Total Pageviews

Wednesday, May 14, 2014

The songs that touched me: என் மனதை உருக்கியப் பாடல்கள்

The songs in the list had made me cry every time I hear them. Some strange feelings of melancholy, longing, separation, loneliness had overwhelmed me every time I heard them. I even search for God through these songs. The song list is long. I shall add a song a day.

இந்தப் பட்டியலில் வரும் பாடல்கள் என்னை அழ வைத்திருக்கின்றன. என்னை அறியாத ஒரு சோகம் என்னை மூழ்கியிருக்கிறது. இந்தப் பாடல்களை கேட்கும் பொழுதெல்லாம் எதெற்காகவோ ஏங்கியிருக்கிறேன். ஒரு பிரிவு உணர்ச்சி என்னை ஆட்கொண்டிருக்கிறது. இறைவனைத் தேடியிருக்கிறேன். பட்டியல் பெரியது. அதனால், தினம் ஒரு பாடலாக சேர்த்துக்கொண்டிருக்கிறேன்.

mere naseeb mein aye dost tera pyar nahi 

Film: Do Raste
Music Director: Laxmikant Pyarelal
Singer: Kishore Kumar

Pyar deewana hota hai 

Film: Kati Patang
Music Director: R D Burman
Singer: Kishore Kumar

tu jahan jahan chalega mera saya

Film: Mera Saya
Music Director: Madan Mohan
Singer: Lata Mangeshkar

jo dil ne kah saka

Film: Bheegi Raat
Music Director: Roshan
Singer: Mohd Rafi

beeti na bitai raina

Film: Parichay
Music Director: R D Burman
Singers: Latha Mangeshkar and Bhupinder Singh

zindagi ke safar

Film: Aap ki kasam
Music Director: R D Burman
Singer: Kishore Kumar

kuch toh log kahenge amar prem

Film: Amar Prem
Music Director: R D Burman
Singer: Kishore Kumar

raina beeti jaye shaam na aaye

Film: Amar Prem
Music Director: R D Burman
Singer: Lata Mangeshkar

Jiya lage na

Film: Anand
Music Director: Salil Chaudhury
Singer: Lata Mangeshkar

na tum bewafa ho na hum bewafa hain

Film: Ek kali muskuraye
Music Director: Madan Mohan
Singer: Lata Mangeshkar

aja re mein tho kab se khadi intezar

Film: Madhumati
Music Director: Salil Chaudhury
Singer: Lata Mangeshkar

khilte hain gul yahan

Film: Sharmilee
Music Director: S D Burman
Singer: Lata Mangeshkar

piya bina piya bina

Film: Abhimaan
Music Director: S D Burman
Singer: Lata Mangeshkar

aap ke anurodh pe main ye geet

Film: Anurodh
Music Director: Laxmikant Pyarelal
Singer: Kishore Kumar

woh sham kuchh ajeeb thi

Film: Khamoshi
Music Director: Hemant Kumar
Singer: Kishore Kumar

yun hasraton ke daag mohabbat mein dho liye

Film: Adalat (1958)
Music Director: Madan Mohan
Singer: Lata Mangeshkar

Yeh anzoo mere dil ke

Film: Hamrahi (1963)
Music Director: Shankar Jaikishen
Singer: Mohd Rafi

teri aankhon ke siva duniya mein

Film: Chirag
Music Director: Madan Mohan
Singer: Mohd Rafi


Jeevan se bhari teri ankhen

Film: Safar
Music Director: Kalyanji Anandji
Singer: Kishore Kumar

Naino mein bhadra chaaye

Film: Mera Saya
Music Director: Madan Mohan
Singer: Lata Mangeshkar

chal akela chal akela 

Film: Sambandh
Music Director: O P Nayyar
Singer: Mukhesh


aise to na dheko

Film: Teen Deviyan
Music Director: S D Burman
Singer: Mohd Rafi


mujhe tum mil gaye humdum

Film: Love in Tokyou
Music Director: Shankar Jaikishen
Singer: Lata Mangeshkar


yeh mera prem patra padkar

Film: Sangam
Music Director: Shankar Jaikishen
Singer: Mohd Rafi



Dil todnewale tujhe dund raha hai

Film: Son of India (1962)
Music Director: Naushad
Singer: Lata Mangeshkar and Mohd. Rafi


door rehkar na karo baat

Film: Amanat
Music Director: Ravi
Singer: Mohd Rafi


jinhe hum bhoolna chahe wo aksar yaad aate


Film: Abroo
Music Director: Sonik Omi
Singer: Mukhesh


abhi na jao chhod kar

Film: Hum Dono
Music Director: Jai Dev
Singers: Mohd Rafi and Asha Bhonsle
Singer: Shreya Goshal

Tuesday, May 13, 2014

பெர்ஸனாலிடியை வளர்த்துக்கொள்வது எப்படி? பகுதி 3 : நமது அபிப்பிராயங்களைப் (BELIEFS) பற்றி

மாணவர் உலகம் என்ற பத்திரிகையில் வெளியிடப்பட்ட என்னுடைய கட்டுரைத் தொகுப்பின் பகுதி இது.


