Total Pageviews

Monday, December 12, 2016

எனக்கு நேர்ந்த ‘சத்திய சோதனை’

எனக்கு நேர்ந்தசத்திய சோதனை

முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் மறைந்து விட்டார்கள் என்ற சோகச் செய்தியைக் கேட்டு ஸ்தம்பித்திருந்த செவ்வாய்க் கிழமைக்கு மறு நாள் (அதாவது புதன் கிழமை 07.12.16) தமிழகத்தின் இயல்பு வாழ்க்கை காலையிலேயே திரும்பிவிட்டது. ஒரு முறைகான்ஸல்செய்து மீண்டும்புக்செய்யப்பட்டபஸ் டிக்கெட்என்னிடம் தயாராக இருந்ததால் அன்று மாலையே சென்னைக்கு கிளம்பிவிட்டோம்.

சென்னையிலிருந்து அமெரிக்கா செல்ல இருந்ததால் எங்களிடம் நான்கு பெரிய பெட்டிகளும் இரண்டு சிறிய ட்ராலிகளும், தோளில் போட்டுக்கொள்ள இரண்டு பேக் பேக்குகளும் (Back Bag) இருந்தன. என்ன செய்வது? ஒவ்வொரு முறை அமெரிக்கா செல்லும் பொழுதும்இந்த முறையாவது ஓரு சிறிய ட்ராலிக்கு மேல் எதையும் எடுத்துச் செல்லக்கூடாது’ என்ற சபதம் தூள்தூளாகிவிடுகிறது. ‘ஏர்லைன்ஸ் கம்பெனியில்’ எவ்வளவு லக்கேஜ் அலவன்ஸ் கொடுக்கிறார்களோ அதை முழுமையாக ஒவ்வொரு முறையும் பயன்படுத்திக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம்.

எங்களுடைய நான்கு பெட்டிகளுடன் தனியார் பஸ் நிற்கும் இடத்துக்குப் போனால் பஸ்ஸின் உதவியாளர் பையன்ட்ரங்க்கை’ திறந்து கொடுத்து ம்ம்ம்ஏத்துங்க,’ என்று ஆட்டோக்காரரிடம்ஆர்டர்செய்தான். ஆட்டோக்காரர் அந்தப் பையனை விட வயதில் மிகவும் மூத்தவர். அதைப் பற்றி  அந்தப் பையன் கண்டுகொள்ளவேயில்லை. கொஞ்சம் சிரமப்பட்டு ஆட்டோக்காரர் சாமான்களை ஏற்றிவிட்டார். சாமான்களை ஏற்றுவது தன் வேலையில்லை என்பது போலத்தான் அந்த பையன்  நடந்து கொண்டான் என்று தோன்றியது. எனக்கு உள்ளுக்குள் கோபம்ஆனால், காட்டிக்கொள்ளவில்லை. ஆட்டோக்காரருக்கு வழக்கமாக கொடுப்பதற்கு மேலேயே பணம் கொடுத்து நன்றி கூறி திருப்பி அனுப்பினேன்.

மறு நாள் காலையில் சென்னையில் உதயம் தியேட்டர் அருகில் இறங்கிக் கொண்டோம். என்ன தோன்றியதோ தெரியவில்லை. பஸ்ஸின் அந்த உதவியாளர் பையன் சாமான்களை இறக்கிக் கொடுத்து விட்டான். இறக்கிக் கொடுத்ததற்கு நான் கொடுத்த பணத்தையும் வாங்கிக் கொண்டான்.

நடு ரோட்டில் விடப்பட்டு விட்ட அந்த நான்கு பெட்டிகளையும் ஒரு மாதிரியாக ரோட்டோரத்துக்கு இழுத்துக்கொண்டு வந்து விட்டேன். பின் ஒருஓலா டாக்சிக்கு’ புக் செய்து கொண்டேன்.

தெரியாமல் தவறுதலாகஎஸ்.யூ.வி’க்கு பதிலாகப்ரைம் செடனைபுக் செய்துவிட்டேன். புதிய டெக்னாலஜியை அடிக்கடி பயன்படுத்திக் கொண்டாலும் இன்னும் அதனுடன்  போராட்டம்தான். சின்னச் சின்னத் தவறுகள் நம்மை பிரச்சினையில் மாட்டிவிடுகின்றன.

