Total Pageviews

Saturday, January 30, 2016

Antartica - Thrilling stories/அண்டார்ட்டிக்காவைப் பற்றிய திகிலூட்டும் சில உண்மைக் கதைகள்

Sky, space, sea, mountains, and snow, invariably, had mystifying effects on me. They had always looked beautiful and marvelous, from a distance. But when I am in it, it only scares me.

Recently, I happened to read an article on The Hindu dt.25th January, 2016 about a 55-year-old British explorer, Henry Worsley who died trying to cover his 1000 mile solo trek, pulling his supplies in a sled, over 71 days, to the South Pole on the Antartica Sea. He was almost there near his target, only 30 miles short, when he suffered from exhaustion and dehydration. He called for help and was airlifted, off the ice. But he died. And the exploration had helped raise 100000 pounds for the benefit of the wounded troops. A noble purpose.

I was suddenly interested on anything about Antartica. And I started my research, as usual on the internet. I felt impelled to research on the earlier adventurous exploration of Antartica and I found very interesting real life stories.

I intend writing about them in my blog in Tamil over the next few weeks. However, wherever possible, I shall give the link to the internet for details in English.

Here is the link for the story about Henry Worsley on The Hindu:
http://www.thehindu.com/news/international/british-explorer-dies-on-solo-antarctic-trek/article8151536.ece

பரந்த வானம், வானத்தின் வெட்டவெளி, ஆழ்ந்த கடல், மலையுச்சிகள், குறிப்பாக பனிபடர்ந்த மலைகள், மற்றும் பனிப் பொழிவு இந்த நான்கும் தள்ளி நின்று  பார்ப்பதற்கு அழகாகவும், பிரமிப்பாகவும் இருந்தாலும், அருகே போனால் ஒரு வித பயத்தையே எனக்குக் கொடுத்திருக்கின்றன. இன்றும் எனக்கு மர்மமாகவே இருக்கின்றன.  இவற்றைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு எனக்கு எப்பொழுதும் ஆர்வம் இருந்திருக்கிறது. இவற்றைப் பற்றிப் படிக்கும் பொழுதும், கேள்விப்படும் பொழுதும், பார்க்கும் பொழுதும், பேசும் பொழுதும் எனக்குப் புல்லரித்திருக்கிறது.

சில நாட்களுக்கு முன்பு இந்து ஆங்கில செய்தித்தாளில் வந்த ஒரு செய்தி என்னை திகைக்க வைத்தது.

55-வயதே ஆன ஹென்றி வொர்ஸ்லி என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த ஆய்வுப்பயணி….
            71 நாட்களாக….
தனக்கு இன்றியமையாத உணவு, உடை பொருட்களை ஏற்றிய ஒரு சறுக்கு  வண்டியையும் இழுத்துக்கொண்டு….
தென் துருவத்திலிருக்கும் அண்டார்டிக் கடலில் பனிப்பாறைகளின் மேல்…..
ஒரு தனி மனிதனாக…..
1000 மைல்கள் (1600 கி.மீ) நடக்க வேண்டும் என்ற இலக்கை அடைய 30 மைல்களே இருந்த நிலையில்….
உடலில் தண்ணீர் வற்றிப்போய் ஆயாசப்பட்டு உதவிக்கு செய்தி அனுப்ப….
வான் வழியே அவரைக் காப்பாற்ற முயற்சித்திருக்கிறார்கள்.
இருந்தும் அவர் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.
இந்த ஆய்வுப் பயணத்தை ஹென்றி வொர்ஸ்லி மேற்கொண்டதன் மூலம் காயப்பட்ட படைவீரர்களின் நலனுக்காக ஒரு லட்சம் பவுண்ட்  (சுமார்  ஒரு கோடி இந்திய ரூபாய்) நிதி திரட்டியிருக்கிறார்.

சற்று யோசித்துப் பார்த்தேன்…. பனிப்பாறைகளின் மீது நாளொன்றுக்கு 14 மைல் 71 நாட்கள் தொடர்ந்து 970 மைல் தூரம் நடந்திருக்கிறார். எவ்வளவு பெரிய சாதனை. ஒரு நல்ல குறிக்கோளுக்காக தன் உயிரையே பணயம் வைத்து நடந்திருக்கிறார்.

அண்டார்ட்டிக்கா கடல் என்ன சாதாரணமானதா?

உடனே வலையில் அண்டார்ட்டிக்கா பற்றிய தகவல்களை படிக்கத் தொடங்கினேன். அண்டார்ட்டிக்காவுக்கு செல்வதற்கு எத்தனையோ பேர் துணிந்து, நவீன வசதிகள் இல்லாத போதும் கூட முயன்றிருக்கிறார்கள் என்பதை படிக்கும்பொழுது மிக ஆச்சரியமாகவும், திகிலாகவும் இருந்தது. ஒரு சில உண்மைக் கதைகளைப் பற்றி எழுத வேண்டும் என்று தோன்றியது.

முதலில் அண்டார்ட்டிக்காவைப் பற்றிய சில பொதுவான விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

அண்டார்ட்டிக்கா என்ற பகுதியைப் பற்றிய யூகங்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலேயே மனிதனுக்கு இருந்திருக்க வேண்டும். என்று தோன்றுகிறது. ‘டெர்ரா ஆஸ்திரேலிஸ்’ (தெற்கு நிலப்பரப்பு) என்ற ஒரு நிலப்பரப்பு பூமியின் தென் கோடியில் இருப்பதாக மேலை நாட்டினர் வெகு காலமாக நம்பி வந்திருக்கின்றனர். 

முதன் முதலாக 1773-ல் ஜேம்ஸ் குக் என்ற மாலுமி அண்டார்ட்டிக்காவை சுற்றி வந்திருந்தாலும் ஒரு சில தீவுகளை மட்டுமே தொட்டிருக்கிறார். அண்டார்ட்டிக்காவுக்கு செல்ல முடியவில்லை.

1820-களில் பல ஆய்வுப் பயணிகள் அண்டார்ட்டிக்காவை நோக்கி படையெடுத்து பனிப்பாறைகள் நிறைந்த இந்த கண்டத்தைப் பற்றி ஓரளவு தெரிந்து வைத்திருக்கின்றனர். அண்டார்ட்டிக்காவை முதன் முதலில் கண்டுகொண்டவர் ரஷ்யர்கள்.

