Total Pageviews

Sunday, January 22, 2017

நானும் என் ஸ்தோத்திரங்களும் அதன் பலன்களும்

நானும் என் ஸ்தோத்திரங்களும் அதன் பலன்களும்

21.01.17 அன்று முகநூல் நண்பர் ஒருவரின் ‘நேரக் கோட்டில்’ (TIMELINE) ஆதித்ய ஹ்ருதயம் ஸ்தோத்திரத்தைப் பற்றி எழுதியதை படிக்க நேர்ந்தது. உடனேயே என் எண்ணங்கள் 1985-87-ல் கௌஹாத்தியிலிருந்து திப்ரூகர்   நோக்கிச் சென்று கொண்டிருந்த என் விமானப் பயணத்துக்குத் தாவியது.

அலுவலக வேலை நிமித்தமாக பயணித்துக்கொண்டிருந்தேன். என்னுடன் இரண்டு மேலதிகாரிகள் பயணித்தனர். எனக்கருகில் அமர்ந்திருந்தவர் வங்கியில் பொது மேலதிகாரி. அவர் கையில் ஒரு புத்தகம் வைத்து ஏதோ படித்துக்கொண்டிருந்தார். வாய் ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தது. அவர் என்ன படிக்கிறார் என்று தெரிந்து கொள்வதில் ஒரு ஆர்வம் எனக்கு. ஆனால், அவர் என் மேலதிகாரி. அவரிடம் சட்டென்று கேட்பதற்கு தயக்கம். மீண்டும் ஓரக்கண் கொண்டு பார்த்தேன். அவர் கையில் புத்தகத்துக்குள் சிறியதாக இன்னொரு புத்தகம். என் ஆவலைத் தூண்டியது. உற்று உற்று பார்த்துக்கொண்டே இருந்தேன். சிறிது நேரம் கழித்து அந்த மேலதிகாரி புத்தகத்தை மூடிவிட்டார். நான் உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருந்ததை அவர் கண்டிப்பாக கவனித்திருக்க வேண்டும். அவராகவே என்னிடம், “நான் ஆதித்ய ஹ்ருதயம் என்கிற ஸ்தோத்திரத்தைப் படித்துக் கொண்டிருந்தேன்.  நீ அதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறாயா?” என்றார். நான் இல்லை என்று தலையாட்டினேன். அதன் மஹிமையைப் பற்றி சுருக்கமாக எனக்குக் கூறினார். இந்த ஸ்லோகத்தை தொடர்ந்து சிரத்தையோடு சொல்லிக்கொண்டு வந்தால் மனதிலுள்ள வீணான பீதிகள், பயங்கள் நீங்கி தைரியம் வரும். எதிரிகள் அழிந்து விடுவார்கள். வெற்றி கிடைக்கும் என்றளவு புரிந்து கொண்டேன். ‘நீயும் முடிந்தால் இந்த ஸ்லோகத்தை தினமும் படிக்க முயன்று பார்.’ என்று கூறி தன் கண்களை மூடிக்கொண்டு விட்டார்.

ஆனால், அந்த ஸ்லோகத்தை பற்றிய புத்தகம் கௌஹாத்தியில் உடனேயே எனக்கு கிடைக்கவில்லை. 87-ல் சென்னைக்கு மாற்றலாகி வந்த பிறகு எங்கேயோ (ஞாபகம் இல்லை) ‘ததோ யுத்த பரிச்ராந்தம்’ என்று தொடங்கும் ஆதித்த ஹ்ருதய ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்த (சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் செய்தது என்று நினைவு) ஒரு ஆடியோ கேசட் கிடைத்தது. அதை உதவியாக வைத்துக்கொண்டு அந்த ஸ்லோகத்தை முழுமையாக முறையாகக் கற்றுக்கொண்டேன். அப்பொழுது முதல் நான் தினமும் பாராயணம் பண்ணுகிற ஸ்லோகங்களில் அதுவும் ஒன்றாகியது.
           
              இப்பொழுது மீண்டும் நினைவலைகள் பின் நோக்கி ஓடுகிறது…
        
            1960-களில் திருநெல்வேலி டவுண் அம்மன் சன்னதித் தெரு. புகழ் பெற்ற திரு. ஹரிதாஸ் கிரி அவர்கள் எங்கள் ஊருக்கு வந்திருந்தார். தெருவிலிருந்த வசதியுள்ள ஒருவரின் வீட்டில் தங்கியிருந்து தினமும் மாலை வேளையில் பிரசங்கம், பஜனை செய்வார். அவர் அடிக்கடி பாடும் ஒரு ஸ்தோத்திரப் பாடல் எனக்கும் எங்கள் அம்மாவுக்கும் மிகவும் பிடித்த “ஞான கணேசா சரணம் சரணம்” என்றும் “ஆக்கும் தொழில் ஐந்தரனாற்ற நலம்” என்றும் துவங்கும் “லலிதா நவரத்தின மாலை” எங்கள் மனதில் உரு ஏறியது.
        
    அந்த நாட்களிலெல்லாம் எங்கள் அப்பா சுப்ரமண்ய புஜங்க ஸ்தோத்திரத்தை தினமும் படிப்பார். காலையில் நிச்சயமாக சந்தியா வந்தனம் செய்வார். மாலையில் திருநெல்வேலி கொக்கிரகுளத்திலிருந்த அலுவலகத்திலிருந்து டவுணுக்கு நடந்தேதான் பெரும்பாலும் வருவார். வரும் வழியில் அவர் கைகள் ஏதோ எண்ணிக்கொண்டே இருப்பதை கவனித்திருக்கிறேன். பின்னர்தான் தெரிந்து கொண்டேன் அவர் காயத்ரி ஜபத்தை நடந்து வரும் வழியெல்லாம் ஜபித்துக் கொண்டு வந்திருக்கிறார் என்று. அந்த மந்திரங்கள்தானோ என்னவோ  நரம்புத் தளர்ச்சியினால் அடிக்கடி வலிப்பு வரும் அவருக்கு பல இக்கட்டான சூழ்னிலைகளிலிருந்து பாதுகாப்பு கொடுத்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

            1950-களின் கடைசியில் என்று நினைக்கிறேன். திருவனந்தபுரத்தில் இருந்த எங்கள் அத்தை வீட்டுக்கு விடுமுறைக்கு அடிக்கடி செல்வோம். அங்கே தினமும் ஒரு பெரியவர் மாலை நேரத்தில் வீட்டுக்கு வந்து விஷ்ணு சகஸ்ரநாமமும் இந்திராக்ஷி சிவகவசமும் வாசிப்பார். எனக்கு அப்பொழுது விஷ்ணு சகஸ்ரநாமம் தெரியாது. காதால் கேட்டுக்கொள்வேன்.