ஓலா வண்டியோட்டி நாங்கள் நின்று கொண்டிருந்த இடத்துக்கு சற்றுத் தள்ளியே தன் வண்டியை நிறுத்தினார். நான்கு பெட்டிகளையும் அவருடைய இடத்துக்கு இழுத்துக்கொண்டு வரச் சொன்னார்

பெரிய பெட்டிகளைப் பார்த்ததுமேஇவ்வளவு லக்கேஜை இந்த வண்டியில் ஏற்றுவதற்கு அனுமதி கிடையாதே?’ என்றார்.

சரி, காலையிலேயே தகராறு செய்வதற்குத் தயாராகி விட்டார்என்று தோன்றியது.  

வருவதற்கு இஷ்டம் இருக்கிறதா, இல்லையாஅல்லது நான் வேறு வண்டி புக் செய்துகொள்ளட்டுமா?’ என்று கேட்ட பின்னர்சரி, ஓரு நூறு ரூபாய் எக்ஸ்ட்ரா கொடுங்க, ஏத்திடலாம்என்றார்.

அந்த நூறு ரூபாய்க்காகத்தானா தகராறு? சரி, கொடுக்கிறேன். வண்டியில் சாமானை ஏத்துங்க என்றேன். அவருக்கு சுருக்கென்று இருந்திருக்க வேண்டும்.

வேண்டா வெறுப்பாக ஒன்றிரண்டு பெட்டிகளை வண்டிக்குள் ஏற்றியவாறு  ‘நீங்களும் ஒன்றிரண்டு பெட்டிகளை  ஏத்துங்க. ஆளுக்கொரு பெட்டியாக சீக்கிரமாக ஏற்றிடலாம்,’ என்றார்.
               
ஏம்பா, உன்னைப் போல இரண்டு மடங்கு வயதானவன் நான். வயதானவுக்குரிய மரியாதையைக் கூட உனக்குக் கொடுக்கத் தெரியலையே,’ என்றேன்.  (மரியாதையை நாம் சம்பாதித்துக்கொள்ள வேண்டும், எதிர்பார்க்கக்கூடாது என்று நூறாவது தடவையாக கற்றுக்கொண்டேன்.)

ஒத்துழைக்க விருப்பமில்லாத அவருடைய மனப்பான்மை புரிந்தது. ‘சரி, இறங்கும் பொழுதும் இன்றைக்கு இவரோடு போராட்டம்தான்’  என்று தோன்றியது.

வீடு வந்தவுடன் தன்னுடைய இருக்கையிலிருந்து அவர் நகரவில்லை. சாமான்களை கீழே இறக்குவதற்கு அவர் உதவி செய்யத் தயாராக இல்லை என்பது புரிந்தது. இருந்தும் அவரிடம்சாமானை இறக்கிக் கொடுங்கஎன்று கேட்டேன்.

நீங்களே இறக்கிக்கொள்ளுங்க, எனக்கு என்ரெக்கார்ட்’ எல்லாம் எழுத வேண்டியிருக்கிறதுஎன்று சொல்லி அவர் பாட்டுக்கு ஏதோ தன்னுடைய நோட்டுப் புத்தகத்தில் எதையோ எழுதியவாறேபணம் கொடுங்கஎன்றார்  


எனக்கும் அந்த நேரத்தில் கோபம் வந்ததால், ‘சரி, மீட்டருக்குள்ள பணத்தை மட்டுமே நான் கொடுப்பேன்லக்கேஜுக்கான ஒத்துக்கொண்ட பணத்தை  கொடுக்கவேண்டுமென்றால்  நீங்கள் எனக்கு ரசிது கொடுக்க வேண்டும்என்று சொல்லியவாறு நானே அந்தப் பெரிய பெட்டிகளை வண்டியிலிருந்து மூச்சைப் பிடித்துக்கொண்டு மடமடவென்று இறக்கி விட்டேன்.