பின்பு 1821-ல் அமெரிக்க மாலுமியான ஜான் டேவிஸ் என்பவர்தான் அண்டார்ட்டிக்காவின் பனிப்பாறைகளின் மீது முதன் முதலாக காலெடுத்து வைத்திருக்கிறார்.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில் பல ஆய்வுப் பயணங்கள் தென் கோடியை   நோக்கி சென்றிருக்கின்றன. பெரும்பாலானவர்கள் தங்கள் முயற்சியில் தோல்வியடைந்து காயப்பட்டு திரும்பி விட்டனர், அல்லது உயிரை விட்டிருக்கின்றனர். இறுதியில் ஆங்கிலேய மாலுமியான ராபெர்ட் ஸ்காட் என்பவரின் தீரமான முயற்சி தோல்வியடைந்ததையொட்டி, டிசம்பர் 14, 1911 அன்று நார்வேக்காரரான ரோல்ட் அமுன்ட்சென் வெற்றிகரமாக தென் துருவத்தில் அண்டார்ட்டிக்காவில் காலெடுத்து வைத்திருக்கிறார்.

அண்டார்ட்டிக்காவைப் பற்றிய சில சுவையான தகவல்கள்
அண்டார்ட்டிக்கா பூமியின் தென் கோடியில் தென் துருவத்தை அடக்கியுள்ள ஒரு கண்டம். தென் கடல்கள் இதனை சூழ்ந்திருக்கின்றன. ஆசியாவுக்கு அடுத்த படியாக 5.4 மில்லியன் சதுர மைல்கள் பரப்பளவு கொண்ட ஐந்தாவது பெரிய, முழுவதுமாக பனி சூழ்ந்த கண்டம். பூமியின் மிகக் குளிர்ந்த, உலர்ந்த, அதிகமாக காற்று வீசும் பகுதியும் அண்டார்ட்டிக்காதான்.    

இரண்டு பகுதிகளாகக் கொண்ட அண்டார்ட்டிக்காவில் கிழக்குப் பகுதியின் – சுமார் ஆஸ்திரேலியாவின் அளவு கொண்டது - பனிப்பாறைகளின் உயரம் சராசரியாக 1.2 மைல்கள். மேற்கு அண்டார்ட்டிக்கா பெரும்பாலும் தென் அமெரிக்காவின் தென் முனைவரை தொடரக்கூடிய, உறைந்து போன பல தீவுகளைக் கொண்டது. இந்த இரண்டு பகுதிகளையும் அண்டார்ட்டிக்கா முழுவதும் பரந்திருக்கும் பெரிய மலைத் தொடர் ஒன்று பிரிக்கிறது.

அண்டார்ட்டிக்காவில் காணப்படும் பனிக்கட்டியின் பரப்பளவு பனியால் உறைந்த ஆறுகளின் (Glaciers) ஓட்டத்தின் காரணமாக உடைக்கப்பட்டும், பிளக்கப்பட்டும் மாறிக்கொண்டே இருக்கின்றது. அது மட்டுமல்லாமல் மேற்பகுதியில் காணப்படும் அதிக கனமில்லாத பனிக்கட்டி போர்வைகளுக்குக் கீழே நூற்றுக்கணக்கான அடிகள் ஆழம் கொண்ட பனிக்கட்டி பிளப்புகளும் (Crevasse) காணப்பட்டுகின்றன.

பெரும்பாலும் ஈரப்பசை இங்கே காணப்படாததால் பொதுவாக அண்டார்ட்டிக்காவை ஒரு பாலைவனமாகவே கருதுகின்றனர். இருந்தும் பல நேரங்களில் பனித்துகள்களை சுமந்துகொண்டு 200 மைல் வேகம் வரை கூட வீசும், பலத்த குளிர் காற்றுக்கு (blizzard) அண்டார்ட்டிக்கா பிரபலமானது.

அண்டார்ட்டிக்காவில் கொதிக்கும் வெந்நீரை மேலே விட்டெறிந்தால் அது உடனேயே நீராவியாகவும் சிறு பனிக்கட்டிகளாகவும் மாறிவிடும் என்பது ஒரு ஆச்சரியமான விஷயம்.

அண்டார்ட்டிக்காவின் பனிக்கட்டிகள் உருகினால் பூமியின் மற்ற பகுதிகளிலுள்ள கடல் நீர் மட்டம் 200 அடி வரைகூட உயருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

2000-ஆம் ஆண்டு ராஸ் பனித்தட்டுகளிலிருந்து (Ross Ice Shelves) கடல் மட்டத்துக்கு மேல் 4250 சதுர மைல்கள் மேற்பரப்பளவு கொண்ட (அமெரிக்காவின் டெக்சாஸ் மானிலத்தின் அளவு) ஒரு பனிப்பாறை பிளந்து விழுந்ததுதான் இதுவரை நேர்ந்த பனிப்பிளவுகளிலேயே மிகப் பெரியது.  பிளந்து விழுந்த பகுதியைப் போல பத்து மடங்கு பெரிய பாறைகள்  நீர் மட்டத்துக்குக் கீழே இருந்தன என்பதுதான் இன்னொரு ஆச்சரியம்.
      அக்டோபர் முதல் பிப்ரவரி வரை கோடை காலமாகவும் ஆண்டின் மற்ற மாதங்கள் குளிர் காலமாகவும் இங்கு காணப்படுகின்றன. பூமியின் வடக்குப் பகுதிகளுக்கு நேரெதிரான பருவ நிலை. மரம், செடி, கொடிகள் இங்கு வளர்வதில்லை. பெங்குவின், வேல், சீல் போன்ற கடல் இனங்களை கடலோரப் பகுதிகளில் காணலாம்.

நிரந்தரமாக இங்கு வசிப்பவர்கள் யாருமில்லை என்றாலும் பல ஆராய்ச்சிகளுக்காக ஆயிரத்திலிருந்து ஐயாயிரம் வரை மக்கள் இங்கே எந்நேரத்திலும் தங்கியிருப்பதைக் காணலாம்.  

அண்டார்ட்டிக்கா பகுதியில் ராணுவ நடவடிக்கைகள், கனிம வளங்களெடுத்தல், அணு பரிசோதனை செய்தல் போன்ற சுற்றுப்புற சூழ்னிலையை பாதிக்கக் கூடிய எந்த செயல்களிலும் ஈடுபடமாட்டோம் என்ற அண்டார்ட்டிக்கா ஒப்பந்தத்தில் (1959)  சுமார் 50 நாடுகளுக்கு மேல் கையெழுத்திட்டிருக்கின்றனர்.
    இனி அண்டார்ட்டிக்காவை வெல்வதற்கு படையெடுத்த ஒரு சிலரது கதைகளைப் பார்ப்போம்.
                                                                                                தொடரும்……..
.................................................................................................................................................................