            ஏனோ தெரியவில்லை ஒரு சில மந்திரங்களையாவது தினப்படி கண்டிப்பாக சொல்ல வேண்டும் என்று என் அம்மாவோ அல்லது அப்பாவோ எங்களை வற்புறுத்தியதில்லை. நானும் எந்த மந்திரத்தையும் தினசரி பாராயணம் பண்ணாமலேயேதான் வளர்ந்திருக்கிறேன் 1970 வரை.

            1970 டிசம்பர். வங்கியில் கோயம்புத்தூர் கிளைக்கு மாற்றலாகி வந்த பிறகு திரு. கௌரிசங்கர் என்ற சக ஆஃபீசரின் நட்பு கிடைத்தது. அவருடன் பத்து மாதங்கள் ஒன்றாக ஒரு லாட்ஜில் ஒரே அறையில் தங்கியிருக்கும் வாய்ப்பு கிடைத்தது. என்னை விட ஒன்றிரண்டு வயது மூத்தவர். ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக இருந்த வேலையைத் துறந்து விட்டு வங்கியில் சேர்ந்தவர். இன்றைய நாட்களில் அதிகமாக அவருடன் தொடர்பில் இல்லாவிட்டாலும் என்னுடைய அண்ணனாகவே இன்றும் மனதளவில் மதித்து வந்திருக்கிறேன். லாட்ஜில் தங்கியிருந்த சமயம்தான் கந்த சஷ்டி கவசத்தை எனக்கு அறிமுகப் படுத்தினார். ‘தினமும் இதைப் படி. மிகவும் நல்லது. எல்லா நன்மைகளும் நடக்கும்’ என்று கூறினார். அவர் சொன்னதை அப்படியே ஏற்றுக்கொண்டு  நம்பிக்கையோடு தினப்படி கந்த சஷ்டி கவசத்தை சொல்ல ஆரம்பித்தேன். சுமார் 28 ஆண்டுகள் தொடர்ந்து கந்த சஷ்டி கவசத்தை தினப்படி சொல்லியிருக்கிறேன்.

இடையில் 1977-78-ல் வட இந்தியாவில் வேலை பார்த்து வந்த போது இன்னொரு சக ஆஃபீசர் எனக்கு கந்தரலங்காரம், கந்தர் அனுபூதி இவைகளின் கேசட் கொடுத்தார். அவற்றையும் கற்றுக் கொண்டேன். ஆனால், தொடர்ச்சியாக சொன்னதில்லை. இன்றும் சீர்காழி கோவிந்தராஜனின் கந்தர் அலங்காரம் அவ்வப்பொழுது கேட்டு கண்ணை மூடி அமர்ந்து விடுவேன்.

            1980-ல் சென்னைக்கு மாற்றலாகி வந்த  சமயத்தில் வங்கியில் என்னுடைய மானசீக குருவாக மதித்து வந்த மறைந்த திரு. ராஜாராம் அவர்கள் ‘சங்க்ஷேப சுந்தர காண்டம்’ என்ற ஒரு புத்தகத்தைக் கொடுத்து அதை தினமும் படிக்கச் சொன்னார். அன்றைய காலக் கட்டத்தில் அலுவலகம் சம்பந்தமாக ஒரு சில பிரச்சினைகள் எனக்கு இருந்து வந்தன. அந்தப் பிரச்சினைகள் எல்லாம் பறந்து போய் விடும் என்று எனக்கு நம்பிக்கை கொடுத்தார். அவர் சொன்னபடியே பல ஆண்டுகள் அந்த சங்க்ஷேப சுந்தர காண்டத்தை படித்து வந்தேன்.

            வங்கியில் பணி புரிந்த காலங்களில் எனக்கு வாழ்க்கையில் எல்லா வசதிகளும் நிறைந்திருந்தன – பண வசதியைத் தவிர. ஒவ்வொரு மாதமும் செலவுகளை சமாளிப்பது சிரமமாகத்தான் இருந்தது. என்னிடம் ஓட்டியுடன் கூடிய கார், நல்ல வீடு, தொலை பேசி, ஏ.சி வண்டியில் ரயில் பயணம் எல்லாம் இருந்தது. ஆனால், வங்கிக் கணக்கில் எதுவுமிருக்காது. 1985-ல் எனக்கு கௌஹாத்திக்கு மாற்றலானது. அந்தக் காலத்தில் வட கிழக்கு மானிலங்களுக்கு மாற்றலாகிப் போனால் இரட்டை உயர்வூதியம் கிடைக்கும். அதே திரு. ராஜாராம் அவர்கள் ‘நீ திருப்பதி வெங்கடாஜலபதியை வேண்டிக்கொள். நிறைய பணம் கொடுப்பார். வங்கியில் உன்னுடைய வருடாந்திர டார்கெட்டை அடைவதற்கும் உதவுவார். கூடுதலாக கனகதாரா ஸ்தோத்திரத்தையும் கற்றுக்கொள்,’ என்று எனக்கு நம்பிக்கை கொடுத்தார். அப்பொழுது தொடங்கியது தினமும் வெங்கடேஸ்வர சுப்ரபாதமும், கனகதாரா ஸ்தோத்திரமும். அது மட்டுமல்லாமல் ஆண்டு தோறும் இரண்டு முறை திருப்பதி வெங்கடாஜலபதியை கீழ்த் திருப்பதியிலிருந்து நடந்து படியேறிப் போய் தரிசனம் செய்து வரும் வழக்கத்தையும் தொடங்கினேன். வேலைக்குச் சேர்ந்து 15 ஆண்டுகள் கழித்துதான் என் முதல் சிறு சேமிப்பும் அந்த நாட்களில்தான் துவங்கியது.

            அப்படியாக, 1987- வாக்கில் தினமும் கணேச பஞ்சரத்னம், கந்த சஷ்டி கவசம், வெங்கடேச சுப்ரபாதம், கனகதாரா ஸ்தோத்திரம், ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம், நவக்ரஹ ஸ்தோத்திரம், சங்க்ஷேப சுந்தர காண்டம் அத்தனையும் காலையில் குளித்து முடித்தவுடன் அலுவலகத்துக்கு கிளம்ப சாப்பிட உட்கார்வதற்கு முன்பு சொல்லி முடித்து விடுவேன். மாலையில் சீக்கிரம் வீட்டுக்குத் திரும்பும் நாட்களில் உடல் நலமில்லாமல் படுத்துக் கிடந்த அம்மாவுடன் சேர்ந்து விஷ்ணு சஹஸ்ர நாமம் சொல்வேன்.