ரோஜாச் செடிகளில் முள்ளிருக்கிறது என்று நாம் குறைபட்டுக் கொள்ளலாம். அல்லது முட்புதர்களுக்கு நடுவேகூட ரோஜா மலர்கிறது என்று மகிழ்ந்து கொள்ளலாம்.” – ஆப்ரஹாம் லிங்கன்

இன்று நாம் சாதனையாளர்களாக கருதும் பலரும் கூட பல முறை வாழ்க்கையில் தோல்வியைத் தழுவியிருக்கிறார்கள்.

தாமஸ் ஆல்வா எடிசன் மின்சார விளக்கை கண்டுபிடிப்பதற்கு முன்பு ஆயிரக்கணக்கான முயற்சிகள் செய்து தோல்வியடைந்திருக்கிறார்..தன் தோல்விகளைப் பற்றி அவர் என்ன சொன்னார் தெரியுமா, “ஒரு மின்சார விளக்கு ஏன் வேலை செய்வதில்லை என்பதை பத்தாயிரம் வழிகளில் நான் உணர்ந்திருக்கிறேன்.” என்று.

வின்சென்ட் வா கோ என்பவர் ஒரு பிரபல டச்சு ஓவியர். அவர் வாழ்ந்த காலத்தில் அவரது ஓவியங்களில் ஒன்றை மட்டும்தான் அவரால் விற்க முடிந்தது. வெறுத்துப்போய் பல ஓவியங்களை தீயிலிட்டு எரித்து விட்டார். ஏமாற்றங்களால் விரக்தியடைந்து பாதிக்கப்பட்ட அவர் தன்னுடைய வாழ்க்கையையே விரைவில் முடித்துக்கொண்டார். ஆனால், அவரது மறைவுக்குப் பின்னே, அவரது ஓவியங்கள் மிகப் பிரபலமாயின. நான்கு ஓவியங்கள் நூறு மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (சுமார் ஐநூறு கோடி ரூபாய்க்கு) விலை போனது.

ஸ்டீஃபன் கிங் என்பவர் பிரபல திகில் கதைகள் எழுத்தாளர். அவரது முதல் கதை ‘கேரீ’யை முப்பது முறை பதிப்புக்கு அனுப்பி முப்பது முறையும் திருப்பிப் பெற்றதில் விரக்தியடைந்து அந்த கதையையே தூக்கி குப்பையில் விட்டெறிந்தார். ஆனால், அவரது மனைவி அந்த ஃபைலை எப்படியோ காப்பாற்றி 31-ஆவது முறையாக பதிப்புக்கு அனுப்பிவைத்தார். அதற்குப் பிறகு நடந்ததெல்லாம் சரித்திரம். அந்தக் கதைப் புத்தகம் முதல் பதிப்பிலேயே முப்பதினாயிரம் பிரதிகள் விற்பனையாயின. அவரது பல கதைப் புத்தகங்கள் கோடிக்கணக்கில் விற்கப்பட்டிருகின்றன.

‘ஹாரி பாட்டர்’ கதைகளை எழுதி இன்று கோடி கோடியாக சம்பாதித்துக் கொண்டிருக்கும் ஜே.கே. ரௌலிங் என்பவர் வெற்றியடைவதற்கு முன்னால் விவாகரத்து வாங்கிக்கொண்ட, அரசாங்கம் அளித்த பல நலத்திட்டங்களின் மூலமே வாழ்க்கையை ஓட்டிய ஒரு பெண்மணி. “என்னுடைய தோல்விகள் என்னை அதள பாதாளத்திற்கு எடுத்துச் சென்றன. அந்த அதளபாதாளம்தான் என் வாழ்க்கையின் வெற்றிக்கு ஒரு அடிக்கல்லாக பயன்பட்டது” என்று ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பேச அழைத்தபோது கூறினார்.

கஜனி முகம்மதை எடுத்துக்கொள்ளுங்கள். சோம்நாத் கோவில் மீது முப்பது முறை படையெடுத்து தோல்வியடைந்திருக்கிறார். அவரது முப்பத்தொன்றாம் முயற்சியே வெற்றியடைந்தது.

இப்படிப் பல சரித்திரங்கள்……

உங்களது வெற்றிகள் என்பது, உங்களது முயற்சிகளின் பலன்களை –வெற்றி தோல்விகளை  - நீங்கள் எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது.