என்னுடைய 'தெரிந்ததும், தெரியாததும்' கட்டுரைகளை படித்திருக்கிறீர்களா?



Saturday, January 23, 2016

"The Outsider" - A book review

The Outsider
-          My Life in Intrigue
By
Frederick Forsyth

Frederick Forsyth is one of my favorite authors. I have read some of his earliest books like The Day of the Jackal, Devil Alternative, Dogs of War, and Odessa File during the early and late 1970s, if I remember correctly. While working in New Delhi, I had lived in Karolbagh and Old Rajender Nagar. There were a couple of old books, pavement shops on the corner of Arya Samaj Road and Ajmalkhan Road. Many second-hand books by popular authors were available for throwaway prices and I was one of their regular clients. As I was on a transferable job, my biggest challenge was to transport my book collections, which took away most of the transport allowance I received from my employer.

‘The Day of the Jackal’ is about the assassination attempts on the then President De Gaulle of France. ‘Odessa File’ was about the secret files maintained by an International German organization - ODESSA, established before the defeat of Nazis in the Second World War, to protect the former officers of the SS after the War. ‘The Dogs of War’ is about the secret mission of some British, colluding with a few African mercenaries, to depose one of the African nations. I currently do not remember the theme of ‘The Devils Alternative book.’

I didn’t read any of his subsequent novels.

After nearly, thirty or so years, I stumbled upon “The Outsider – My Life in Intrigue” by Frederick Forsyth in Sunset Library, Chandler, Arizona. This book is, in fact, his own personal story – a compilation of his memoirs from childhood till writing the book. All his earlier novels are suspense crime thrillers. Many of them are inspired by the intrigues of his own personal life. This book is about those personal experiences.

Frederick became a pilot of the British Royal Air Force, when he was only nineteen. However, he couldn’t be a regular Air Force pilot. He became a correspondent for Daily Express, a British daily and then in Reuters. Even during his studies, he had developed sufficient skill in French, German, Spanish and Russian languages that helped him to get into the desks of overseas correspondents. By a stroke of luck (or ill-luck) he was posted to East Germany. He had escaped the wrath of an arms dealer in Hamburg, Germany. He had narrowly escaped being torn apart by the bullets from the machine guns from below, tearing through the small gap between his thighs as he was hitchhiking, lying down on the floor in a cargo flight during the horrendous Nigerian War. He had smuggled a package for the Firm (read: the British Secret Service Organization) from East Germany to West Germany in the middle of the night. He had landed in Guinea-Bissau, a West African country in the middle of a bloody coup. The Stasi, the State Security Service of the erstwhile East Germany had arrested him. He was saved from the turmoil in Ireland while living there for nearly five years, by some top leader of IRA. And many more perilous personal experiences, mind chilling to read about.

Frederick has a powerful story-telling talent and this book, though only a collection of several personal memoirs, reads as thrilling as his earlier thriller novels. I am happy reading his book after a long gap. He is currently aged more than seventy living in England. Many of his books have turned into successful movies too.

T.N.Neelakantan
www.tnneelakantan.com

.........................................................................................................
Do you feel interested in my blog?

Do you want to read about another book-review of mine?

Click the link below:




Friday, January 15, 2016

பகுதி 4 – வடகிழக்கு மானிலங்கள் – மலரும் நினைவுகள்

இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் பொதுவாக பதட்டமான ஒரு சூழ்னிலையே நிலவி வந்தது. நான் குவாஹாத்தி போய்ச் சேர்ந்த சில மாதங்களிலேயே பொதுத் தேர்தல்கள் நடந்தன. அதுவரை ஒரு புரட்சி இயக்கமாக செயல்பட்டு வந்த ‘ஆஸு’ (AASU என்ற மாணவர்களின் அமைப்பு தீவிரவாதத்தையும் பிரிவினை வாதத்தையும் கைவிட்டுவிட்டு பொதுத் தேர்தல்களில் ‘ஏ.ஜீ.பி’(AGP) என்ற அரசியல் கட்சியாக ஈடுபட்டது. அதுவரை ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் அரசாங்கத்தின் மீது மக்களுக்கு அவ்வளவு கோபம். ஏ.ஜீ.பி அசுர மெஜாரிட்டியுடன் பதவிக்கு வந்தது. ப்ரஃபுல்ல குமார் மொஹாந்தோ மிக இள வயதில் முதலமைச்சராக பதவியேற்றார். சட்டசபை முழுவதுமே இளைஞர்கள். நேற்றைய மாணவர்கள் இன்றைய அரசர்கள். மக்களின் எதிர்பார்ப்புகளும் மிக அதிகமாக இருந்தது.

வங்கியின் பயிற்சிப் பள்ளி

எங்கள் வங்கியின் அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் வங்கிப்பணியில் பயிற்சி கொடுக்க ஒரு வங்கிப் பயிற்சி பள்ளி திறக்கவேண்டியிருந்தது. அதுவரை அலுவலர்களை பயிற்சிக்கு கொல்கத்தாவுக்கே அனுப்ப வேண்டியிருந்தது. அதிக நாட்கள் பயணத்திலேயே வீணாகிப்போய்விடும். போக வர பயணச் செலவும், தங்குவதற்கானச் செலவும் அதிகம். எங்களிடமோ அலுவலர்களும் அதிகாரிகளும் கணக்காகவே இருந்தனர். பயிற்சிக்கு அனுப்பப்பட்ட நாட்களில் கிளைகளில் வேலையும் மந்தமாகிவிடும். அதனால் பயிற்சிக்கு அனுப்புவதற்கே கிளை மேலாளர்கள் தயங்கினர். அதனால் குவாஹாத்தியிலேயே ஒரு பயிற்சிப் பள்ளி திறப்பது மிகவும் இன்றியமையாததாக இருந்தது.

பயிற்ச்சிப் பள்ளி தொடங்குவதற்கு இடத்தைத் தேடினோம். குவாஹாத்தியில் ஜூ ரோடில் சரியான இடம் கிடைத்தது. அந்த இடத்தின் சொந்தக்காரர் சட்டசபை அலுவலகத்தில் செயலராக பணி புரிந்து வந்தார். 

திடீரென்று ஒரு யோசனை. பயிற்ச்சிப் பள்ளியை திறப்பதற்கு முதலமைச்சரை அழைத்தாலென்ன என்று.