            1997-ல் முதன் முறையாக ஸ்ரீஅம்மா பகவானின் தொடர்பு கிடைக்கும் வரை என்னுடைய தினப்படி வாழ்க்கையில் இந்த எல்லா மந்திரங்களும் இணைந்திருந்திருக்கின்றன. மனம் மிகவும் சோர்ந்து கிடந்த 1997-ல் ஸ்ரீஅம்மா பகவானின் அறிமுகம் என் வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விட்டது. 1998-லிருந்து எளிமையாகவும் சுலபமாகவும் இருந்த ஸ்ரீபகவானின்
            “ஓம் சச்சிதானந்த பரப்ப்ரம்மா புருஷோத்தம பரமாத்மா
            ஸ்ரீ பகவதி சமேத ஸ்ரீ பகவதே நம: \\
என்ற மூல மந்திரத்தை மட்டுமே சொல்வதை வழக்கமாக்கிக் கொண்டு மற்ற எல்லா மந்திரங்களையும் விட்டு விட்டேன்.

            2005 என்று ஞாபகம். அமெரிக்காவில் என் குழந்தைகளைப் பார்க்கப் போன போது அந்த முறை ‘ருத்ரம், சமகம்’ கற்றுக்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தேன். ஸ்ரீ அம்மா பகவானையே என் மானசீக குருவாக வைத்து கேசட் போட்டுக் கேட்டுக் கேட்டு ஸ்ரீ ருத்ரம், சமகம், ஸ்ரீபுருஷ சுக்தம், ஸ்ரீ நாராயண சுக்தம், ஸ்ரீ சுக்தம், ஸ்ரீமேதா சுக்தம், ஸ்ரீ துர்கா சுக்தம் எல்லாவற்றையும் புத்தகத்தைப் பார்த்து படிக்குமளவிற்குத் தேறினேன். ஸ்ரீ சர்மா (முழுப் பெயர் நினைவில்லை) அவர்களின் கேசட் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. ஆனால், தொடர்ந்து சொல்லி வராததால் மனப்பாடமாகவில்லை.

            இடையில், உடல் நலமில்லாதவர்களுக்காக HEALING எனப்படும் குணப்படுத்தும் பிரார்த்தனை முறையை ஸ்ரீஅம்மா பகவான் இயக்கத்தில் கற்றுக்கொண்டேன். என் மனைவியையும் சேர்த்து பலருக்கு ஹீலிங் செய்திருக்கிறேன். சுவாமி விவேகானந்தர் தன்னுடைய சீடர் ஒருவர் உடல் நலமில்லாத போது ‘அக்ஷீப்யாம் தே சுக்தம்’ என்றொரு சுக்தத்தைப் பற்றிச் சொல்லி ஹீலிங் செய்திருக்கிறார் என்று படித்திருந்தேன்.  உடனேயே அந்த சுக்தத்தையும் கற்றுக்கொண்டேன்.

            இத்தனை மந்திரங்களையும் ஸ்லோகங்களையும் தினப்படி நம்பிக்கையுடன் சொல்லி வந்ததால் எனக்கு ஏற்பட்ட பல பிரச்சினைகளிலிருந்து விடுதலை கிடைத்திருக்கிறது. செல்வம் சேர்ந்திருக்கிறது. வீணான பீதி, பயம் போய் மனதில் அமைதி கிடைத்திருக்கிறது. மனோ தைரியம் கிடைத்திருக்கிறது. எதிர்ப்புகளைத் தாங்கிக் கொள்ளும் சக்தி கிடைத்திருக்கிறது. வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைத்திருக்கிறது. குழந்தைகள் நன்றாக வளமாக இருக்கிறார்கள். தவறான பாதையில் செல்லாமல் என்னைத் தடுத்திருக்கிறது. மனம் ஒன்றியிருக்கிறது. பல தவறுகளை  நான் இழைத்திருந்தாலும் அவற்றின் தீய பலன்களிலிருந்து எனக்கு பாதுகாப்பு கிடைத்திருக்கிறது. இப்படி எவ்வளவோ நன்மைகள்…

            ஆனால், இன்றோ…

            தினப்படி எந்த மந்திரங்களும் ஸ்லோகங்களும் நான் சொல்வதில்லை. எல்லாம் துறந்து ஞானசூனியமாக நிற்கிறேன். இதுவும் ஒரு நாள் துறந்து போகும்.


            (பின் குறிப்பு: நீண்ட ஆங்கில நாவல்கள் எழுதத் தொடங்கிய பிறகு சுருங்கச் சொல்வது விட்டுப் போய்விட்டது.) 

Wednesday, January 11, 2017

08.01.17 இந்த வார நாட்க்குறிப்பு

08.01.17 இந்த வார நாட்க்குறிப்பு

என்னுடைய நாட்க்குறிப்பு பகுதியில் அந்தந்த வாரத்தில் நான் சந்தித்த, என்னைத் தாக்கிய அனுபவங்கள், உணர்ச்சிகள், பார்த்தவை, கேட்டவை இவைகளைப் பற்றி மட்டுமே எழுத வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். என் வலையில் எழுதி முக நூலில் அதற்கு இணைப்பும் கொடுத்து வந்தேன்.

நான் கவனித்த வரை, என்னுடைய எழுத்துக்களை முக நூலில்  நேரடியாக பதிவு செய்யும் பொழுது ஒரு சிலராவது அதைப் படித்து சில சமயங்களில் கருத்தும் தெரிவிக்கும் பொழுது எனக்கு ஒரு நிம்மதி. ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் இந்த எதிர்பார்ப்பு இருக்கும் என்று நம்புகிறேன். எத்தனை பேர் நாம் எழுதியதைப் படிக்கிறார்கள் என்று பார்ப்பதில் ஒவ்வொரு எழுத்தாளனும் ஒரு சிறு குழந்தையாக மாறிவிடுகிறார் என்று நினைக்கிறேன். வலையில் மட்டுமே எழுதும் பொழுது கூகுள் அனலடிக்ஸ் கொடுக்கும் தகவல் பேரில் எத்தனை பேர் என் பக்கத்தைப் பார்த்தார்கள் என்று தெரிய வருகிறது. ஆனால், அவர்கள் நான் எழுதியதை முழுவதுமாக படித்தார்களா என்று தெரிவதில்லை. கமென்ட் கொடுப்பதற்குண்டான வசதியிருந்தும் முகநூல் போலல்லாமல் யாரும் பொதுவாக கமென்ட் கொடுப்பதில்லை. இண்டெர்னெட் வசதி பெருகிவிட்ட பிறகும் சமூக வலைகள் பெருகிவிட்ட பிறகும் பலரும் எழுத்தாளராக முயற்சி செய்து வருகிறார்கள். எல்லோருடைய எழுத்துக்களையும் எல்லோராலும் படிக்க முடிவதில்லை.

