Total Pageviews

Monday, December 22, 2014

சங்கீத சீசன் 2014-15: எனது இசைப் பயணத்தின் சாராம்சம்:

நான் பள்ளியில் படிக்கும் காலங்களில் எனக்குப் பிடித்ததெல்லாம் சினிமாப் பாட்டுக்கள்தான். அதிலும் முக்கியமாக தமிழில் எம்.எஸ்.விஸ்வனாதன் (மற்றும் டீ.கே.ராமமூர்த்தி) இசையும், வடக்கே சங்கர் ஜெய்கிஷன், ஓ.பி.நய்யார், மதன் மோஹன், லக்ஷ்மிகாந்த் பியாரிலால் இசையும் எனக்கு உயிர். கர்னாடக சங்கீதம் என்றால் காத தூரம் ஓடிவிடுவேன். ஆண்டுதோறும் நடக்கும் ராமலிங்க சுவாமி உற்சவம், தியாகராஜ சுவாமி ஆராதனைக்கு என் தாயார் தவறாமல் போய் வருவார். ஆனால், எனக்கு பஜனைப் பாட்டுக்கள், பக்திப் பாடல்கள் தான் கர்னாடக சங்கீதத்தைவிட பிடிக்கும்.

கடந்த சுமார் பத்து ஆண்டுகளாக என்னுடைய இசை ரசனை மாறியிருப்பதை நான் உணர்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக சினிமாப் பாட்டுக்களிலிருந்து விலகி கர்னாடக சங்கீதத்தை ரசிக்கத் தொடங்கியிருக்கிறேன். வரவர சினிமாப் பாடல்களின் தரமும் கீழ் நோக்கிப் போவதாக நம்புகிறேன். வெறும் வாத்தியக் கருவிகளின் ஓசையை மட்டுமே நம்பி இசையமைக்கிறார்கள் என்றும் நம்புகிறேன். டியூன் என்றால் எங்கேயிருக்கிறது என்று தேட வேண்டியிருக்கிறது பல பாடல்களில். அதனாலேயே சினிமா பாட்டுகளிலிருந்து ஒதுங்கத் துவங்கினேன்.
அதே நேரத்தில், பாம்பே ஜெயஸ்ரீ, உன்னி கிருஷ்ணன் அவர்களின் பல கர்னாடக சங்கீதப் பாடல்கள் என்னை ஈர்க்கத் தொடங்கின. பல பாடல்களுக்கு எதையோ ஏங்கி, எதையோ தொலைத்தது போல அழுதிருக்கிறேன். என்னவோ தெரியவில்லை சுதா ரகுனாதன் அவர்களின் பாட்டு இன்னமும் எனக்குப் பிடிப்பதில்லை.

பின்னர் துவங்கியது பல இளைஞர்கள் குரல்களின் ஈர்ப்பு.. பல இளம் பாடகர்கள் கர்னாடக சங்கீதத்தில் பின்னத் தொடங்கினர். அவர்களில் பலர் கர்னாடக இசை மேதைகளாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவர்களின் குரல் வளமும், குறைந்த அளவே தெரிந்துகொண்டாலும் அதை சிறப்பாக பாடும் திறமையும் என்னை ஈர்த்தன. இதில் முக்கியமான பங்கு பாடகி/வயலினிஸ்ட் செல்வி அக்கரை சுப்பலக்ஷ்மி அவர்களுக்குச் சேரும்.. குடும்ப நண்பர்கள் என்ற முறையில் வயலின் ஆசிரியர் திரு. அக்கரை சுவாமினாதன் அவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களின் குழந்தைகள் சுப்பலக்ஷ்மி, சொர்ணலதா இருவரின் வயலின் இசையில் ஈர்க்கப்பட்டேன். அந்த இருவரும் நன்றாகப்  பாடுவதையும் அவர்களின் சிறு வயதினிலிருந்தே கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். பெரிய இசைக் கலைஞர்களாக வருவார்கள் என்று அன்றே ஆரூடம் சொன்னேன். கர்னாடக சங்கீதத்தில் எனக்கு ஈடுபாடு ஏற்ப்பட்டதற்கு செல்வி அக்கரை சுப்பலஷ்மி, சொர்ணலதா அவர்களின் இசை ஒரு முக்கிய காரணம் என்று நம்புகிறேன். என்னுடைய பையனும் அக்கரை சுவாமினாதனுடைய ஆரம்ப கால வயலின் மாணவன்.