வாழ்க்கை என்பது நீங்களாகவே உங்களுக்காகவே கட்டிக்கொள்கிற ஒரு வீடு. அதை எப்படி கட்டிக்கொள்கிறீர்கள் என்பது தான் உங்களது மகிழ்ச்சியைத் தீர்மானிக்கும். இன்டெர்நெட்டில் படித்த ஒரு கதை. ஐரோப்பாவில் ஒரு மரத்தச்சர். மிகத் திறமைசாலி. பல வருடங்கள் தன்னுடைய முதலாளிக்காக பல மர வீடுகளை கட்டிக்கொடுத்திருக்கிறார். வெகு வருடங்களாக வேலை பார்த்து அலுத்துப் போனதில் ஓய்வு பெற விரும்பி தன் முதலாளியிடம் தன் மனதை வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் முதலாளியும், ‘சரி, நீங்களும் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். ஆனால், ஓய்வெடுக்கும் முன்னே ஒரே ஒரு வீடு மட்டும் கட்டிக்கொடுத்துவிட்டு ஓய்வெடுத்துக்கொள். செலவைப் பற்றி கவலைப்படவேண்டாம்.” என்று கூறியிருக்கிறார். மரத்தச்சருக்கோ வெகு கோபம். ஆனால், முதலாளியின் உத்தரவை தட்டிப் பழக்கமில்லை. வேலையை ஒத்துக்கொண்டு, ஏனோதானோ என்று ஒரு மர வீட்டை ஒரு மாதிரியாக கட்டிமுடித்து சாவியை தன் முதலாளியிடம் கொண்டு கொடுக்கிறார். சாவியை வாங்கிக்கொண்ட அந்த முதலாளி,. “இந்த வீட்டை உனக்கு ஒரு வெகுமதியாய் கொடுப்பதற்காகவே உன்னை கட்டச் சொன்னேன். உனக்காக உள்ள வீட்டை உன்னைவிட வேறு யார் சிறப்பாக கட்ட முடியும்?”என்று கூறி வீட்டுச்சாவியை அந்த தச்சரிடமே கொடுத்து விடுகிறார். தச்சர் தன் தலையில் அடித்துக்கொள்கிறார். “அடடா, இந்த வீடு எனக்காகவே கட்டப்படுகிறது என்று எனக்குத் தெரியாமல் போய்விட்டதே. அப்படித் தெரிந்திருந்தால் இன்னும் எவ்வளவு அருமையாக பார்த்துப் பார்த்து கட்டியிருப்பேன்.” என்று தன்னை நொந்து கொள்கிறார்.

நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் இப்படித்தான். இது நம்முடைய வாழ்க்கை என்பதை உணராமல் யாருக்கெல்லாமோ வாழ்வதாக நினைத்துக்கொண்டு நமது வாழ்க்கையை வீணாக்கிக்கொண்டிருக்கிறோம்.

மீண்டும் சொல்கிறேன். உங்கள் வாழ்க்கையைப் பற்றி நீங்கள் என்ன அபிப்பிராயம் கொண்டிருக்கிறீர்கள். உங்களின் அந்த அபிப்பிராயம்தான் உங்கள் வாழ்க்கை. உங்களுடைய வாழ்க்கையில் ஒவ்வொரு கணத்திலும் உங்களுக்கு ஒரு சாய்ஸ் இருக்கிறது. நீங்கள் என்ன சாய்ஸ் தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள்? நீங்கள் தேர்ந்தெடுக்கும் சாய்ஸ்தான் உங்களது நாளைய தினத்தை தீர்மானிக்கப்போகிறது. வெற்றியடைவதையே உங்கள் சாய்ஸாக தேர்ந்தெடுங்கள். அது உங்கள் மனப்பான்மையைப் பொறுத்திருக்கிறது. உங்கள் பெர்ஸனாலிடியைப் பொறுத்திருக்கிறது.

அது சரி, உங்களைப் பற்றிய உங்களுடைய கருத்துக்கள் உங்களுக்கு எப்படித் தோன்ற ஆரம்பித்தது?

மிகவும் வருத்தமான விஷயம் என்னவென்றால், உங்களைப் பற்றி நீங்கள் கொண்டுள்ள அபிப்பிராயங்களுக்கு பெரும்பாலும் நீங்கள் பொறுப்பல்ல., உங்கள் பெற்றோர்களே முதற்காரணம்.  நான் இப்படிச் சொல்வதை பெற்றோர்கள் தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

புதியதாகப் பிறக்கும் குழந்தைக்கு ஆரம்பத்தில் அதனது சுமார் ஒரு வயது வரை ‘தான்’ என்று உணர்வு இருக்காது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அதாவது தான் வேறு மற்றவை வேறு என்று பகுத்து, பிரித்துப் பார்க்கும் மனப்பான்மை குழந்தைப் பருவத்தில் ஒரு வயது வரை பொதுவாக இருப்பதில்லை. அதுவரை எல்லாமே அதற்கு ஒன்றுதான். ஆனந்த நிலை. பிறகு படிப்படையாக, ‘இது என்னுடையது, இது என்னுடையதல்ல’ என்ற உணர்வு பிறக்கிறது. அந்தப் பருவத்தில், பெற்றோர்கள் அந்த குழந்தையை எப்படி நடத்துகிறார்கள், என்ன பேசுகிறார்கள், எப்படி வளர்க்கிறார்கள் என்பதைப் பொறுத்து, ஒவ்வொரு அனுபவத்திற்கும் அந்த குழந்தை ஒரு அபிப்பிராயத்தை ஏற்படுத்திக்கொள்கிறது. அந்த அனுபவம் தொடரும் பொழுது, அந்த அபிப்பிராயத்தை உறுதி செய்துகொள்கிறது அல்லது மாற்றிக்கொள்கிறது. தான் கேட்டது, பார்த்தது, அனுபவித்தது இவைகளின் மொத்தக் கலவையின் மேல் தான் உருவாக்கிக்கொண்ட அபிப்பிராயம்தான் சுய அபிப்பிராயம்.