மேலும், யாருக்கு எதில் ஆர்வம் இருக்கிறதோ அதை மட்டுமே படிக்கிறார்கள், எழுதுகிறார்கள். நானுமே அப்படித்தான். அமெரிக்காவில் உட்கார்ந்துகொண்டு வெளி உலகத் தொடர்பு என்று சொல்லிக்கொள்ளக் கூடிய அளவிற்கு எதுவுமில்லாத போது எதைப் பற்றி எழுதுவது என்பது எனக்கு ஒவ்வொரு வாரமும் சவால்தான். அமெரிக்க வாழ்க்கையைப் பற்றியே மீண்டும் மீண்டும் எழுதினால் படிப்பவர்களுக்கு போரடிக்கலாம். அதனால் படித்த செய்திகளைப் பற்றி, பார்த்த திரைப்படங்களைப் பற்றி, படித்த புத்தகங்களைப் பற்றியே பொதுவாக அதிகமாக எழுதி வருகிறேன்.

அப்படித்தான் கடந்த வாரம் நான் படித்த புத்தகத்திலிருந்து நான் தெரிந்து கொண்ட ரிச்சர்ட் ப்ரான்சன் என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரைப் பற்றி எழுதினேன். இது போன்ற மனிதர்களைப் பற்றி தெரிந்துகொள்ளும் பொழுது எனது வாழ்க்கையில் எவ்வளவு தவறுகள் செய்திருக்கிறேன், எப்படி என் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ளத் தவறியிருக்கிறேன் என்ற  நினைப்புதான் மேலோங்கி நிற்கிறது. என்னுடைய 68 வயதிலும் உருப்படியாக ஏதேனும் செய்யலாம் என்ற நம்பிக்கை பிறக்கிறது. ஒவ்வொரு நாளும் என்னையே திருத்திக்கொள்ள முயன்று வருகிறேன். இருந்தும் பிறந்து வளர்ந்த காலத்திலிருந்து எனக்குள்ளே நான் ஏற்படுத்திக்கொண்ட பல கருத்துக்கள் என்னைக் கட்டுப்படுத்துவதிலிருந்து இன்னும் மீள முடியவில்லை.

பொதுவாக, NON FICTION புத்தகங்களைப் படிப்பதையே அதிகமாக விரும்புகிறேன். இடையிடையே ஒரு சில க்ரைம் த்ரில்லர்களையும் பொழுது போக்குக்காக படிக்கிறேன். க்ரைம் த்ரில்லர் படங்களையும் பார்க்கிறேன். நான் படிக்கும் புத்தகங்களிலிருந்து மாணவர்களுக்காகவும், ஆசிரியர்களுக்காகவும், பெற்றோர்களுக்காகவும் நான் நடத்தும் வகுப்புகளுக்கு நல்ல கருத்துக்கள் எனக்குக் கிடைக்கின்றன. எழுதுவதற்கும் புதிய புதிய கருத்துக்கள் கிடைக்கின்றன. சிந்தனைகள் எழுகின்றன. அந்த INSPIRATION-ல்தான் என்னுடைய வலையில் ‘தெரிந்ததும் தெரியாததும்’ என்ற தலைப்பில் பல கட்டுரைகள் முன்னால் எழுதியிருக்கிறேன்.

பொதுவாகப் பார்த்ததில் அரசியலைப் பற்றி முக நூலில் எழுதும் பொழுது பலர் ஆதரித்தும் பலர் எதிர்த்தும் கருத்துத் தெரிவிக்கிறார்கள். என்னைப் போலவே பலரும் அரசியல் ரீதியாக வலுவான கருத்துக்களைக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஆனால், மற்ற விஷயங்களைப் பற்றி எழுதும் பொழுது படிப்பவர்கள் மிக குறைவு. முகநூலில் அதிகமாக ‘LIKE’ வாங்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பிலிருந்து விடுபட விரும்புகிறேன். நல்ல விஷயங்களைப் பற்றியே எழுத விரும்புகிறேன்.  

வங்கியில் பணி புரிந்த காலத்திலிருந்தே எனக்கு HUMAN RESOURCES DEVELOPMENT –ஐப் பற்றிய ஈடுபாடு அதிகமிருந்தது. அதன் தொடர்ச்சியாகத்தான் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு YOUTH DEVELOPMENT-ஐ என்னுடைய ஒரு குறிக்கோளாக எடுத்துக்கொண்டு முடிந்த வரை ஒரு சில நடவடிக்கைகள் எடுத்து வருகிறேன். என்னுடைய முயற்சிகள் அடிக்கடி நான் மேற்கொள்ளும் வெளி நாட்டுப் பயணங்களினால் தடைபட்டு ஒரு தொடர்ச்சியில்லாமல் முழுமை பெறாமலேயே இருக்கின்றன. இது ஒரு குறைபாடுதான் என்பதையும் உணர்கிறேன்.

ஆலன் லைட்மேன் என்பவர் எழுதிய ACCIDENTAL UNIVERSE என்ற புத்தகத்தை படித்து வருகிறேன். இந்தப் புத்தகத்தைப் படிக்கும்பொழுது விஞ்ஞானத்தின் கடைசி எல்லையில்தான் வேதாந்தம் அமர்ந்திருக்கிறது என்று தோன்றுகிறது. இந்தப் பிரபஞ்சம் எப்படித் தோன்றியது, தோன்றுவதற்கு எது காரணமாக இருந்திருக்கிறது, கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா, அவர்தான் இந்த உலகத்தைப் படைத்தாரா, ஒரு அணுவுக்குள் இருப்பதும் நிகழ்வதும் தான் இந்தப் பிரபஞ்சத்திலும் இருக்கிறதோ, நிகழ்கிறதோ, விஞ்ஞானத்தால் தெரிந்து கொள்ள முடியாததை வேதாந்தத்தால் தெரிந்துகொள்ள முடியுமா, இந்த உலகம் ஒரு சீரான உலகமா, ஒரு விபத்தா, எல்லாமே MATERIALISTIC என்றால் மனம் என்பதை எப்படி வர்ணிப்பத்து….இப்படிப் பல கேள்விகள் என்னுள்ளேயே எழுகின்றன. ஒரு விஞ்ஞானியால் எழுதப்பட்ட இந்தப் புத்தகம் பல சுவாரசியமான கேள்விகளை எழுப்புகிறது. ஒரு சில இடங்களை ஆழ்ந்து படித்தாலொழிய புரிந்துகொள்வது கடினமாக இருக்கிறது. இது போன்ற புத்தகங்களை தமிழாக்கம் செய்யலாம் என்று தோன்றுகிறது. எப்படித் தொடர்பு கொள்வது என்று புரியவில்லை.