ஆனால் முதலமைச்சரை எப்படி சந்திப்பது? அவரோ புதியவர். மிகவும் பிஸியாக இருப்பவர். காலை வேளையில் சென்றால் முதலமைச்சரை எளிதாக சந்திக்கலாம் என்று எங்கள் பயிற்சிப் பள்ளியின் இடத்துக்கு சொந்தக்காரர் கூறினார்.

எந்த விதமான முன்னேற்பாடும் இல்லாமல் போனோம். முதலமைச்சரின் வீட்டில் நுழைந்தோம். ஒரு செயலர் எங்களை உள்ளே அழைத்துச் சென்று அமர்த்தினார். ஒரு சில நிமிடங்களில் ப்ரஃபுல்ல குமார் மொஹந்தோ வரவேற்பரைக்குள் வந்தார். மிக எளிமையான, இளமையான தோற்றம். அவருடைய குறுந்தாடி மிகப் பிரபலம். அறிமுகப்படுத்திக்கொண்டு வந்த நோக்கத்தை எடுத்துக்கூறினேன். தன் செயலரிடம் எங்கள் முன்னரே கலந்தாலோசித்தார். உடனேயே தேதியையும் நேரத்தையும் கொடுத்தார். சட்டசபை சபாநாயகர் புலகேஷ் பருவா என்பவரையும் நாங்கள் அழைக்க இருப்பதாகக் கூறினோம். மிக்க மகிழ்ச்சி என்றார். அவர்கள் இருவரும் அப்பொழுது நல்ல நண்பர்களாக இருந்தனர். பின்னால், சட்டசபை சபாநாயகர் புலகேஷ் பருவாவையும் திறப்பு விழாவுக்கு தலைமை தாங்குவதற்கு அழைத்தோம். உடனேயே ஒப்புக்கொண்டார்.

எல்லா இடங்களிலும் நடப்பது போல், எங்கள் பள்ளிக்கு முதலமைச்சர் வருவதற்கு முதல் நாள் அவசர அவசரமாக தார்ச் சாலை போட்டனர். வெற்றிகரமாக எங்கள் வங்கியின் பயிற்ச்சிப் பள்ளி அசாமில் திறக்கப்பட்டது. திறப்பு விழாவுக்கு வங்கியின் மேலதிகாரிகளும் வந்திருந்தனர். வடகிழக்கு மானிலங்களில் பலம் பொருந்திய வங்கிகளாக இருந்த பாரத ஸ்டேட் வங்கி, யுனைடெட் வங்கி, யூ கோ வங்கிக்கு அடுத்த படியாக அசாமில் காலூன்றிய மற்ற வங்கிகளில் முதலாவதாக எங்களது வங்கியின் பயிற்சிப் பள்ளி அமைந்தது. அசாம் மக்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும், கிராமப்புற மக்களுக்கு விவசாயத்துக்கும் சிறு தொழிலுக்கும் அதிக கடன் வசதி கொடுக்கவேண்டும் என்று முதலமைச்சர் வலியுறித்தினார். அசாமில் பொதுவாக எல்லா இடங்களிலும் வங்காளிகளின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது. ஏனென்றால் அவர்கள்தான் அதிகம் படித்தவர்களாக இருந்தனர். தேயிலைத் தோட்டங்களில் கூட ஒரு சிலவற்றைத் தவிர பெரும்பாலான தோட்டங்கள் வங்காளத்திலிருந்து இடம் பெயர்ந்து வந்த மார்வாரி சமூகத்தினருக்கே சொந்தமாக இருந்தது. ப்ளைவுட் தொழிற்சாலைகளும் அப்படியே. அரசாங்க உத்யோகத்தில் பெரும்பாலும் வங்காளிகள்தான். வியாபாரம் வங்காளிகளின் கையிலும் மார்வாரி சமூகத்தினர் கையிலும்தான் இருந்தது. கூலி வேலை செய்தவர்கள் பெரும்பாலும் பீஹாரிகள். அசாமியர்கள் பெரும்பாலும் விவசாயிகளாகவும் ஏழைகளாகவும் இருந்தனர். அதனால் வங்காளிகளுக்கும் அசாமியர்களுக்கும் கடும் பனிப்போர் நிலவி வந்தது. தங்களது வாழ்வாதாரத்தை வங்காளிகள் பறித்துக்கொண்டு விட்டனர் என்றே பெரும்பாலான அசாமியர்கள் நம்பி வந்தனர்.

அதிர்ச்சி தந்த இன்னொரு நாள்

ஒரு நாள் காலை பத்தரை மணியிருக்கும் என்று நினைக்கிறேன். எனது அலுவலகம் குவாஹாத்தியில் பிரதான சாலையான ஜீ.என்.போர்டலாய் சாலையில் முதல் மாடியில் அமைந்திருந்தது. அதுதான் குவாஹாத்தியின் மௌண்ட் ரோடு. நாங்கள் எங்கள் அலுவலகத்தில் எங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தோம். சாலையில் மிதமான வாகனப் போக்குவரத்துதான் இருந்தது. அதனால் வாகனங்களின் சத்தம் அதிகமாக இல்லாமலிருந்தது.  

திடீரென்று வெடிச்சத்தம் கேட்டது போலிருந்தது. ஏதோ வாகனத்தின் டயர்தான் வெடித்துவிட்டது என்று நினைத்து நாங்கள் அதிகமாக அந்த சத்தத்தைப் பொருட்படுத்தவில்லை. ஆனால் அதைத் தொடர்ந்து பல வாகனங்கள் வேக வேகமான ‘சர், சர்’ என்ற சத்தத்துடன் போய்க்கொண்டிருந்தன. இன்னும் சற்று நேரத்தில் பல போலீஸ் வாகனங்கள், ஆம்புலன்சுகளின் இரைச்சல் எங்கள் அலுவலகம் முன்னே. என்னவோ ஏதோ என்று பதற்றத்தில் எங்கள் அலுவலகத்திலிருந்த பால்கனிக்கு விரைந்தோம்.

எங்கள் அலுவலகத்துக்கு நேரெதிரே யூ கோ வங்கியின் கிளை இருந்தது. அந்த வங்கியின் மேலாளரை ஒரு கொள்ளைக்காரக் கும்பல் சுட்டுத் தள்ளி வங்கியின் இரும்புப்பெட்டியிலிருந்து கணிசமான பணத்தையும் கொள்ளையடித்து நிமிடத்தில் ஓடிவிட்டனர்.  எல்லாம் கண்மூடிக் கண் திறப்பதற்குள் நடந்து முடிந்திருக்கிறது. வங்கியின் பல வாடிக்கையாளர்களும் மற்ற அலுவலர்களும் ஒன்றும் செய்யமுடியாமல் பார்த்துக்கொண்டிருந்திருக்கின்றனர்.

