்கிய ஒரு சில நண்பர்களிடமிருந்து நல்ல ரிவியூ கிடைத்திருக்கிறது. இந்த நூல் www.pothi.com என்ற வலையில் கிடைக்கிறது. அச்சு வடிவத்திலும் ஈ-புத்தகமாகவும் கிடைக்கிறது. படித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள். 

https://pothi.com/pothi/book/ebook-t-n-neelakantan-lonely

https://pothi.com/pothi/book/t-n-neelakantan-m-sc-lonely

Thursday, September 07, 2017

Remembering my Teachers

On this Teachers' Day, I fondly remember my high school mathematics teacher (late) Sri Jesumani at Schaffter High School, Tirunelveli during 1962-63. He was strict and was a terror for most students. Yet, he had another side to his personality. He had taken me along with a couple of my co-students along the banks of Nainar Kulam tank in Tirunelveli Town almost every day before our school final exam to train us for the exam, doing a lot of mental mathematics. He worked hard for our success without any other expectations from us. May God bless his soul! I still remember the terrible blow I received on my back when I declared as soon as I came out of our maths public exam that I wouldn't be scoring a hundred in maths. He had so much faith and expectations from me and the other two friends, and I felt sorry to have disappointed him. I got only 95% in maths and a total of only 419 out of 600, standing the third in the school and district.

I would be failing in my duty if I don't thank my dear classmate and friend, Madhavan Yegnanarayanan, who was a kind of teacher to me, solving some of the tough problems whenever I had approached him. Some 5 years later, he was chiefly instrumental in motivating me to join St. Joseph's College, Tiruchi for my M. Sc. A great friend!

On this occasion, I also fondly remember with gratitude the great help I received from late Sri Vedasironmani, the then Principal of St. John's College, Palayamkottai for the excellent support and encouragement I received from him while studying B. Sc. There was another lecturer Sri P Subramanian and Sri Seetharaman from the same college for their financial help during my M. Sc at St. Joseph's. Incidentally, they were both our close family friends.

Finally, I also owe my gratitude to late Rev. Fr. Casimir, the Head of the Department of Chemistry and the Rector of St. Joseph's College, Tiruchi, but for whose support I won't be carrying my M. Sc degree behind my name. I also owe my gratitude to Rev. Fr. Irudayaraj of the same college for the excellent support and patronage I received in St. Joseph's at New Hostel. Incidentally, I should thank Mr. Nambi, a lecturer in the same college for his kindness and affection he had shown to me.

I had mentioned the names of a few people who had personally helped me during my studies. Yet, I can't forget the role played by several other teachers and lecturers who had shaped my interests and I thank all of them.