என்னுடைய நெருங்கிய உறவினர்களில் அமெரிக்காவில் வாழும் ராஜி பத்மனாபனைப் பற்றி முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். 1996-ல் திருவனந்தபுரத்தில் இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு வேலைக்காக எங்களுடன் ஒரு வருடம் தங்கியிருந்தாள். மிகச் சிறந்த பாடகி. திருவனந்தபுரம் திருமதி சாரதா அவர்கள் ராஜியின் குரு. மிகப் பிரமாதமாக சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். திருமதி சாரதா அவர்களின் மகன் திரு கிருஷ்ணகுமார் மற்றும் அவர் மனைவி திருமதி பின்னி அவர்கள் இன்று முன்னணிப் பாடகர்களாக இருக்கிறார்கள். ராஜியும் ஒரு பிரபல பாடகியாகியிருக்கலாம். ஆனால், வேலை, குடும்பம் என்று பிஸியாக இருக்கிறாள். ராஜி சென்னையில் எங்களுடன் தங்கிருந்தபோது நாங்கள் ஆழ்வார்பேட்டில் வசித்து வந்தோம். டிசம்பர் மாதம் வந்தால் என் மனைவியின் துணையுடன் தினமும் ஒரு கச்சேரிக்குக் கிளம்பிவிடுவாள். அந்த நாட்களில் என்னிடம் ஒரு ஹார்மோனியப் பெட்டியும் இருந்தது. ஹார்மோனியத்தை வைத்துக்கொண்டு தினமும் இரவு நேரங்களில் கச்சேரி செய்வாள். எங்கள் வீட்டில் எல்லோரும் ராஜியின் ரசிகர்கள். கர்னாடக சங்கீதத்தில் எனக்கு ஈடுபாடு ஏற்பட்டதற்கு ராஜியும் ஒரு முக்கிய காரணம். அந்த ராஜிக்கு நன்றி.

தொடர்ந்து பல இளைய குரல்களைக் கேட்கத் தொடங்கினேன். ஏர்டெல் சூப்பர் சிங்கர் போட்டிகளைத் தொடர்ந்து பார்த்து வந்ததில் பல புதிய கலைஞர்களைப் பற்றியும் தெரிந்துகொண்டேன். முக்கியமாக ஏசியானெட் டீவியில் மலையாளத்தில் பல இளைஞர்கள் அற்புதமாகப் பாடுவதைக் கூர்ந்து பார்த்திருக்கிறேன்.

பரத் சுந்தர், ஈரோடு அனந்தராமன், ஷோபனா, மஹதி, சின்மயீ, சாயி விக்னேஷ், என்.ஜே.நந்தினி, போன்ற பல இளம் கலைஞர்களின் விசிறியானேன். கூடவே, ராகா டாட் காம், ஹம்மா டாட் காம், போன்ற இணையதளங்களிலிருந்து பல கர்னாடக சங்கீதப் பாடல்களை தொடர்ந்து கேட்கத் தொடங்கினேன். கர்னாடக சங்கீதத்தின்பால் இன்னும் ஈடுபாடு ஏற்பட்டது.

மூத்த மற்றும் வளரும் இசைக்கலைஞர்களின் இசை ஒளிபரப்பையும் டீவியில் தொடர்ந்து பார்க்கத் தொடங்கினேன். அதில் என்னைக் கவர்ந்தவர்களில் முக்கியமானவர்கள் திரு.ராஜேஷ் வைத்யா (வீணை) திரு. அபிஷேக் ரகுராம், திரு. சிக்கில் குருசரண், திரு. ஸ்ரீராம் ;பரசுராம், திரு. சஞ்சய் சுப்பிரமணியன், திரு. விஜய் சிவா, மறைந்த திரு. குன்னக்குடி வைத்யனாதன் (வயலின்), போன்றவர்கள்.