எங்களுக்கு ஒரே அதிர்ச்சி. பட்டப்பகலில் இப்படி ஒரு துணிச்சலான கொள்ளை. கொள்ளைக்காரர்கள் உள்ளே நுழைந்து மேலாளரிடம் துப்பாக்கியைக் காட்டியிருக்கிறார்கள். மேலாளர் அசையாமல் இருந்திருந்தால் அவரை கொள்ளைக்காரர்கள் விட்டுவைத்திருப்பார்களோ என்னவோ. அவர் பாதுகாப்பு எச்சரிக்கை மணியை அழுத்த முயற்சி செய்திருக்கிறார். சுட்டுவிட்டார்கள். வேறு யாருக்கும் பாதகம் ஏற்படவில்லை. சில லட்சம் ரூபாய் வங்கிக்கு நஷ்டம். மிகவும் சங்கடமாக இருந்தது. அடுத்த ஒன்றிரண்டு நாட்களில் வங்கிகளின் பாதுகாப்பு சம்பந்தமாக உயர் மட்ட கூட்டம் நடந்தது. வங்கிகளுக்கு பல கடுமையான உத்திரவுகளை காவல் துறையினர் பிறப்பித்தனர். 

அவற்றையெல்லாம் அமல்படுத்த நடைமுறையில் பல சிரமங்கள் இருந்தன.

இருந்தும்…

ஒரு சில மாதங்களிலேயே யுனைடெட் வங்கியின் முக்கிய கிளையில் இன்னொரு பட்டப்பகல் கொள்ளை. வங்கியிலிருந்து ரிசர்வ் வங்கிக்கு எடுத்து செல்வதற்காக பணத்தை வங்கியின் பாதுகாப்பு வண்டியில் ஏற்றிகொண்டிருந்தனர். துப்பாக்கியேந்திய வீரர் மேற்பார்வை செய்துகொண்டிருந்தார். திடீரென்று ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் தாக்கினர். ஒரு சில நிமிடங்களில் வண்டியில் ஏற்றப்பட்ட பல கோடி ரூபாய்கள் அடங்கிய பணப்பெட்டியுடன் கொள்ளையர்கள் மறைந்து விட்டனர். இரண்டு மூன்று நாட்கள் சல்லடை போட்டு அரித்ததில் ஒரு சிலர் கைது செய்யப்பட்டனர். தொலைந்த பணத்தில் ஒரு பகுதி மீட்கப்பட்டது.

வங்கிகளை குறி வைத்து இப்படி அடிக்கடி கொள்ளைகள் அங்கங்கே நடந்து வந்தன. எவ்வளவோ முயன்றும் எல்லா வங்கிகளிலுமே பாதுகாப்பு ஏற்பாடுகள் பொதுவாகக் குறைவாகவே இருந்தன. நிர்வாகிகளை அலுவலர்கள் குறை கூறினர். பாதுகாப்பு உணர்ச்சியில்லாமல் செயல்படுவதாக அலுவலர்களை நிர்வாகிகள் குறை கூறினர்.


பொதுவாக வடகிழக்கு மானிலங்கள் எல்லாவற்றிலுமே இதே கதைதான். 

                                                       .... இன்னும் முடியவில்லை

Sunday, January 10, 2016

நான் வசிக்கும் அக்ரஹாரம் தெருவில் ஒரு பிள்ளையார் கோவில் இருக்கிறது.......

நான் வசிக்கும் அக்ரஹாரம் தெருவில் ஒரு பிள்ளையார் கோவில் இருக்கிறது. கோவிலுக்கென்று வருமானம் எதுவும் கிடையாது. ஆனால், கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் இருக்கின்றன.ஊர்க்காரர்களுக்குச் சொந்தமாக இருந்த இந்தக் கோவிலை சில ஆண்டுகளுக்கு முன்பு ஏனோ அரசிடம் ஒப்படைத்து விட்டனர். சென்ற ஆண்டு தொடக்க காலம் வரை இரண்டு வேளையும் இந்தக் கோவிலில் பூஜை செய்து வந்த அர்ச்சகர் அரசிடமிருந்து தனக்கு மாத வருமானம் சரியாகக் கிடைப்பதில்லை என்றும், கோவிலுக்கு வரும் பக்தர்களிடமிருந்தும் தனக்கு சரியான வருமானம் இல்லை என்றும் காரணம் காட்டி தான் வேலையிலிருந்து நின்று கொள்வதாக அறிவித்துவிட்டார். தமிழ் நாடு அறநிலையத் துறையின் ஒரு வேளை பூஜைத்திட்டத்தின் கீழ் எங்கள் கோவில் அடங்குவதால் கோவிலை ஒரு வேளை மட்டும் திறந்தால் போதும் என்று அரசு அதிகாரிகளும் கூறி விட்டார்கள்.

அது முதல் அந்த அர்ச்சகர் காலை வேளை மட்டும் ஐந்து நிமிடத்துக்குக் கோவிலைத் திறந்து வைக்கிறார். மாலை  நேரத்தில் திறப்பதில்லை. மாலையில் திறந்து வைக்கச் சொன்னால் மின்சாரக் கட்டணம் கட்டுவதற்குக்கூட அவருக்கு பணம் அரசிடமிருந்து ஒழுங்காக வந்து சேர்வதில்லை என்கிறார். வெளி வேலைக்குப் போனால் தனக்கு அதிக வருமானம் கிடைப்பதாகக் கூறுகிறார். ஊர் மக்கள் எவ்வளவோ சமாதானப்படுத்தியும் அவர்களின் வாக்குறுதிகளை ஒரு சில முன் அனுபவங்களை காரணம் காட்டி நம்ப மறுக்கிறார். தனியாக மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை நான் அவருக்கு கொடுக்க முன் வந்தேன். என்னைப் போல் வேறு ஒன்றிரண்டு ஊர்க்கார்களும் கொடுக்கத் தயாராக இருப்பார்கள் என்றும் கூறினேன். அதற்கும் அந்த அர்ச்சகர் மறுத்து விட்டார். தெருவில் பலருக்கு வசதியிருந்தும் கோவிலை திறந்து வைப்பதில் அதிக ஈடுபாடு காட்டுவதில் என்ன காரணத்தினாலோ அவர்களுக்கு தயக்கம் இருக்கிறது. நானாக எதுவும் செய்ய முனைந்தால் ஊர்க்காரர்கள் அதிகமாக ஈடுபாடு எதுவும் காட்டுவதில்லை. அதை அவர்கள் விரும்புவதுமில்லை என்று பின்னால் கேள்விப்பட்டிருக்கிறேன்.