“நீ ராணி மாதிரி வருவே” என்று அடிக்கடி பெற்றோர்களின் புகழ்ச்சியைக் கேட்டு வளரக்கூடிய குழந்தை தன்னை ஒரு ராணியாகவே பாவித்துக்கொள்ளும்.

“ஏன் பிறந்தாய் மகனே, ஏன் பிறந்தாயோ?” என்று புலம்பல்களைக் கேட்டு வளரும் குழந்தை தன்னை ஒரு பாரமாகவே நினைத்து வளரும்.

“நீ ஒரு நோஞ்சான இருக்கியே, இதெல்லாம் உனக்கு சரிப்பட்டு வராது” என்பதை அடிக்கடி கேட்டு வளரும் குழந்தை ஒரு தாழ்வு மனப்பான்மையுடனேயே, ‘இது என்னால் முடியாது’ என்ற எண்ணத்துடனேயே வளரும்.

‘இதெல்லாம் ஒண்ணுமேயில்லை. சும்மா முயற்சி பண்ணு.” என்று ஊக்கப்படுத்தப்பட்ட குழந்தை ஊக்குவித்தால் முயற்சி செய்து பார்க்கும்

இப்படி பல கருத்துக்களை பெற்றோர் நாம் சிறு குழந்தைகளாக இருக்கும்பொழுது கூறக்கேட்டிருப்போம். அந்த கருத்துக்களை பெரும்பாலும் பெற்றோர்கள் தன்னிச்சையோடில்லாமல் அன்பினால், குழந்தைகளின் மேல் உள்ள கரிசனத்தினால், அல்லது சில சமயம் தங்களுடைய விரக்தியினால் கூறியிருப்பார்கள். ஆனால், அந்த வார்த்தைகளுக்கு குழந்தைகள் தங்களுக்குள் ஒரு அபிப்பிராயத்தை ஏற்படுத்திக்கொள்ளக்கூடும், அந்த அபிப்பிராயம் நேர்மறையாகவோ, எதிர் மறையாகவோ அமையலாம். எதிர் மறையாக அமைந்தால் அது தன் குழந்தையை பாதிக்கக் கூடும் என்ற விழிப்புணர்ச்சி பெற்றோருக்கு இருந்தால் அவர்கள் குழந்தைகளிடம் மிகவும் கவனமாக பேசுவார்கள். கவனமாக வளர்ப்பார்கள். நேர்மறையான அனுபவங்களை ஏற்படுத்திக் கொடுப்பார்கள்.

ஆனால், பெற்றோர்களுக்கோ இன்று ஏகப்பட்ட பிரச்சினைகள். இதையெல்லாம் நுண்ணிப்பாக கவனிப்பதற்கு நேரமில்லை. அவர்கள் வளர்ந்த விதம் அப்படி. அவர்கள் சூழ்நிலை அப்படி.

அதன் பிறகு, வளரும் பருவத்தில் பெற்றோர்களைத் தவிர்த்து, உறவினர்கள், பெரியவர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள், தினம் தினம் நாம் சந்திக்கும் நபர்கள் இவர்களுடன் நாம் பழகும்போது நமக்கு ஏற்படும் அனுபவத்தையொட்டி நாம் தொடர்ந்து நமது அபிப்பிராயங்களை புதிது புதிதாக அமைத்துக்கொள்கிறோம், அல்லது மாற்றிக்கொள்கிறோம்.

இப்படி நமக்கு ஏற்பட்ட அனுபவங்களுக்கு நாம் கொடுத்துக்கொண்ட அர்த்தங்கள் தான் நமது அபிப்பிராயங்கள், நமது பெர்ஸனாலிடி, நமது வாழ்க்கயும் கூட.

இந்த அபிப்பிராயங்கள் நமது ஆழ்மனதில் போய் உட்கார்ந்து கொள்கின்றன. நம்மை ஆட்டிப் படைக்கின்றன. விழிப்பு நிலையில் நாம் கற்றுக்கொண்ட பாடங்களைவிட, நமது ஆழ்மனதில் ஏற்படுத்திக்கொண்ட காயங்கள், கவலைகள், அச்சங்கள், வருத்தங்கள் இவைகள்தான் நம்மை ஆட்சி செய்கின்றன.