இந்த ஈடுபாட்டின் வெளிப்பாடாக எங்கள் எல்.என்.சேரிடபிள் டிரஸ்ட்டின் மூலமாக பல இசை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தோம்.

1)   முதன் முதலாக, தென்காசியில் மதுரை திருமதி ரங்கநாயகி சச்சிதானந்தத்தின் கச்சேரியை பிப்ரவரி 2011-ல் ஏற்பாடு செய்தேன். மதுரை ஸ்ரீசத்குரு சங்கீத வித்யாலயாவின் மிருதங்கப் பேராசிரியர் டாக்டர் திரு மதுரை கே.தியாகராஜன் அவர்களின் உதவியோடு இந்த ஏற்பாடு  செய்யப்பட்டது. திருமதி ரங்கநாயகி அவர்கள் சிறந்த பாடகி. திரு தியாகராஜன் அவர்களின் வழிகாட்டுதலில் பல அபூர்வமான பாடல்கள், தாளங்கள் கொண்ட இசையைக் கொடுத்திருக்கிறார்.
2)   தொடர்ந்து ஜூலை 2011-ல் தென்காசி, பாரத் பள்ளியின் மாணவர்களை தயார் செய்து ஒரு இசை நிகழ்ச்சி.
3)   பிறகு 2011 செப்டம்பரில் திருவனந்தபுரத்திலிருந்து டாக்டர் ராஜாராம் வீணை இசைக்க அவரது துணவியார் திருமதி ஹேமா ராஜாராம் பாடினார்.
4)   தொடர்ந்து ஜனவரி, 2012-ல் ‘சக்தி சங்கீத அகாடமி’யின் (மேலகரம், தென்காசி, எல்.என்.சேரிடபிள் டிரஸ்ட்டின் ஓர் அங்கம்) முதலாம் ஆண்டு விழாவின்போது மதுரை டாக்டர் கே.தியாகராஜன் தலைமையில் பஞ்ச தாள லய விஞ்ஞாசா என்ற நூதனமான இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தோம்.
5)   2012 செப்டம்பரில் நவராத்திரி கொண்டாட்டமாக மீண்டும் ஒரு மாணவர்கள் இசை நிகழ்ச்சி இசையாசிரியர் செல்வி திவ்யா @ சுவர்ணலக்ஷ்மி அவர்கள தலைமையில் நடந்தது.
6)   ஜனவரி 2014-ல் சக்தி சங்கீத அகாடமியின் (எல்.என்.சேரிடபிள் டிரஸ்ட்டின் ஓர் அங்கம்) இரண்டாம் ஆண்டு விழாவின்போது பிரபலமான பாடகிகள் மற்றும் வயலின் சகோதரிகளான செல்வி அக்கரை சுப்பலக்ஷ்மி, சொர்ணலதா அவர்களின் பாட்டுக் கச்சேரி நடந்தது.
7)   மீண்டும் செப்டம்பர் 2014-ல், 16 மாணவர்கள் கொண்ட ஒரு குழுவின் இசைக் கச்சேரி இசையாசிரியர் திரு. வாசிமலை (அரசு இசைக் கல்லூரி, மதுரை) அவர்கள் தலைமையில் நடந்தேறியது.

இதற்கிடையே மிருதங்க வகுப்புகளை நவம்பர் 2011-ல் துவக்கினோம். ஒரு 5 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட மிருதங்க வகுப்புகள் தற்பொழுது சுமார் 30 மாணவர்களுடன் வெற்றி நடை போட்டு வருகிறது. வாய்ப்பாட்டு வகுப்புகளும் தற்பொழுது 17 மாணவர்களுடன் செப்டம்பர் 2014-லிலிருந்து முழு மூச்சாக நடந்து வருகிறது. நடனம், வயலின் வகுப்புகளுக்கும் மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது.

கடந்த மூன்று வருடங்களா ஒவ்வொரு டிசம்பரிலும் கச்சேரி கேட்பதற்காக சென்னை சென்று வருகிறேன்.  