நான் ஒன்றும் அப்படி தினமும் கோவில் சென்று வழிபடும் தீவிர பழக்கம் கொண்டவனில்லை. இருந்தாலும், சிறு வயதில் அக்ரஹாரத்தில் வளர்ந்து வந்ததால் அந்த அக்ரஹார வாழ்க்கையின் நினைவுகள் இன்றும் நமது பழைய பழக்க வழக்கங்களை பின் பற்றுவர்கள் மத்தியில் எனக்கு ஒரு மன நிம்மதியைக் கொடுக்கிறது. அக்ரஹாரத்தில் நடக்கும் எல்லா விசேஷங்களுக்கும் என்னாலான உதவிகளை தாராளமாகச் செய்து வருகிறேன்.

மூடியிருக்கும் கோவில்களை பலர் திறக்க முயற்சி எடுக்கின்ற இந்த நேரத்தில் ஒழுங்காக தினமும் இரண்டு வேளை திறக்கப்பட்டு பூஜை நடந்து வந்த ஒரு சின்ன அக்ரஹாரக் கோவில் இன்று ஒரு வேளை மட்டும், அதுவும் ஒரு சில நிமிடங்களுக்கு மட்டுமே திறக்கப்படுவது மனதுக்கு மிகவும் நெருடலாக இருக்கிறது. தெருவில் பலர் என்னை விட வயதில் மூத்தவர்கள், அனுபவமுள்ளவர்கள். ஆனால், என்ன காரணத்தினாலோ ஒன்று சேர்ந்து முயற்சி எடுக்க மறுக்கிறார்கள். இவ்வளவுக்கும் அந்தத் தெருவில் வசிக்கும் பெரும்பாலானவர்கள் ஏதோ ஒரு விதத்தில் ஒருவருக்கொருவர் சொந்தக்காரர்கள் வேறு.

நான் அந்த ஊரையோ தெருவையோ சேர்ந்தவனில்லை என்பது ஒரு முக்கியமான விஷயம். நான் வெளியாள். வாடகை வீட்டில் குடியிருப்பவன். சென்னை பிடிக்கவில்லை என்பதாலும், கிராமப்புற ஊரில் ஏதேனும் ஒரு சமூக அறக் கட்டளை சேவையில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்ற விருப்பத்தால் இந்த ஊருக்கு எதேச்சையாக வந்தவன்.

இதுவும் இறைவனின் ஒரு திருவிளையாட்டுதானோ, என்னவோ! ஊர் மக்களுக்கு என்ன உணர்த்த நினைக்கிறான் என்று புரியவில்லை. காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.


Wednesday, January 06, 2016

"Hornet Flight" by Ken Follette

Just finished reading Ken Follett’s HORNET FLIGHT. (2002)

The story centers round the World War II, during 1941, the low point of the war. England throws wave after wave of RAF bombers across the English Channel, but somehow the Luftwaffe, the Nazi Germany’s Air Force is able to shoot them all down at will.

On a small Danish island across the North Sea, a bright eighteen-year-old boy with a talent for engineering, stumbles upon a secret German installation.

With England preparing itself for its largest aerial attack on Germany, they are looking frantically to find out the secret about Germany’s capability to guess England’s air attack in advance.

How the Danish teenager’s discovery is connected with the ultimate success of England’s war effort against Germany is the crux of the story.

When I started reading the book, initially I felt the story was dragging. However, as I kept reading the novel it began engrossing me all through, till the final page.

The story is a suspenseful depiction of what a teenager can accomplish despite all odds.

One appreciable feature about many English novels is that a lot of research goes into while writing them and this book is not an exception. (I had tried to emulate this practice while writing my novel: WHAT IF OUR DREAMS COMETRUE! I had traveled to several towns and villages along the banks of the River Tamirabarani, and I had read a number of books, reports, blogs, websites about the river and its plains, while writing this novel.) There are elaborate descriptions about the Hornet Moth plane of those years and about how the flight could be repaired and operated by someone who has sufficient inquisitiveness about the engineering aspects of an air-plane. I had continuously visualized every scene clearly as I kept reading the book.

The broad descriptions about Copenhagen, the capital of Denmark and its islands kindles in me an interest to visit places like Denmark, Sweden and Norway. During the earlier years, reading Dan Brown’s INFERNO spurted a sudden interest in me to visit Florence in Italy, and eventually, in the next few months during early 2013, I landed in Italy on my way from India to USA. I had a wonderful eight days sight-seeing trip inItaly hopping from Rome to Naples, to Florence, to Venice and back to Rome. Let me hope, I get to visit Denmark too, soon.


Overall, quite a captivating novel by Ken Follett.
******************************************************
You felt interested?

Do you want to read my books?
Lonely
What If Our Dreams Come True!

Look for them in www.pothi.com for print version
"What, If Our Dreams come True" is also available on www.amazon.com for kindle reading

My other works:
Short Stories for Young Readers - Book 1
Short Stories for Suceess for Young Readers - A New Lexicon Unfolded
Short Stories for Young Readers - For Personality Development - Book 1

Write to me for availability of my books: neelkant16@yahoo.com


Saturday, January 02, 2016

3-ஆம் பகுதி - வடகிழக்கு மானிலங்கள் – மலரும் நினைவுகள்

3-ஆம் பகுதி - வடகிழக்கு மானிலங்கள் – மலரும் நினைவுகள்

நான் வங்கியில் பணி புரிந்த 25 ஆண்டுகளில் மிகவும் ரசித்த பகுதி என்று சொல்லக்கூடியவற்றில் குவாஹாத்திக்கு முக்கிய பங்கு உண்டு. அங்கே பணி புரிந்த நாட்களில் பல சுவையான அனுபவங்கள். அதில் குறிப்பாக ஒன்றைப் பற்றி இங்கே கண்டிப்பாக கூற வேண்டும்.