அப்படியானால், நமது ஆழ்மனதில் நாம் ஏற்படுத்திக்கொண்ட இந்த கருத்துக்களை மாற்ற முடியாதா?

முடியும். அதற்கும் பயிற்சி இருக்கிறது. எனக்குத் தெரிந்ததை நான் சொல்லிக்கொடுக்கப் போகிறேன். கொஞ்சம் பொறுத்திருங்கள்.

                                                                    ………. தொடரும்

Monday, May 12, 2014

Desert Flowers and Plants

Arizona in the U.S.A is part of the desert. The temperatures here during the Summer (June-August) soars to as high as 45-47 degrees. Phoenix, the capital city of Arizona is well planned, beautifully landscaped, orderly built and developed as an awesome place. The people have taken considerable pains to develop greenery in the desert and at times, I wonder whether this is a desert at all. A few pictures taken by me a couple of days ago is a proof of what I am trying to say.

For more pictures:

Plants in Chandler, Arizona, U.S.A






Thursday, May 08, 2014

LONELY - A forthcoming novel by T.N.Neelakantan

                          
                          LONELY
                                                               A forthcoming Novel By T.N.Neelakantan

Introduction

Mani Shankar is a lonely man. He just gave a send off to Gowri, his wife, who was on her way to USA where their children live. She was one of the latest recipients of a Green Card from the U.S. Immigration Authorities and she couldn’t be away from the U.S.A for more than six months. Mani Shankar was confused about his children’s request to join them as a permanent resident of the U.S.A. He found life there meaningless and purposeless. He had seen enough of that place and his ideas about that land had undergone drastic changes over the decade, when he had been regularly visiting his children. But to help out their children during child delivery and post delivery care, they agreed that Gowri would seek the Green Card status initially, and maybe, he would follow suit later. But he changed his views. He felt his presence there was irrelevant. He liked the children and grandchildren, but to be doing only baby-sitting all the time was not his cup of tea. He had enjoyed freedom and recognition all through his career life and that was not available to him now anymore in his children’s places. He decided to stay back in India and it was agreed that Gowri would visit India once in six months.

Mani Shankar was in tears as his wife waved her hands from a distance, to proceed for the security check at the airport. He couldn’t run to her to have a final hug before she departed, as he had seen in the movies. Movies were make-beliefs without any touch of reality. He is alone now and he felt miserable.

‘What do I do now?’

An impulsive thought flashed his mind. ‘Why not I go to Joshimutt or somewhere and roam around the places?’

Mani Shankar had a great liking for the Himalayas and he was always lured by them. He didn’t even think further. He had his small shoulder bag that had virtually become part of him now and it contained all that he needed – his purse, his debit cards, cell phone, i-pad, his net-book, the Sony digital camera, and MP3 player. They were sufficient for him to spend his time with. He had a brain that constantly manufactured ideas and he never felt bored.

He boarded the suburban electric train at the Trishul station just in front of the airport at Chennai. He got down at the Park Station, walked across the empty road in the mid of night, and reached the Central Railway Station. He managed a reserved train ticket to New Delhi by a morning special train that ran only once in a week and it took longer hours of travel. He didn’t mind, rather he preferred the long train journey to air travel since that gave him plenty of time to ruminate and brood. He is a great brooder, too.

His train arrived at Hazrat Nizzamudin station in New Delhi, late into the evening the next day, after several hours of delay. He didn’t mind it again. What is there to lose? He found a room in a hotel, owned by a former friend, in the Pahar Ganj area opposite to the station. Some shops were still open and he did some shopping, buying a few essential things - two sets of pajama kurta, undergarments, a shaving kit, a backpack, a light shawl, a sweater, a torch light, and medicines for his diabetes. He would miss reading books, but that shouldn’t be a problem with e-books already downloaded to his net-book. He was now ready for his lonely next couple of months.

He was so preoccupied with his thoughts, planning and anticipating his solo sojourn to Joshimutt and he never knew when he eventually slept. The next morning he went to ISBT, Delhi and took a bus to Hardwar. The bus looked like a vintage showpiece and he thought times don’t change things in Uttar Pradesh. He went to one of the Ashrams on the river bank of the Ganges and sought stay there for the night. The next morning he located a bus that was leaving for Joshimutt and boarded it. The bus was another vintage model.
                                                                    *****
The remaining part of the story is about his stay in Joshimatt and the story of the people he met there, accidentally. There was the adolescent, innocent, lonely girl Sharmilee, a rape victim. There was Sister Beatrice, the nun and the head of a missionary orphanage. There was Somnath pundit, the lonely priest in an obscure remote temple. There was Narayana Panicker, the army man, who seemed to have lost all his contacts with his relatives and community. And there was the rich, doctor couple – Vikram and Sonia – from the far off Ajmere, who were still in search of their only lost child.
Everyone’s story is intriguing and they all get connected through Mani Shankar. Loneliness had a value for him. It was productive, albeit, very painful, too!
                                                                     *****

You like this, please let me know. Send in your comments.