இந்த வருடம் டிசம்பரில் சென்னையில் நான் ரசித்த இசை/கலை நிகழ்ச்சிகள்:
1.   செல்வி புவனா (பரத நாட்டியம்)
2.   அக்கரை சுப்பலஷ்மி, சொர்ணலதா சகோதரிகள்
3.   செல்வி ஐஸ்வர்யா வித்யா
4.   திருமதி ரங்கநாயகி சச்சிதானந்தன், மதுரை
5.   செல்வி என்.ஜே.நந்தினி
6.   திரு.ராஜேஷ் வைத்யா
7.   திருமதி ஜெயஸ்ரீ ஜெயராமகிருஷ்ணன்
8.   திருமதி ஷோபனா விக்னேஷ் (மஹா நதி)
9.   திருமதி அபர்ணா பாலாஜி (யூ.எஸ்.ஏ)
10.  செல்வன் சாயி விக்னேஷ் (ஏர்டெல் டாப் 10) .

எங்கேயோ ஆரம்பித்து இசைப் பயணம் எங்கேயோ எதையோ தேடிக்கொண்டு போய்க்கொண்டிருக்கிறது. அது தன் குறிக்கோளை அடையும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.


நன்றி. வணக்கம்.

Monday, December 15, 2014

Writing of a novel - What inspired me?

The article proves again that where there is a will, there is a way.
Incidentally, I am compelled to write about writing of my novel: “WHAT IF OUR DREAMS COME TRUE! AN UNCOMMON DIALOGUE WITH LORD SIVA”
A few of the initial readers of my novel had commented that the novel was idealistic and a ‘feel-good’ book. Some had said it was filmatic. However, what I wrote in the novel was actually my dream too. As a stubborn commoner, a disciplinarian, an idealist, a perfectionist and generally someone who is in the wrong place most times, as I believed about myself, I had unique dreams. I detest many things that go around me, like many of you. I had always felt powerless in the face of many happenings around me, again like many of you. I had cursed myself for my helplessness and lack of courage to do something about what I see around me. All that I could do was to dream and put my dream into words in the form of a book.
I was inspired to write this book based on my memory about a news item that I read several years ago that a village in Tamil Nadu decided to manage its affairs on its own without looking for any support from the district or central administration.
Here is the broad synopsis of my book: WHAT IF OUR DREAMS COME TRUE! AN UNCOMMON MEETING WITH LORD SIVA
“It must be sometime around 1945. Poornam, a teenager and orphan, had some severe stomach pain and was in a local hospital. Medicines hadn’t relieved him from the pain. Lord Siva appeared before him in his dream and cured him instantly. HE also ordained Poornam to visit HIM in seven of his places.

Based on the advice of a local, village astrologer, Poornam set out to visit Siva temples along the banks of the river Tamirabarani, to pay obeisance to Lord Siva.

His first destination was Courtallam, a beautiful land of waterfalls along the river Chitharu, a tributary of Tamirabarani . There he was confronted by a Sadhu who lured him to his eclectic hideouts in the dark hills. Spending his initial seven years, chasing the ever-eluding Sadhu, Poornam received his enlightenment in a dark cave, after several traumatic experiences.

Armed with his enlightenment at a young age, his next destination was Papanasam, a renowned aboard of Lord Siva, where, in the hills the river Tamirabarani has its origins and where, as people believed, Lord Siva relieved people of the karmic effect of their past sins. The places around Papanasam had witnessed several floods in its history and several villages had been deluded when the river Tamirabarani was in spate flowing down the rough, sloppy terrains. Poornam felt that the area needed several check dams to prevent flooding and so that the water became available for the agriculture. A tumultuous period of seven years struggle followed before he could begin the construction of three check dams with money coming from people all over the country and from abroad.

His next destination was Brahmadesam, another aboard of Lord Siva, close-by. Here, Adhi, a great descendent of one of the Brahmins of 15th century who had received a vast piece of land as a grant and endowment for a public purpose from one of the then Venad kings, awaited Poornam’s arrival. Over the centuries, the vast land had already been usurped by several people regardless of caste, creed, and religion. But Adhi had evidence that could prove beyond any doubt that he was the legal heir to those properties.  The final proof was dug under the ground in the temple of the place. Poornam and Adhi retrieved the proof. With the help of a Samaritan judge in the court, who relinquished his job to fight for Adhi, they fought a remarkable, legal battle to retrieve the land for its original purpose. The seven year legal case became a historic event for future usurpers of temple land and properties.