VISHEN LAKHIANI எழுதிய THE CODE OF EXTRAORDINARY MINDS என்ற இன்னொரு புத்தகத்தையும் ஒரு பெண்ணின் நிஜ வாழ்க்கையில் நடைபெற்றதைப் பற்றிய THE CULT NEXT DOOR என்ற புத்தகத்தையும் மாற்றி மாற்றி கொஞ்சம் கொஞ்சமாக படித்து வருகிறேன்.

இடையில் கபாலி படத்தை இணையதளத்தில் பார்த்தேன். ஒரே வார்த்தையில் சொல்வதானால் ‘போர்’ என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. இது போன்ற எவ்வளவோ ஆங்கிலப் படங்களை பார்த்துவிட்டதன் விளைவோ என்னவோ?

GOLIATH என்ற தொலைக்காட்சித் எட்டு பகுதிகள் அடங்கிய தொடரை AMAZON PRIME-ல் பார்த்து முடித்தேன். ஒரு பெரிய வழக்குறைஞர்கள் நிறுவனத்தை முன்பு துவக்குவதற்குக் காரணமாக இருந்த ஒரு வழக்கறிஞர் இப்பொழுது தனது நேரத்தை ‘பார்’களில் கழித்து வீணாக்கிக்கொண்டிருக்கும் வேளையில் ஒரு நண்பரின் வழக்கை நடத்துவதற்கு விருப்பமில்லாமல் ஒத்துக்கொள்கிறார். சிறிது நாட்களிலேயே அந்த வழக்கில் ‘சீரியசா’கி விடுகிறார். தோண்டத் தோண்ட பல பயங்கரமான உண்மைகள் வெளிவருகின்றன.  அவரது வாதத் திறமையால் அந்தப் பெரிய நிறுவனத்தின் முறைகேடுகளுக்காக நீதிமன்றத்தில் தண்டனை வாங்கிக்கொடுக்கிறார். முதல் இரண்டு பகுதிகள் மிகவும் SLOW MOTION-ல் போவது போலத் தோன்றினாலும் மற்ற பகுதிகள் விறுவிறுப்பாகச் சென்றன. மொத்தத்தில் விறு விறுப்பான ஒரு தொடரைப் பார்த்த திருப்தி ஏற்பட்டது. DAVID AND GOLIATH பைபிளில் வரும் மிகவும் சுவாரசியமான எனக்கு மிகவும் பிடித்த கதை. ஒரு பெரிய அரக்கனை எப்படி ஒரு சிறுவன் தனது திடமான இறை நம்பிக்கையினாலேயே வென்றான் என்பதைப் பற்றியது. FAITH என்பது வாழ்க்கையில் ஒரு முக்கியமான தேவை என்பதை உணர்த்தும் கதை. இதை என்னுடைய SHORT STORIES FOR YOUNG READERS: FOR PERSONALITY DEVELOPMENT என்ற புத்தகத்தில் பயன்படுத்தியிருக்கிறேன்.  இதே DAVID AND GOLIATH என்ற தலைப்பில் MALCOM GLADWEL எழுதிய இன்னொரு சுவாரசியமான புத்தகத்தை ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு படித்திருக்கிறேன்.

                                                            …அடுத்த வாரம் மீண்டும் சந்திக்கலாம்

Saturday, January 07, 2017

Richard Branon, the British Entrepreneur, Founder of Virgin Group of Companies, the Adventurist and the Philanthropist

Richard Branson

Early life

Richard Branson was born in 1950 in Blackheath, London as the eldest to Eve Branson, a former ballet dancer and air hostess and Edwrd James Branson, a barrister. His grandparents and great grandparents had lived in Madras, India, and Richard Branson is believed to have 3.9% Indian DNA.  He attended the school until his age sixteen.   He is reported to have suffered from dyslexia and had poor academic performance as a student. His headmaster seemed to have told him on the final day of his school that he would end up either in prison or become a millionaire.  

Career

After leaving the school at his young age of 16, still struggling, he started his ‘Student’ – a youth-culture magazine, from a church – run by the students and for the students.  He sold $8,000 worth of advertising in its first edition, during 1966. The first run of 50,000 copies was distributed for free, after Branson covered the costs with advertising. He interviewed several prominent personalities of the late 1960s and advertised popular records in the magazine. It became an instant success.   By 1969, Branson was living in a London commune, surrounded by the British music and drug scene. It was during this time in 1971 that Branson had the idea to begin a mail-order record company called Virgin (a name suggested by one of his employees, as they were all new at business) to help fund his magazine efforts. He sold successfully music records under the name ‘Virgin’ to the less-popular stores. The company performed modestly, but made Branson enough that he was able to expand his business venture, adding a record shop in Oxford Street, London. With the success of the record shop, the high school drop-out was able to build a recording studio - Manor Studio - in 1972 in Oxfordshire, England. He then leased out the studio time to several budding artists (including a few controversial bands), of which Mike Oldfield’s album Tubular Bells became a best-seller. In the early 1980s, his novelty record ‘Baa, Baa, Black Sheep’ (singing as a sheep, baa-ing along to a drum instrument became a great hit in 1980s. Eventually, Virgin Music became one of the top six record companies in the world.

                                                          

                                                                        (Branson’s Manor Studio)

From there, it was a non-stop high-speed trajectory into several more business enterprises for Richard Branson. To mention the major ones:

1.       In 1982, Virgin purchased the gay nightclub Heaven.
2.      While he waited to travel to Puerto Reco, his flight was canceled. In the spur of the moment, he decided to charter a flight for his journey and offered to fly a number of stranded passengers for a very small fee to cover a part of the cost. He then formed Virgin Atlantic Airways in 1984. Subsequently, he started several other airlines companies, Virgin Express, Virgin Nigeria, Virgin America, Virgin Blue (since renamed Virgin Australia) and the unsuccessful Virgin Cola, and Virgin Vodka. Later, Branson also bought a 20% stake in the Malaysian’s Air Asia.
3.      In 1993, he won the franchise to run the train services for the former Intercity West Coast and Cross-country sectors of the British Rail. Virgin Trains was considered to be one of the riskiest businesses Branson had ever undertaken.
4.      In 1999, he launched Virgin Mobile
5.      In September, 2004, he announced the signing of a deal under which a new space-tourism company, Virgin Galactic, will licence the technology behind the Spaceship One – an initiative funded by Microsoft co-founder Paul Allen and designed by the legendary American aeronautical engineer and visionary Burt Rutan – to take paying passengers into suborbital space. The tickets are expected to be priced around £200000 and the venture will use Scaled Composite White Knight Two space-crafts. After several delays, in April 2013, the project made an impressive leap forward with the test launch of the first SpaceShip. However, in October 2014, his SpaceShip Two VSS Enterprise broke up in flight and crashed in the Mojava desert.
6.      His latest venture is into Virgin Fuels in search of cleaner, environmental friendly fuel, especially in view of rising cost of space fuels. In September, 2006 he pledged the profits of Virgin Atlantic and Virgin Trains for research into environmental friendly fuel and his pledge is estimated to be in the order of US$ 3 billion.
7.      During July 2006, he sold his Virgin Mobile company to UK cable TV, broadband, and telephone company NTL/NTL Telewest for £1 billion. He then launched a new company, Virgin Media, with great fanfare, to integrate both the companies’ compatible businesses, and he owned only 15% in the new company.
8.      In 2006, in collaboration with some of the famous names like Deepak Chopra, Shekhar Kapur, Sharad Devarajan and Gautham Chopra, Branson formed Virgin Comics and Virgin Animation, an entertainment company focused on creating new stories and characters for a global audience.
9.      Branson launched the Virgin Health Bank on 1 February 2007, offering parents-to-be the opportunity to store their baby's umbilical cord blood stem cells in private and public stem-cell banks. On 10 January 2008, Branson's Virgin Healthcare announced that it would open a chain of health care clinics that would offer conventional medical care alongside homeopathic and complementary therapies, a development that was welcomed by the British Government.
10.   When Northern Rock, a British bank (formerly the Northern Rock Building Society) suffered a bank run during the credit crisis in 2007 (the first ever bank in the 150 years of British history to suffer bank run) and failed to find a commercial buyer, it was taken over as a public ownership bank in 2008. In Oct 2007, Branson’s Virgin Group’s attempt to add Northern Rock Bank to its fold was foiled due to the vigorous negative campaign (of tax evasion by Branson) by the Liberal Democrats in Britain. However, in 2012, Virgin bought Northern Rock and changed the name to Virgin Money.
11.    After February 2009, his Virgin organization sponsored the new Brawn GP car racing team which was eventually bought over by Mercedes Benz, Branson invested in an 80% buyout of Manor Grands Prix and renamed it Virgin Racing.
12.   In 2010, Branson became patron of the UK's Gorden Bennet 2010 gas balloon race, which had 16 hydrogen balloons flying across Europe.
13.   In April 2012 Virgin Care commenced a five-year contract for provision of a range of health services which had previously been under the aegis of NHS Surrey, the local primary care trust. By March 2015 Virgin Care was in charge of over 230 services nationwide.
14.   In July 2012, Branson announced plans to build an orbital space launch system, designated Launcher One. Four commercial customers have already contracted for launches and two companies are developing standardised satellite buses optimised to the design of LauncherOne, in expectation of business opportunities created by the new Smallsat launcher.  
15.   In August 2012, when the franchise for the West Coast Main Line, managed by Virgin Rail since 1997 came to an end, the contract was awarded to another group in a competitive tender process by the government. However, Branson complained unfair treatment in the tendering process, and, after considerable battle, the award to the other group was cancelled enabling Virgin Rail to continue to operate the West Coast Line.

16.   In September 2014, Branson announced his investment in a drone company 3D Robotics, seeing great potential in the drone business. 
                                                       
                                                                                 ... to be continued

Richard Branson, the British Entrepreneur, founder of Virgin group of companies, adventurist and philanthropist

Before I looked at the various achievements of Richard Branson I looked at some of his work and life philosophies. Behind every successful man or woman there are his or her beliefs, perceptions, ideas and philosophies that make him successful. Without a right attitude, one's knowledge, talents, and resources may not necessarily bring success.

Here are some of the quotes on ‘Attitude’ from Richard Branson that I liked most:

     1.      You don't learn to walk by following rules. You learn by doing, and by falling over.
     2.      Do not be embarrassed by your failures, learn from them and start again.
    3.      My general attitude to life is to enjoy every minute of every day. I never do anything with a feeling of, ’Oh God, I’ve got to do this today.’
    4.       My attitude has always been, if you fall flat on your face, at least you're moving forward. All you have to do is get back up and try again.
    5.       When I was four, my mother insisted I get out of the car and find my own way home. Although I got lost, I did find my way home. It taught me the value of independence at an early age.
    6.       Back when I was in school, few people understood dyslexia and what to do for it. My teachers thought I was lazy and not very clever, and I got bored easily... thinking of all the things I could do once I left school. I couldn't always follow what was going on.
     7.       The balloons only have one life and the only way of finding out whether they work is to attempt to fly around the world.
      8.       From a young age, I learned to focus on the things I was good at and delegate to others what I was not good at. That's how Virgin is run. Fantastic people throughout the Virgin Group run our businesses, allowing me to think creatively and strategically.
      9.       Fun is one of the most important - and underrated - ingredients in any successful venture. If you're not having fun, then it's probably time to call it quits and try something else.
     10.   A passionate belief in your business and personal objectives can make all the difference between success and failure. If you aren't proud of what you're doing, why should anybody else be? 
       11.   I think it's quite great to set yourself a big challenge, and then you've got another reason for keeping fit. 
       12.   My interest in life comes from setting myself huge, apparently unachievable challenges and trying to rise above them. 
     13.   I'm not the sort of person who gives up on things. The first time we crossed the Atlantic in the balloon, it crashed, and we went on and did the Pacific. First time we crossed the Atlantic in a boat, it sank, and we went on and got the record. So, generally speaking, we will pick ourselves up, brush ourselves down, and carry on.
      14.   On one of my last days at school, the headmaster said I would either end up in prison or become a millionaire. That was quite a startling prediction, but in some respects, he was right on both counts! 
      15.   Overcoming fear is the first step to success for entrepreneurs. The winners all exemplify that, and the hard work and commitment they have shown underlines what is needed to set up a business. 
      16.   Treat failure as a lesson on how not to approach achieving a goal, and then use that learning to improve your chances of success when you try again. Failure is only the end if you decide to stop. 

      17.   When I was a kid, I had a tendency to criticize. But when I did, my mum would whisk me off to the bathroom to stand in front of a mirror. Ten minutes, never less. To think about how criticism is a poor reflection on the one who criticizes. 
                                           .... to be continued

Thursday, January 05, 2017

Richard Branson, the Entrepreneur, Founder of Virgin Group of companies, the adventurist and the philanthropist

Richard Branson

"I believe in benevolent dictatorship, provided I am the dictator." - Richard Branson

While reading a book titled “The Code of the Extraordinary Mind” by Vishen Lakhiani I learnt about the British Entrepreneur and founder of Virgin Group of companies, Richard Branson who has founded nearly 200 companies in more than 30 countries, including the United Kingdom, the United States, Australia, Canada, Asia, Europe and South Africa. After he quit his school at his age 16, his entrepreneurial projects started in the music industry and expanded into other sectors, making Branson a billionaire.  Branson is also known for his adventurous spirit and sporting achievements, including crossing oceans in a hot air balloon. He is also an acclaimed philanthropist. A brief mention about him and his philosophy to work and success in that book suddenly spurred me to research on him to know more details about this interesting personality.