 

Also look at:

               Short Stories for Young Readers – Book 1

              Short Stories for Success for Young Readers: A New Lexicon Unfolded

              What If Our Dreams Come True! An Uncommon Meeting with Lord Siva

Tuesday, May 06, 2014

My Italy Tour, March 2014: Final Part

எனது இத்தாலி பயணம்இறுதிப் பகுதி 6
நாள்: 9
எங்கள் இத்தாலி நாட்டுப் பயணத்தின் கடைசி நாள். காலை ஆறேகால் மணிக்கு வெனிஸிலிருந்து ரோமுக்கு ரயில் டிக்கெட் வாங்கியிருந்தோம். சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பாதுகாப்பான இடம்தான் என்பதை மீண்டும் மீண்டும் ஹோட்டல் வரவேற்பில் உறுதி செய்துகொண்ட பிறகு காலை ஐந்தரை மணிக்கு மென்மையான குளிருக்கூடே ரயில் நிலையத்துக்கு நடந்தோம். மெல்லிய பனிமூட்டம் இருட்டை அதிகப்படுத்தியிருந்தது. தெருவிளக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக மினிக்கிக் கொண்டிருந்தது. சிறிது தூரம் நடந்தால் ஒரு கேஃப்டேரியா திறந்திருந்தது. சுடச்சுட காஃபி கிடைத்தது. கையில் வாங்கிக்கொண்டு ரயில் நிலையம் வந்து சேர்ந்தோம்.

நாங்கள் பயணம் செய்த ரயில் FRECCIARGENTO என்ற வகுப்பைச் சேர்ந்தது. அதிக பட்சமாக 250 கிலோமீட்டர் வேகத்தில் எந்தவிதமான குலுக்கலுமில்லாமல் பறந்தது. நடுநடுவே பல ரயில்  நிலையங்களில் நிறுத்தம் இருந்தது. ஒன்பதரை மணிக்கு ரோம் வந்து சேர்ந்தது. ரயில் நிலையத்தின் வாசலிலேயே பஸ் நிறுத்தமும் கூட. ரயில் நிலையத்திலேயே ஒரு கடையில் பஸ் டிக்கட் வாங்கிக்கொண்டோம். ஹோட்டல் எதிரிலேயே இருந்த பஸ் நிறுத்தத்தில் இறங்கிக்கொண்டோம். ஹோட்டலின் வரவேற்பரையில் எங்கள் சாமான்களை விட்டுவிட்டு, ரோம்  நகரில் விட்டுப்போன இடங்களை சுற்றிப் பார்க்கக் கிளம்பினோம்.

ஹோட்டலின் பின் பக்கத்தில் ஒரு பத்து  நிமிடம் நடந்தால் மிக விஸ்தாரமான பியாசா நுவோனோ (PIAZZA NUONO) – பெரிய செவ்வக வடிவமான ஒரு கூடம். சுற்றுலாப் பயணிகள் சாரை சாரையாக கூடிக்கொண்டிருந்தனர். மத்தியில் நான்கு முக்கிய நதிகளின் நீரூற்று (FONTANA DEI QUATTRA FIUMI – Fountain of Four Rivers) 1651-ல் பெர்னினி என்ற பிரபல கட்டிடக் கலைஞரால் பத்தாவது இன்னொஸென்ட் போப்பின் அரண்மனக்கு எதிராக வடிவமைக்கப்பட்டது. ஆப்பிரிக்காவின் நைல், யூரோப்பின் டேன்யூப், இந்தியாவின் கங்கை மற்றும் தென் அமெரிக்காவின் பளாட்டா நதிக் கடவுள்களை குறிக்கும் இந்த நீருற்றை சுற்றி சுற்றுலாப் பயணிகளின் கூட்டம்.

 
 
அங்கங்கே கேளிக்கைக்காக மேஜிக் காட்டுபவர்கள். ஒருவர் அந்தரத்தில் யோகாவில் உட்கார்ந்திருந்தார். இன்னொருவரின் தலை கழுத்தைவிட்டு துண்டாக அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்தது. எப்படி இந்த மேஜிக்கை அவர்கள் செய்திருப்பார்கள் என்று இன்று வரை புரியவில்லை.