Poornam then went to Cheranmahadevi, Tiruppudaimaruthur, Sernthapoomangalam and finally, Srivaikuntam, all places along the river Tamirabarani and in each place, he had a unique struggle for something that touched everyone’s life, something we all dreamt about, but felt completely helpless about.

When Poornam was past his eighties, an international television channel decided to air his story for the world to know and he died watching himself on the television.”

To read the full story, you may have to buy the book for online reading from www.amazon.com. Please search for books by T.N.Neelakantan in Amazon and you will get all my books published through it.


My fourth book: “Lonely” is available in the print form through www.pothi.com

Wednesday, December 03, 2014

இரு மாறுபட்ட அனுபவங்கள்

எனக்கு காது கேட்கும் திறன் குறைவாக இருந்ததால்  ஹியரின் எய்ட் (Hearing Aid) வைத்துக்கொள்ள சென்னை பூந்தமல்லி ஹைரோடிலுள்ள ஒரு பிரபல காது, மூக்கு, மற்றும் தொண்டை நிபுணரின் மருத்துவ மனையை தென்காசியிலிருந்து தொடர்பு கொண்டபோது வெள்ளிக்கிழமை காலை எட்டரை மணிக்கு வரச்சொன்னார்கள்.  

ஒரு தனியார் பேருந்தில் அவசரமாக டிக்கெட் வாங்கிக்கொண்டு தென்காசியிலிருந்து வியாழன் மாலை ஆறு மணிக்குக் கிளம்பி சென்னை வந்தபோது காலை ஏழேகால் மணி. வழியில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் பார்சல் லோடு அதிகமாக ஏற்றிக்கொண்தில் ஒரு முக்கால் மணி நேரம் வீணானது. அதிக லோடு ஏற்றியதாலோ என்னவோ பேருந்தும் மெதுவாகவே ஊர்ந்தது.  சென்னையில் அவசர அவசரமாக குளித்து ஒரு ஆட்டோ பிடித்து காலை நேர சென்னையின் டிராஃப்பிக்கின் ஊடே பறந்து சென்றேன். மருத்துவ மனை இருக்கும் சாலை ஒரு வழிப்பாதை. இருக்குமிடமோ தெரியவில்லை. உத்தேசமாக கொடுக்கப்பட்ட ஒரு லக்கை மனதில் வைத்துக்கொண்டு விரைந்தேன்.

மணி 8.40. மருத்துவ மனையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மருத்துவ மனையை என் செல் ஃபோனில் தொடர்பு கொண்டேன். வெகு நேரம் மணி அடித்தது. யாரும் எடுக்கவில்லை. ஆட்டோக்காரர் ‘’ஒரு வழிப் பாதை, இடத்தை தவற விட்டால் இன்னும் பெரிய சுற்று சுற்றவேண்டும்என்று. எரிச்சல் பட்டுக்கொண்டார். ஒரு வழியாக மருத்துவ மனையைக் கண்டுபிடித்தோம்.

வரவேற்பில் உட்கார்ந்திருந்தவர்கள் மிக இறுக்கமாக இருப்பது போலத் தோன்றியது. யாரிடமும் ஒரு சிறிய புன்முறுவல் கூட இல்லை. வரவேற்பில் அப்படி ஒன்றும் கூட்டம் இன்னும்  சேரவில்லை. ரிசப்ஷனில் அமர்ந்திருந்த பெண்மணியிடம், ‘காலை எட்டரை மணிக்கு என்னை வரச்சொல்லி விட்டு, மருத்துவ மனையை எட்டு நாற்பதுக்குக்கூட தொடர்பு கொள்ள முடியவில்லையே, ஏன்என்று குறை பட்டுக்கொண்டேன். அந்தப் பெண்மணி பொறுப்பில்லாமல் ஏதோ ஒரு பதிலைக் கூறினாள்.