வடகிழக்கு மானிலங்களில் விவசாயம் மிக முக்கியமான தொழில். நீர் வளம், நில வளம் மிக்க இடம் என்று ஏற்கெனவே கூறியிருந்தேன். ஆனால் விவசாயம் செய்வதற்கு பல தடங்கல்கள் என்றும் கூறியிருந்தேன். அவற்றில் மிக முக்கியமானது ப்ரம்மபுத்ராவில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுவது. விவசாய முறைகள் பழமையானவை. விவசாயிக்கு விளைபொருளுக்கான உரிய விலை கிடைக்காததால் தங்களுக்குத் தேவைக்கு மேல் மக்கள் அதிகம் அவர்கள் பாடுபடுவதில்லை. இடைத் தரகர்களே அதிகமாக பயன்பெற்றனர்.


வடகிழக்கு மானிலங்களின் விவசாயப் பொருட்களை சரியான முறையில் சந்தைக்கு கொண்டு வந்து விவசாயிக்கு விவசாயம் செய்வதன் பலன் நேரடியாகப் போய்ச் சேரவேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு மத்திய அரசாங்கத்தின் ஒரு நிறுவனம் NERAMAC செயல்பட்டு வந்தது.அதற்கு புதியதாக ஒரு தலைவர் நியமனம் செய்யப்பட்டிருந்தார். மிகவும் துடிப்பானவர். விவசாயிகளின் நலனில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். வங்கிக் கணக்கு தொடங்குவதில் எங்களுக்கு அவருடன் தொடர்பு ஏற்பட்டது. அவருடைய கருத்துக்கள் என்னை மிகவும் கவர்ந்தன.


சிட்ரோனலா எண்ணை பற்றி அவர் கூறிய தகவல் என்னை அதிர வைத்தது. சிட்ரோனலா புல்லிலிருந்து எண்ணை பிழிந்தெடுக்கப்படுகிறது. தேயிலைத் தோட்டங்களில் தேயிலை சீசன் முடிந்த பிறகும் அடுத்த சீசன் தொடங்குவதற்கு முன்பும் எலுமிச்சை புல், சிட்ரோனலா புல் போன்ற புல் வகைகள் ஒரு களையாக காடுபோல வளரும். இந்தப் புல்லை வெட்டியெடுத்து கரும்புச்சாறு பிழிந்தெடுக்கும் இயந்திரம் பொல ஒரு சிறிய இயந்திரத்தில் பிழிந்தெடுத்து எண்ணையை பிரித்தெடுக்கிறார்கள். மிகவும் பழமையான முறை. வயல்களிலிருந்து புல்லை வெட்டி எடுக்கவேண்டும். மிகக் கடினமான உடல் உழைப்பு தேவைப்படும். நிறைய வேலையாட்களும் கூலியாட்களும் தேவைப்படும். பெரும்பாலான கூலியாட்கள் பிஹாரிலிருந்து பிழைப்புக்கு அசாமுக்கு வந்தவர்கள். பெரிய நகரங்களில் மருந்து, சோப், சென்ட் போன்ற ஆடம்பர அழகுப்பொருட்களில் இந்த எண்ணை அதிகமாக உபயோகப்படுத்தப்படுகிறது. பெரிய நகர மார்க்கெட்டுகளில் கிலோவுக்கு 200-300-க்கு விற்று வந்தார்கள். ஆனால் அசாமிலோ அதற்கு விவசாயிக்கு கிடைத்த விலை ரூபாய் 20-30தான். பல இடைத்தரகர்கள் இந்த கூலி விவசாயிகளுக்கு ரூபாய் 5000 – 10000 என்று கடன் கொடுத்து வைத்து அவர்களை கொத்தடிமைகளாகவே நடத்தி வந்தார்கள்.


இந்த நிலையை மாற்றவேண்டும் என்று கருதினார் நெராமாக்கின் தலைவர். விவசாயிக்கு குறைந்தது 50-60 ரூபாய் கிலோவுக்கு கிடைக்குமாறு ஏற்பாடு செய்யவேண்டும் என்றார். ஆனால் அந்த ஏழை விவசாயிகள் இடைத் தரகர்களையே காலம் காலமாக அதிகமாக நம்பினர். புதிய இடைத்தரகர்களை – அது அரசாங்கமாகவே இருந்தாலும் கூட அவர்கள் நம்புவார்களா என்று தெரியவில்லை.


விவசாயிக்கு நியாயமான விலை கிடைக்கவேண்டும் என்ற முதல் குறிக்கோளுடன் ஒரு திட்டம் தீட்டினோம். விவசாயிகளுக்கு எங்களது வங்கி அவர்களது பழைய கடனை அடைப்பதற்கும் புதிய தேவைகளுக்கும் நேரடியாகக் கடன் வழங்கும். இடைத்தரகர்களின் கிடுக்குப்பிடியிலிருந்து விவசாயிகள் வெளிவர இது உதவும். இரண்டாவது எண்ணை கொள்முதல் செய்ய சிட்ரோனலா எண்ணை உற்பத்தி செய்யும் இடத்துக்கே நாம் சென்று விட வேண்டும். விவசாயிகளை பெரிய ஒரு நகரத்துக்கு எண்ணையைக் கொண்டு வந்து கொடு என்றால் வர மாட்டார்கள். வாரம் ஒரு முறையாவது இப்படி அவர்கள் இடத்துக்கே சென்று எண்ணையை கொள்முதல் செய்து கையோடு பணத்தையும் கொடுத்துவிட வேண்டும். கையோடு பணத்தையும் கொடுத்துவிடுவது மிகவும் முக்கியம். அப்பொழுதுதான் விவசாயிகள் நம்மை நம்புவார்கள். ஒவ்வொரு முறையும் எண்ணைக்காக கொடுக்கும் பணத்தில் ஒரு சிறிய பகுதியை அவர்களது வங்கிக் கடனை அடைப்பதற்கு பிடித்துக்கொள்ள வேண்டும். இதற்கு நேராமேக், வங்கி, விவசாயி மூன்று பேரும் ஒரு கூட்டு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். இதுதான் எங்கள் திட்டம்.


முதலில் திக்பாய் என்ற ஊரைத் தேர்ந்தெடுத்தோம். அந்த ஊருக்கு வெளியே உள்ள ஒரு சில கிராமங்களில் தண்டோரா போட்டு எங்கள் திட்டத்தை அறிவிக்க வைத்தோம். கிராம அதிகாரிகள் நன்கு ஒத்துழைத்தார்கள். அந்த கிராமத்துக்கு நாங்கள் கொள்முதல் செய்ய வரப்போகும் தேதியையும், ஒரு கிலோ எண்ணைக்கு ரூபாய் 60 கொடுப்போம் என்ற தகவலையும் முன்னறிவிக்க ஏற்பாடு செய்தோம்.