அங்கிருந்து இன்னொரு ஐந்து நிமிட தூரத்தில் மிகப் பிரபலமான பேந்தியன். (PANTHEON) எல்லாக் கடவுள்களுக்குமாக கட்டப்பட்ட இந்தக் கோவில் கி.மு 27 – கி.பி 14 காலங்களில் அகஸ்டஸ் என்ற மன்னரின் ஆணையில் முதலில் கட்டப்பட்டு, பிறகு கி.பி 126-ல் ஹேட்ரியான் பேரரசரால் மீண்டும் கட்டப்பட்டது. (இதே போன்ற ஒரு பேந்தியன் கோவிலை அமெரிக்காவில் டென்னிஸி மாநிலத்தின் தலைநகரமான  நேஷ்வில் (NASHVILLE) என்ற இடத்தில் பிரம்மாண்ட வடிவில் கட்டியிருக்கிறார்கள்)
வட்ட வடிவமான இந்தக் கோவிலின் முகப்பில் கிரானைட் கற்களாலான எட்டு தூண்கள் முன் வரிசையிலும், நான்கு நான்காக அதன் பின் பக்கத்தில் இன்னும் எட்டு தூண்களும் தாங்கிக்கொண்டிருக்கின்றன. 142 அடி உயரமுள்ள கான்க்ரீட்டினால் கட்டப்பட்ட வட்ட வடிவமான மேற்கூரையின் மத்தியில் வானம் தெரிகிறார் போல மாதிரி ஒரு வாசல். ஆயிரம் ஆண்டுகளாக இந்தக் கட்டிடம் மிடுக்கோடு இன்றும் நின்று கொண்டிருக்கிறது. இதைப் பார்த்தபின்பு மனதில் ஒரு வருத்தம். நமது தமிழ்நாட்டில் பல ஊர்களில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இன்னும் கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் பல கோவில்களைப் சுற்றிப்பார்ப்பதற்கு எத்தனை சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர் என்பதை நினைத்துப் பார்த்தேன். சுற்றுலாவுக்காக நாம் ஒன்றுமே செய்வதில்லையோ என்றுதான் தோன்றுகிறது, நமது பண்டைய கலாச்சாரத்தை, நாகரீகத்தை, கலைவளத்தை வெளிப்படுத்தும் பல விஷயங்களைப் பற்றி நாம் அதிகமாக தெரிந்துவைத்துக் கொள்வதுமில்லை, மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துவதுமில்லை. முக்கியமாக நமது வீட்டில் குழந்தைகளுக்குச் சொல்வதுமில்லை.  

பேந்தியனிலிருந்து நேராக இம்மானுவேல் நினைவு மண்டபத்துக்கு (இன்றைக்கு ஒரு போர் நினைவுச் சின்னமாகத் திகழ்கிறது) நடந்தோம். ஒரு அரை மணி நேர தூரம். பியாஸா வெனிஸியாவுக்கும் கேபிடோலின் குன்றுக்கும் நடுவே அமைந்திருக்கும் இந்த கட்டிடம் ஒன்றிணைக்கப்பட்ட இத்தாலியின் முதல் மன்னரான இரண்டாம் விக்டரின் நினைவாகக் கட்டப்பட்டது. முழுவதும் வெள்ளை சலவைக் கற்களால் கட்டப்பட்ட இந்த அரண்மனையின் முகப்பு மிகமிக பிரம்மாண்டமாக தூரத்திலிருந்தே தெரிகிறது. 440 அடி அகலம் 230 அடி உயரம். 1885-ல் ஜோஸஃப் சக்கோனி என்பவரால் வடிவமைக்கப்பட்டு 1925-ல் மிகச் சிறந்த இத்தாலிய நிபுணர்களால் கட்டி முடிக்கப்பட்டது. புராதன சின்னமான கேபிடோலின் குன்றின் பல இடங்களை இந்த மண்டபம் விழுங்கிவிட்டதாக குறை கூறுபவர்களும் நிறைய உண்டு.  


அதன் பிறகு, கேபிடோலின் ம்யூசியம் பார்ப்பதற்குச் சென்றோம். இன்னும் சற்று தூரம் நடை. மைக்கேல் ஏஞ்செலோவால் 1536-ல் வடிவமைக்கப்பட்ட இந்த சதுரத்தை கட்டி முடிப்பதற்கு சுமார் 400 ஆண்டுகள் எடுத்திருக்கிறது. கணக்கிலடங்காத அளவுக்கு பழங்காலத்து ரோமர்களின் சிலைகள், சிற்பங்கள், ஓவியங்கள், நகைகள், விலை மதிக்க முடியாத ஆபரணக் கற்களை இங்கே பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு சிலைக்கும், சிற்பத்திற்கும் அருகில் நின்று மணிக்கணக்காக நேரத்தை செலவிடலாம். எல்லாம் நேர்த்தியான சலவைக் கற்கள்.
சில சிற்பங்களின் அருகே செல்ல விடுவதில்லை. சில இடங்களில் ஃபோட்டோ எடுப்பதற்கும் அனுமதியில்லை. ஆனாலும், திருட்டுத்தனமாக எல்லோரும் ஃபோட்டோ எடுக்கிறார்கள். மார்க்கஸ் ஆரேலியஸ் (MARCUS AURELIUS) என்ற பேரரசரின் வெண்கலச் சிலை இங்கு ஒரு முக்கியமான சிலை. இதன் நகலை ம்யூசியத்தின் நுழைவில் வெட்டவெளியில் வைத்திருக்கிறார்கள். பழைய ரோமர்கள் காலத்தின் பல சிற்பங்களை மத விரோத காரணமாக மத்திய காலங்களில் அழித்து விட்டதாகப் படித்தேன்.  கிறிஸ்துவ மதத்தை ரோமர்களின் அங்கீகரிக்கப்பட்ட மதமாக ஏற்றுக்கொண்ட கான்ஸ்டன்டைன் என்ற மன்னரின் சிலை என்று நினைத்து, இந்த மார்க்கஸ் ஆரேலியஸின் சிலையை விட்டு வைத்திருக்கிறார்கள். சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலேயே இந்த ம்யூசியத்துக்குள்ளே நடந்து கால்கள் கெஞ்சின.