ஒரு ஜூனியர் டாக்டர் என்னிடம் விவரங்களைக் கேட்டுக்கொண்டார். நான் சர்க்கரை நோய் உள்ளவன் என்பதால் என்னுடைய பழைய ரிப்போர்ட்டுகளையெல்லாம் எடுத்துக் காட்டினேன். எல்லாம் பார்த்து விட்டு, விட்டுப்போன பல ரத்தப் பரிசோதனை, காது, மூக்கு எக்ஸ்ரே, ஆடியோகிராம் பரிசோதனை எல்லாவற்றிற்கும் எழுதிக்கொடுத்தார். சுமார் இரண்டாயிரத்து முன்னூறு ரூபாய்க்கு பில்.

எல்லா பரிசோதனைகளையும் முடித்த பின்பு பெரிய டாக்டரைப் பார்க்க என்னைக் கூப்பிட்டார்கள். மிகவும் பிஸியான டாக்டர் என்றுதான் தோன்றியது. ஜூனியர் டாக்டர் பரிசோதித்துப் பார்த்தது போலவே இவரும் காது, மூக்கு, தொண்டையை பரிசோதனை செய்தார். என்னுடைய எக்ஸ்ரே படங்களை திரையில் ஒரு நர்ஸ் மாட்டினார். எல்லாம் இரண்டு, மூன்று நிமிடங்கள்தான். “உங்களுக்கு HEARING AID பொருத்த வேண்டும். மருந்தினால் உங்கள் குறையை சரி செய்ய முடியாது. மேல் மாடியிலுள்ள HEARING AID டிவிஷனில் போய் பேசிவிட்டு வாருங்கள்.’. என்றார். என்னுடைய பல ரிப்போர்ட்டுகள் என்ன சொல்கின்றன என்பதைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

இவ்வளவு செலவு செய்து வெகு தொலைவிலிருந்து வந்த எனக்கு மிகப் பெரிய ஏமாற்றம். ஒரு ஜூனியர் டாக்டரிடம் அனுப்பியிருந்தால் கூட பரிசோதனை ரிப்போர்ட்டுகள் என்ன சொல்கின்றன என்பதைப் பற்றி கொஞ்சமாவது சொல்லியிருப்பார் என்று நம்புகிறேன். சீனியர் டாக்டர் அறையிலிருந்து நான் வெளியே வருவதற்குள்ளேயே இன்னொரு நோயாளியை உள்ளே உட்கார வைத்து விட்டார்கள்.

பிரபலமான ஒரு மருத்துவ மனையில் ஓரு சீனியர் டாக்டருக்கு ஒரு நோயாளியுடன் ஒரு ஐந்து பத்து நிமிடங்கள் கூடப் பேச நேரமில்லை என்பது மிகவும் வருத்தமான விஷயமாகத் தோன்றியது. எதற்காக இத்தனை சோதனைகள் செய்தார்கள் என்று எனக்குப் புரியவைக்கவில்லை. சென்னையில் பல இடங்களில் ஆடியோகிராம் பரிசோதனை மட்டும் குறைந்த செலவில் அல்லது செலவில்லாமல் செய்து கொடுக்கிறார்கள். இன்னொரு ஜூனியர் டாக்டர் வைட்டமின் மருந்துகளை எழுதிக்கொடுத்தாள். ஆனால், HEARING AID டிவிஷனில் இருந்த ஆடியாலோஜிஸ்ட் என்னுடைய ஆடியோகிராம் ரிப்போர்ட் என்ன சொல்கிறது என்பதை விவரமாக எடுத்துரைத்தாள். அவளுக்கு நன்றி சொன்னேன். அவர் ஒருவர் தான் ஒரு நோயாளியை மதித்து புன்சிரிப்புடன் தனது வேலையை முழுமையாக செய்தாள் என்று தோன்றியது.