பின்பு, மீட்டரில் காட்டிய பணத்தை மட்டும் அவரிடம் கொடுத்தேன். வாங்க மறுத்தார்.  லக்கேஜுக்கான பணத்தை கொடுப்பதற்கு மறுத்து விட்டேன். தகராறு செய்தார். ‘லக்கேஜுக்கான பணம் நான் கொடுக்க வேண்டுமென்றால் ஒன்று நீங்கள் எனக்கு அதை ஏற்றி இறக்க உதவி செய்திருக்கவேண்டும் அல்லது அதற்கான ரசீது கொடுக்க வேண்டும். இரண்டு இல்லாததால்  அந்த அதிகப் பணத்தை கொடுக்க முடியாது,’ என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டேன். அவர் குரல் ஏறியது அவருடைய வார்த்தைகளும் தடித்தன.

அந்த வழியே சென்று கொண்டிருந்த இன்னொரு வழிப்போக்கர் என்னிடம், ‘சார், சாமானை வீட்டுக்குள் எடுத்துச்சென்று விடுங்கள், நான் அந்த ஓட்டியிடம் பேசிக்கொள்கிறேன்.  நான் யாரென்று அவருக்குத் தெரியாது. கவலைப்படாமல் உள்ளே போங்கள்,’ என்று சொன்னார்.

ஓட்டி உரத்த குரலில் இன்னும் கொஞ்சம் கத்தினார். ‘போலீசைக் கூப்பிட்டுவிடலாம்என்று எனக்குத் தோன்றியது. ஆனால், அந்த வழிப்போக்கர் மீண்டும் என்னை உள்ளே போகச் சொன்னதால் நான் சாமான்களைத் தூக்கிக்கொண்டு உள்ளே வந்துவிட்டேன். அடுத்த ஒன்றிரண்டு நிமிடங்களில் வண்டியை எடுத்துக்கொண்டு அந்த ஓட்டி போய்விட்டார்.

சென்னையில் இப்படியும் ஓட்டிகள் இருக்கிறார்கள் என்பதை மீண்டும் புரிந்துகொண்டேன். முன்பு ஆட்டோக்காரர்களுடன் போராட்டமாக இருந்தது. இப்பொழுது ஓலா டாக்சி ஓட்டியுடனுமா என்று வெறுப்பு.

இருந்தும், நான் அவருக்கு கொடுப்பதாகச் சொன்ன நூறு ரூபாயைத் தர மறுத்தது சரியில்லையோ என்று ஒரு குற்ற உணர்வும் எனக்கு ஒரு சில நிமிடங்களுக்கு நீடித்தது.
               
அதே   நேரத்தில்நான் இருப்பது கலியுகம். நான் ஒன்றும் ஞானியில்லை. எல்லா உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்தத் தெரியாத ஒரு சராசரி மனிதன். ப்ராக்டிக்கலாக நடந்துகொள்ள வேண்டும். அராஜகத்துக்கு பணிந்தால் இது போலத்தான் அந்த ஓட்டி எல்லோருடனும் நடந்துகொள்வார் என்றும் எனக்குத் தோன்றியதால் என்னுடைய நடத்தையை அந்த ஆண்டவனுக்கே அர்ப்பணித்து விட்டு மன நிம்மதியை நாடிக்கொண்டேன்.

அன்று இரவு விமான நிலையத்துக்கு வருவதற்கும் வேறொருஓலாஎஸ்.யூ.வியை இந்த முறை சரியாகபுக்’ செய்துகொண்டேன். ‘புக்’ செய்தபடி சரியாக இரவு 11.45க்கு வந்த அந்த ஓட்டி காலையில் சந்தித்த ஓட்டிக்கு முற்றிலும் மாறுபட்டவராக இருந்தார். அவரே எல்லா சாமான்களையும் வண்டியில் ஏற்றி இறக்கிக் கொடுத்தார். விமான நிலையத்தில் இறங்கிக் கொண்டவுடன் மீட்டருக்கு மேலேயே அவருக்குத் தாராளமாகப் பணத்தைக் கொடுத்து கொஞ்சம் மிச்சமிருந்த குற்ற உணர்ச்சிக்குப் பரிகாரம் தேடிக்கொண்டேன்.

மனிதர்கள் பலவிதம்.  நான் செய்தது சரியா, தவறாநீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?



No comments:

Post a Comment