சிறிது நேரம் அங்கங்கே உட்கார்ந்து ஓய்வெடுத்துக்கொண்டு மீண்டும் ஹோட்டலுக்கு நடந்தோம். நான் ஏற்கெனவே சொன்ன மாதிரி ரோம் நகரை மட்டும் பார்ப்பதற்கு ஒரு வாரத்துக்கு மேலேயே பிடிக்கும். ஒரு சில முக்கியமான இடங்களைப் பார்க்க முடியவில்லை.

ஸ்பெயின் படிக்கட்டுகள் (SPANISH STEPS)

ஸிஸ்டைன் சேப்பல் (SISTINE CHAPEL)

பியாஸா டெல் போப்போலோ (PIAZA DEL POPPOLO)

பியாஸா டெல் ரிபப்ளிக்கா (PIAZA DEL REPUBLICA) (பஸ்ஸில் போகும் பொழுது பார்த்ததுதான்)
போர்கீஸ் வில்லா (VILLA BORGHESE AND BORGHESE GARDEN)

புனித ஏஞ்செலோவின் கோட்டை (CASTLE SANT ANGELO)
பல பழமையான கிறிஸ்துவக் கோவில்கள் (BASCILLICA)

முடிந்தால் இன்னொரு முறை இத்தாலிக்கு வரலாம்தான். பத்தாவது நாள் மதியம் பன்னிரண்டு மணிக்கு எங்களுக்கு லண்டன் வழியாக சிகாகோ நகர் செல்வதற்கு விமான டிக்கெட் இருந்தது. நிறைய பணம் செலவழித்து இத்தாலியை ஒரளவு பார்த்து முடித்த திருப்தியோடு விமானம் ஏறினோம்.
முடிவுரை

ஊர் ஊராகச் சுற்றுவதில் எனக்கு மிகவும் விருப்பமுண்டு. இந்தியாவில் என் வேலை நிமித்தமாக பல இடங்களுக்கு மாற்றப்பட்டு ஊர் சுற்றியிருக்கிறேன். இந்தியாவில் பார்க்காத இடங்கள் மிகக் குறைவு. வெளிநாடுகளில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, சுவிட்சர்லாந்து, இப்பொழுது இத்தாலி பார்த்திருக்கிறேன். இன்னும் பல இடங்களுக்கு போக வேண்டும் என்ற ஆசை இருந்துகொண்டே இருக்கிறது. பல இடங்களைப் போய் பார்ப்பதற்கு எனக்கு வசதி ஏற்படுத்திக்கொடுத்த இறைவனுக்கு மிக்க நன்றி. இன்னும் பல இடங்களை தொடர்ந்து பார்ப்பதற்கான ஆரோக்கியத்தையும் வசதியையும் கொடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. எல்லா பெருமையும் இறைவன் ஒருவனுக்கே.

இந்தத் தொடரை முடிப்பதற்கு முன், ஒரு சிறிய குறிப்பு: நான் ஏற்கெனவே சென்று வந்த YELLOW STONE NATIONAL FORESTS/GRAND TITON NATIONAL FORESTS, ALASKA, SWITZERLAND இடங்களைப் பற்றி ஆங்கிலத்தில் என்னுடைய BLOG-ல் எழுதியிருக்கிறேன். வெகு சிலர் மட்டுமே படித்திருக்கிறார்கள். ஆனால், இத்தாலியைப் பற்றி நான் தமிழில் எழுதியதை உலகில் பல இடங்களிலிருந்து, முக்கியமாக அமெரிக்கா, யூரோப், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவிலிருந்து மிக அதிக மக்கள் படித்திருக்கிறார்கள். ஆங்கிலத்தில் எழுதினால் மக்கள் படிப்பதில்லையோ என்று தோன்றுகிறது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று எனக்குச் சொன்னால் எதிர்காலத்தில் எழுதுவதற்கு ஊக்கமாக இருக்கும். கண்டிப்பாக உங்களுடைய கருத்தை எதிர்பார்க்கிறேன்.

இப்படிக்கு

டீ.என்.நீலகண்டன்
www.tnneelakantan.com