I intend sharing what I learnt about him with all my blog readers. I hope you would be equally keen to know him. 

"I am not a person who looks back on my life with regret. I have always followed the motto: Life is best lived looking forward and looking up." - Richard Branson

Sunday, January 01, 2017

01.01.17 இந்த வார நாட் குறிப்பு

01.01.17 இந்த வார நாட் குறிப்பு

ஆங்கிலத்தில் நான் எழுதும் புதிய முழு நீள கதைப் புத்தகமான LONELY II –வை கடந்த வாரத்தில் தொடங்கியிருக்கிறேன். LONELY முதல் புத்தகத்தைப் படித்த பலர் அதைப் பற்றி நல்ல அபிப்பிராயம் கொடுத்தது என்னை இரண்டாவது புத்தகத்தை எழுத தூண்டியிருக்கிறது. முதல் புத்தகத்தில், தன் மனைவி கௌரியுடன் அமெரிக்கா செல்ல விருப்பமில்லாமல் திரு மணி சங்கர் மனைவியை விமானத்தில் ஏற்றிவிட்ட கையோடு திடீர் உந்துதலால் தன்னிடம் இருக்கும் ஒரே தோள்பையை மட்டும் சுமந்துகொண்டு இமயமலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் ஜோஷிமட் என்ற இடத்துக்குத் தனிமையைத் தேடிப் போகிறார். அங்கே, எதிர்பாராத விதமாக, ஷர்மிலி என்ற மனநிலை குன்றிய ஒரு பெண், ஒரு உணவு விடுதியில் வேலை செய்யும் கோபி என்ற ஒரு ஆதரவற்ற இளைஞன், தனது இளவயது நண்பரும் காதலியுமான பூமிகாவின் மகளான சித்ரா என்ற கிறிஸ்துவ சகோதரி பீட்ரீஸ், ஓடிப்போன தனது மனைவியை நினைத்து மனதிலேயே புழுங்கிக் கொண்டிருக்கும் கேர்னல் பணிக்கர், ஹரித்வார் கும்பமேளாவில் தங்கள் பையனை தவறவிட்ட ராஜஸ்தானைச் சேர்ந்த டாக்டர் விக்ரம், டாக்டர் சோனியா தம்பதிகள், இமாலயத்தில் தீர்த்த யாத்திரை சென்ற போது ஏற்பட்ட ஒரு விபத்தில் மனைவியை இழந்த கோவில் பூஜாரி மிஸ்ரா இவர்களை சந்திக்கிறார்.  அவர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் தன்னுடன் பிணைந்திருப்பதையும் அவர்கள் ஒவ்வொருவரின் சோகத்துக்கும் தான் ஒரு அருமருந்தாக இருப்பதையும் மணி சங்கர் ஜோஷிமட்டில் தங்கியிருக்கும் ஒரு சில மாதங்களில் கண்டுகொள்கிறார். தன் இளவயதுக் காதலை மனைவி கௌரியிடமிருந்து மறைத்து வைத்த இதய பாரத்தையும் அங்கே இறக்கி வைக்க நேருகிறது. ஒரு சில நாட்கள் தனிமையில் கழிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு ஜோஷிமட் சென்ற மணி சங்கருக்கு அங்கே கிடைத்த புதிய நட்பு வட்டாரம், அவர்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட பல சோகங்கள், அந்த சோகங்களை நீக்குவதற்கு எப்படி தன்னை அறியாமலேயே தான் ஒரு கருவியாகப் பயன்பட்டிருக்கிறார் என்பது போன்ற மனதைப் பிழியவைக்கும் பல சம்பவங்களின் பின்னணியில் LONELY கதை அமைக்கப்பட்டிருந்தது. இந்தக் கதையைப் படித்து ஒரு சிலர் கண்ணீர் விட்டதாகவும் எனக்கு எழுதியிருந்தது எனக்கே பெருமையாக இருக்கிறது.

LONELY II-வில் மணி சங்கர் தனது குழந்தைகளின் விருப்பத்தை தட்ட இயலாமல் அமெரிக்கா செல்வதற்கு விமானம் ஏறுகிறார். எப்பொழுதும் தனிமையையே விரும்பும் மணி சங்கருக்கு அவரது அமெரிக்க பயணத்தின் போது என்ன நடக்கிறது என்பதுதான் LONELY II-வின் கதை.

LONELY முதல் புத்தகத்தை கண்டிப்பாகப் படித்துப் பாருங்கள். www.pothi.com என்ற வலைப்பக்கத்தில் கிடைக்கும். கூகுள் தேடலில் LONELY www.pothi.com என்று தட்டினால் போதும். அந்த வலைப் பக்கத்துக்குப் போய்விடலாம். அச்சடிக்கப்பட்ட புத்தகத்தின் விலை கொஞ்சம் அதிகம்தான். ஏனென்றால் PRINT ON DEMAND என்ற ப்ளாட்ஃபாரத்தில் அந்தப் புத்தகத்தை ஒவ்வொன்றாக ஆர்டர் வர வர அச்சடித்துக் கொடுக்கிறார்கள். அதே வலையில் என்னுடைய இன்னொரு நாவலான THE PATH என்ற புத்தகமும் கிடைக்கும்.

விரைவில் இந்த இரண்டு புத்தகங்களையுமே eBook –ஆக வெளியிட உத்தேசம்.

கடந்த வாரத்தில் 1) THE CODE OF THE EXTRAORDINARY MINDS 2) THE CULT NEXT DOOR AND 3) BRIDGE OF SPIES என்ற மூன்று புத்தகங்களை ஒரே நேரத்தில் வாசிக்கத் தொடங்கியிருக்கிறேன். நான் தான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேனே, அமெரிக்கா வந்தால் புத்தகங்களும் பொது நூலகமும்தான் என்னுடைய நெருங்கிய தோழர்கள் என்று. THE DIARY OF HARRY FOX என்ற உப்பு சப்பில்லாத ஒரு புத்தகத்தை அதில் என்னதான் இருக்கிறது என்று கண்டு பிடிப்பதற்காக படித்துத் தீர்த்தேன். ஏற்கெனவே எனக்குத் தெரிந்த ஆங்கில எழுத்தாளர்களின் சமீப கால புத்தகங்களில் மீண்டும் மீண்டும் அரைத்த மாவையே திரும்பத் திரும்ப அரைக்கிறார்கள் என்ற உணர்வு எனக்கு வந்து விட்டது. ஆரம்ப எழுத்தாளனான எனக்கும் நாளாவட்டத்தில் இது நடக்கலாம் என்ற அறிவும் எனக்கு இருக்கிறது. ஒரு கலைஞனுக்கு கற்பனை வளம் நாளாக நாளாக குறைந்து விடும் போலிருக்கிறது. ஆரம்பகாலத்தில் இருந்த சூடு போகப் போகக் குறைந்து விடுகிறது. ஏ.ஆர். ரகுமான் சமீபத்தில் எங்கேயோ குறிப்பிட்டிருந்தார், ‘எனக்கும் வயதாகிறது. முன்னைப் போல் இல்லை’ என்று. அது அவரின் இசையிலும் தெரிகிறது. முன்னர் இந்தச் சரிவு எம்.எஸ்.விஸ்வனாதன், இளையராஜா இருவருக்கும் நேர்ந்திருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்களான NEALE DONALD WALSCH, DEEPAK CHOPRA, DAVID BALDACCI, JOHN GRISHAM போன்ற பலருக்கும் நேர்ந்திருக்கிறது. முக்கியமாக, வியாபார நோக்கத்தோடு கலையைத் தொடர்கிற போதுதான் இந்தக் கற்பனைச் சரிவு அதிகமாக ஏற்படுகிறது என்று நினைக்கிறேன்.