வங்கியும், நெராமேக் நிறுவனமும் கொள்முதலில் தலையிடப்போகிறது என்ற தகவல் கண்டிப்பாக இடைத்தரகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கவேண்டும். கொள்முதல் செய்வதற்கு நாங்கள் நிச்சயித்திருந்த நாளுக்கு ஒன்றிரண்டு நாட்கள் முன்னதாக எங்களுக்குத் தொலைபேசி மூலமாக மிரட்டல்கள் வந்தன. ஊரில் காலெடுத்து வைத்தால் கை, கால்கள் முறிக்கப்படும் என்று மிரட்டல்கள் விட்டார்கள். எனக்கு உள்ளூரக் கொஞ்சம் நடுக்கம்தான்.


நெராமேக் தலைவர் அசாம் டி.ஜி.பியிடம் பேசினார். நானும் பேசினேன். நம்மூர்காரர்தான் ஐ.ஜி.பியாக இருந்தார். எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுப்பதாக உறுதியளித்தனர்.


நிச்சயிக்கப்பட்ட நாளன்று ஒரு பெரிய போலீஸ் படையுடன், ஒரு ஜீப்பில் பெரிய பீப்பாய் ஒன்றை ஏற்றிக்கொண்டு, ஒரு பெட்டி நிறைய வங்கியிலிருந்து எடுக்கப்பட்ட கணிசமான பணத்தையும் வைத்துக்கொண்டு திக்பாயில் ஒரு கிராமத்துக்குள் நுழைந்தோம். அங்கங்கே சிட்ரோனலா எண்ணை பிழிவது நடந்து கொண்டிருந்தது. வழியில் கிராம மக்கள் வரிசையாக நின்று எங்கள் பரிவாரத்தை அதிசயத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.


கிராமத்தின்  நடுவில் ஒரு திறந்த கீத்துக்கொட்டகைக்குள் எங்கள் கடையைத் திறந்தோம். ஒலிப்பெருக்கியில் எங்கள் அறிவிப்பு தொடர்ந்து வந்துகொண்டிருந்தது. நெராமேக்கின் தலைவரும் எங்களில் ஒருவராக நின்று கொண்டிருந்தார்.


சிறிது நேரத்துக்கு யாருமே முன் வரவில்லை. எங்களுக்கெல்லாம் ஏமாற்றம். கிலோவுக்கு அறுபது ரூபாய் போதவில்லையோ என்றும் ஒரு சந்தேகம். நாங்கள் கொண்டுசென்ற பீப்பாய் காலியாக வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தது.


மெதுவாக ஒரு விவசாயி ஒன்றிரண்டு லிட்டர் எண்ணையை கொண்டுவந்து கொடுத்து கையோடு பணத்தையும் பெற்றுக்கொண்டார். அவர் முகத்தில் பெருமிதம். மகிழ்ச்சி. பிறகு இன்னொருவர் வந்தார். அப்புறம் இன்னொருவர்… ஒரு இரண்டு மணி நேரத்தில் சுமார் நூறு கிலோ எண்ணை கொள்முதலாகியது.


முதல் முயற்சி வெற்றி. அடுத்த நாள் எங்களுக்கு கிடைத்த செய்தி எங்களை இன்னும் அதிக வியப்பில் ஆழ்த்தியது. சிட்ரோனலா எண்ணையின் கொள்முதல் விலையை இடைத்தரகர்கள் எழுபது ரூபாக்கு ஏற்றியிருந்தனர்.


“இந்த திருப்பத்தைத்தான் நான் எதிர்பார்த்தேன். விவசாயிக்கு நியாயமான விலை கிடைக்கவேண்டும் என்பதுதான் எங்களது குறிக்கோள். இந்த வியாபாரத்தை நாமே நடத்த வேண்டும் என்பதில்லை,” என்று நெராமேக் தலைவர் கூறினார்.


இதே போல் டின்சுகியாவில் ஆரஞ்சு பழம், திரிபுராவில் தேங்காய், இஞ்சி, அன்னாசிப் பழம் இவற்றின் மார்க்கெட்டிங்கையையும் விரிவுபடுத்த நாங்கள் திட்டமிட்டோம். டின்சுகியாவில் தோட்டத்தில் ஆரஞ்சுப் பழத்தின் கொள்முதல் விலை 20-30 பைசா. அதே ஆரஞ்சு குவாஹாத்தியில் மார்க்கெட்டில் இரண்டு ரூபாய். திரிபுராவில் தேங்காய் தோப்பில் ஒரு தேங்காய்க்குக் கிடைப்பது ஐம்பது பைசா. மார்க்கெட்டிலோ இரண்டு, மூன்று ருபாய். இஞ்சியும் அப்படித்தான். அன்னாசி, பலாப்பழம் அடிமட்ட விலையில் கொட்டிக்கிடக்கும். திரிபுராவில் பழங்களைப் பதப்படுத்தி பழரசம், ஜாம் தயாரிப்பதற்கு நெராமேக்கின் தலைவர் திட்டம் தீட்டினார். தொழிற்சாலைக்கு தேர்ந்தெடுத்த இடத்தில் பயங்கரவாதிகள், ஊடுருவிகளின் தொந்தரவையும் மீறி துணிவோடு செயல்பட்டார். திரிபுராவின் அன்றைய முதலமைச்சர் நேரடியாகத் தலையிட்டு எல்லா வசதிகளையும் செய்துகொடுத்தார் என்று கேள்விப்பட்டேன்.


விவசாயிகளின் இடத்திலேயே வங்கியின் வேலைப்பாடுகளை வைத்துக்கொள்ள வேண்டுமானால், அன்றைய காலக்கட்டத்தில் ரிசர்வ் வங்கியின் அனுமதி தேவைப்பட்டது. மேலும் பல இடங்கள் பாதுகாப்பில்லாதவை. ரிசர்வ் வங்கியில் வரையறைக்குள் உட்பட்டு சில திட்டங்களைச் செயல்படுத்துவது என்பது இயலாதது என்பதால் நெராமேக்கின் எல்லா திட்டங்களிலும் எங்களால் ஈடுபடமுடியவில்லை. மேலும் எங்களுக்கு கிளைகள் குறைவாகவே இருந்தன. நல்ல எண்ணம் இருந்தாலும் செயல்பட முடியாத சூழ்னிலை.                                                                                                                                       

         …இன்னும் தொடரும்