அமெரிக்காவுக்கு பல முறை போய் வந்திருக்கிறேன். அங்கே எங்கு சென்றாலும்கடையோ, மருத்துவ மனையோ, - வாடிக்கையாளர்களைக் கையாளும் விதமே தனி. எப்பொழுதும் அவர்கள் முகத்தில் ஒரு புன் சிரிப்பு, வாடிக்கையாளரை நிதானப்படுத்துவது, அவரது நலனை விசாரிப்பது என்பதெல்லாம் உண்மையில் அனுபவித்துப் பார்க்க வேண்டும். இங்கு நமது ஊரில் டாக்டர்களுக்கு நோயாளிகளைக் கவனிப்பதற்கு நேரமில்லை. எனக்குத் தெரிந்து தென்காசியில் கூட வெளியூரிலிருந்து பல மருத்துவ நிபுணர்கள் ஆலோசனைக்கு வருகிறார்கள். மூன்று அல்லது நான்கு மணி நேரத்தில் குறைந்தது நூறு நோயாளிகளைப் பார்க்கிறார்கள். ஒரு நோயாளிக்கு ஒன்றிலிருந்து இரண்டு நிமிடம்தான்.

முடிவில் எனக்கு மிஞ்சியது ஏமாற்றமும், வருத்தமும் தான். அதனால் HEARING AID அந்த மருத்துவ மனையில் வாங்கக்கூடாது என்று தீர்மானித்துவிட்டேன். மேலும் விலையுயர்ந்த மாடல்களை மட்டுமே அவர்கள் விற்பார்கள் போல. விலையைக் கேட்டால் ஷாக் அடிக்கும். மிக சிறப்பாக விளக்கிச் சொன்ன அந்த ஆடியாலோஜிஸ்ட் என்னை மன்னிக்கட்டும்.

அதே நாளில் என் கண்பார்வை பரிசோதனையும் செய்துகொள்வதற்கு மாலை நாலு மணிக்கு வளசரவாக்கத்திலுள்ள இன்னொரு பிரபல கண் மருத்துவ மனைக்குச் சென்றேன்.

இங்கே எல்லாம் முற்றிலும் வேறுபாடு. சீருடையணிந்த பணிப்பெண்கள் வரவேற்புப் பகுதியில்புன்சிரிப்புடன் வரவேற்றுமூத்த குடிமக்களுக்கு இங்கு முதல் மருத்துவப் பரிசோதனை இலவசமாக அளிக்கிறோம்என்று கூறினார். வரவேற்பில் பதிவு செய்துகொண்டு முடிவில் மருத்துவரைப் பார்த்து விட்டு வெளியே வரும் வரை, ராஜ உபசாரம்தான். இடையில்உங்களுக்கு காஃப்பி வேண்டுமா?” என்று கூட இன்னொரு பணிப்பெண் கேட்டாள். படிப்பதற்கு கண்ணாடிக்காக பரிசோதனை செய்த பொழுது பரிசோதித்த நிபுணர் கொடுத்த சீட்டுடன் எனக்கு உடன்பாடில்லை என்பதால் ஒரு பெரிய டாக்டரே மீண்டும் என்னை பரிசோதித்தார். மருத்துவ மனையை விட்டு வெளியே வரும்பொழுது ஒரு பணிப்பெண்ணிடம்உங்களுக்கு மிக அதிகமான ஊதியம் இருப்பதற்கு வாய்ப்பில்லை. இருந்தும் நீங்களெல்லாம் இவ்வளவு பணிவாக நோயாளிகளுக்கு பணி செய்கிறீர்களே, எப்படி?” என்று கேட்டேன். அவர்கள் சிரித்துக் கொண்டார்கள். சீனியர் டாக்டரிடமும், அந்தப் பணிபெண்ணிடமும் என்னுடைய பாராட்டுதலைத் தெரிவித்து விட்டு மிக மகிழ்ச்சியுடன் வெளியே வந்தேன். என் புதிய கண்ணாடிக்கும் அந்த மருத்துவ மனையிலேயே அமைந்திருந்த கடையில் ஆர்டரும் கொடுத்து விட்டேன்.


ஒரே நாளில் இரண்டு முற்றிலும் மாறுபட்ட அனுபவங்கள். ருத்துவ மனைகள் எவ்வளவு வேறுபடுகின்றன.