கடந்த வாரம் ரஜனிகாந்த் நடித்த கபாலி படத்தை வலையில் முதன் முதலாகப் பார்த்தேன். ஜவ்வு போல இழு இழு என்று இழுத்துக்கொண்டு போன இந்த படத்துக்கு நடிக்க ரஜனிகாந்த் எப்படி ஒத்துக்கொண்டார் என்று தெரியவில்லை. பழைய GOD FATHER படத்தை ரீமேக் செய்தது போலத் தோன்றியது. என்ன செய்வது ரசிப்பதற்கு மக்கள் இருக்கிறார்கள். WHAT THEY DESERVE THEY GET.

அதே போல வலையில் ‘தொடரி’ என்று ஒரு படம் பார்த்தேன். பரவாயில்லை. பல ஆங்கிலப் படங்களைப் பார்த்துப் பார்த்து INSPIRATION என்ற பெயரில் எடுத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். ஆனால், காமெடி என்ற பெயரில் அவர்கள் செய்யும் கலாய்ப்புதான் சகிக்க முடியவில்லை.

இந்த முறை அமெரிக்கா வந்த பிறகு யோகா பயிற்சியை முன்னைவிட அதிக  நாட்களில் செய்து வருகிறேன் என்பதில் எனக்கு ஒரு திருப்தி.

பேரக் குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸுக்காக பள்ளி விடுமுறையென்பதால் அவர்களுடன் அதிக நேரம் செலவிட முடிகிறது. அவர்கள் எனக்கு நிறைய பொறுமையைக் கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எப்பொழுதும் ஏதேனும் செய்த வண்ணம் இருக்கும் நான் எதுவும் செய்யாமல் அவர்கள் ‘லெவலு’க்கு கீழிறங்கி வந்து நேரத்தைச் செலவிடுவதைத் தொடர்ந்து கற்றுக்கொண்டு வருகிறேன்.

ஃபீனிக்சில் பருவ நிலை நன்றாக இருக்கிறது. பாலைவனப் பகுதியானதால் காலையும் மாலையும் மிதமான குளிரும் பகல் நேரத்தில் நல்ல சூரிய வெளிச்சமும்  நிலவுகிறது.

இந்த வாரத்தின் மூன்று முக்கிய நிகழ்வுகளான 1) அ.தி.மு.காவில் சசிகலாவின் பதவியேற்பு 2) அதிக மதிப்புள்ள ரூபாய் 500 மற்றும் 1000  நோட்டுக்களை வங்கியில் செலுத்துவதற்குண்டான கால அவகாசம் 31.12.2016-ஓடு முடிவடைவது, பிரதமரின் உரை, முந்தைய நிதி மந்திரி சிதம்பரத்தின்  நேர்காணல், வருமான வரித்துறையின் தடாலடியால் வெளியே வரும் கோடி கோடியான கறுப்புப் பணம் மற்றும் 3) உ.பி யில் அப்பாவும் பிள்ளையும் பதவிக்கு அடித்துக்கொள்ளும் நாடகம் இவையெல்லாமே ஒரு விதத்தில் மனக் கலக்கத்தை ஏற்படுத்துகின்றன. நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் என்று நினைத்தால் வருத்தமாகத்தான் இருக்கிறது. நான் ஏற்கெனவே எழுதியபடி மக்கள் இப்பொழுதாவது சுதாரித்துக் கொண்டு புத்திசாலித்தனமாக நடந்து கொண்டால்தான் அவர்களின் கர்மவினைப் பலன்களிலிருந்து தப்பிக்க முடியும் என்று நம்புகிறேன். WE GET WHAT WE DESERVE என்பதை முழுவதுமாக நம்புகிறேன். நமது தகுதியை மேம்படுத்திக்கொள்வதன் அவசியத்தை இவை உணர்த்துகின்றன. நாம் எல்லோரும் ஒருவருக்கொருவர் ஏதோ ஒரு விதத்தில் பிணைக்கப் பட்டிருக்கிறோம். அதனால் சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் செய்யும் காரியங்களுக்கு அவர்களுடன் நாம் பிணைக்கப்பட்டிருக்கிறோம் என்ற ஒரே காரணத்தினால் எல்லோரும் அந்தச் செயல்களின் விளைவுகளை அனுபவித்தேயாக வேண்டும். இதிலிருந்து தப்பிக்க முடியாது. எல்லாம் வல்ல இறைவன் நம்மைக் காக்கட்டும்.

வேதத்தில் சொல்லியிருக்கிற “சஹனாவவது. சஹனௌபுகத்து. சகவீர்யம் கர்வாவஹை. தேஜஸ்வி. நா அதீதமஸ்து. மா வித்விஷாவஹை: ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி://” என்ற மந்திரத்தை மீண்டும் மீண்டும் நாம் எல்லோரும் சொல்வது மிகவும் அவசியம் என்று கருதுகிறேன்.

“(எல்லாம் வல்ல அந்த) இறைவன் நம்மைக் காக்கட்டும்.  நமக்கு சக்தியளித்து ஊக்குவிக்கட்டும். எல்லோரும் ஒன்றாக இணைந்து சக்தியுடனும், உற்சாகத்துடனும் உழைப்போமாக.  நாம் கற்பது நல்லதாக இருக்கட்டும். கற்பது நம்மை மேம்படுத்தட்டும். நம்மை விரோத மனப்பான்மையிலிருந்து விலகியிருக்கச் செய்யட்டும். எங்கும் அமைதி நிலவட்டும்.”

நன்றி. எல்லோருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.


                                                …மீண்டும் சந்திக்கலாம்